Advertisment

Vijay TV Serial; அஞ்சலி வளைகாப்பில் அடுத்த பஞ்சாயத்து?… மருமகளுக்கு பயப்படும் மாமியார்

Vijay TV barathikannamma serial today episode lakshmi questions kannamma: கண்ணம்மாவிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கும் லட்சுமி, அஞ்சலி வளைகாப்புக்கு கண்ணம்மாவை அழைக்கும் பாக்கியா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; அஞ்சலி வளைகாப்பில் அடுத்த பஞ்சாயத்து?… மருமகளுக்கு பயப்படும் மாமியார்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

எல்லோரும் என்னை ஏமாத்திட்டிங்க என வருத்தப்படும் பாரதி, நீங்க எல்லாம் நம்பிக்கை துரோகி என கோபப்படுகிறான். இதைக்கேட்டு சௌந்தர்யாவும் வேணுவும் அதிர்ச்சியாகிறார்கள். எல்லாரும் என்னை தனிமைப் படுத்திட்டீங்க என வருத்தப்படுகிறான் பாரதி. ஒரு நாள் என்னை புரிஞ்சிப்பிங்க என சௌந்தர்யாவின் கைகளைப் பிடித்து அழுகிறான் பாரதி.

publive-image

அடுத்து கண்ணம்மா, பாரதி லட்சுமி மேல் கோபப்படாததை நினைத்து நிம்மதி அடைகிறாள். அப்போது லட்சுமி, ஏன் என்ன அங்க விட்டுட்டு வந்தீங்க என கேட்க, டாக்டர்கிட்ட மாத்தி சொல்லிருக்கோம் அதான் என்கிறாள். உடனே லட்சுமி, நாம் பொய் சொல்லிருக்கோம், என்னை ஏன் பொய் சொல்ல வச்சீங்க என கேட்க, சூழ்நிலை அப்படி என்று சமாளிக்கிறாள் கண்ணம்மா. பின்னர் லட்சுமி, டாக்டர் அங்கிள் என்கிட்ட உன் அப்பா யாரு, எங்க இருக்காருனு அடிக்கடி கேட்டாரு என்கிறாள். மேலும், எனக்கு அப்பா இருக்காரா, நிஜமாவே அவர் துபாயில் இருக்காரா, இல்லை பொய் சொல்றியா என லட்சுமி கேட்கிறாள். கண்ணம்மா அமைதியாக இருப்பதைப் பார்த்து ஏன் என்கிட்ட மறைக்கிற சொல்லு என லட்சுமி கேட்க, அப்படியெல்லாம் பேசக்கூடாது என்கிறாள் கண்ணம்மா.

publive-image

உடனே லட்சுமி, டாக்டர் அங்கிள் தான் என்னை படிக்க வைக்கிறாரு, எனக்கு உடம்பு சரியில்லனா பார்த்துக்கிறாரு, எதுக்குமே என்னோட அப்பா வரல ஏன் என கேட்க, அதிர்ச்சியாகிறாள் கண்ணம்மா. பின்னர் கண்ணம்மா அழுவதைப் பார்த்து, எல்லார்க்கிட்டேயும் நல்ல பேசுற டாக்டர் அங்கிள், உன்கிட்ட மட்டும் ஏன் கோபப்படுறார் என கேட்கிறாள் லட்சுமி. மேலும் அந்த வீட்டில் எல்லோரும் என்னை ஹேமாவ பார்த்துக்கிற மாதிரி பார்த்துக்கிறாங்க, ஒருத்தர் வந்து நான் தான் உன்னோட தாத்தானு சொல்றாரு, அவரு யாரு எனவும், டாக்டர் அங்கிள் ஏன் அவரு வீட்டுக்கு கூட்டிட்டு போனாரா? டாக்டர் அங்கிள் முன்னாடி என்னை இனி அம்மானு கூப்பிட சொன்னியே அது ஏன், அதுக்கு முன்னாடி கூப்பிட்டா என்ன ஆகும் என அடுக்கடுக்காக கேள்வி கேட்கிறாள் லட்சுமி. இதைக்கேட்டு கோபப்படும் கண்ணம்மா, என் தலைவிதி அது, ஸ்கூல் சமைக்குறவுங்க பொண்ணுனு சொன்னா நல்லா இருக்காதுனு, பொய் சொன்னேன் என்று சொல்ல, இனிமேல் கேட்கமாட்டேன், என சாரி கேட்கிறாள் லட்சுமி.  

publive-image

அடுத்து, பாரதி என்ன செய்யப்போறான் என கவலைப்படும் சௌந்தர்யாவிடம், கொஞ்ச நாளில் சரியாகிடுவான் என்கிறார் வேணு. மேலும், அவன் நல்லதுக்காகத் தானே இதெல்லாம் செய்யுறோம், புரிஞ்சுக்குவான் என சமாதானம் செய்கிறார். அப்போது சௌந்தர்யா அஞ்சலி வளைகாப்புக்கு பாரதி வருவானா என கேட்க, வரவைக்கணும் என்கிறார் வேணு. பின்னர் சௌந்தர்யா, கண்ணம்மா இரட்டை குழந்தைங்க பிரச்சனை பத்தி இப்ப கேட்கல, கொஞ்சம் நிம்மதியா இருக்கு என சொல்ல, கண்டிப்பா கண்ணம்மா கேட்பாள் என்கிறார். ஆனா அஞ்சலி வளைகாப்பில் கேட்டா என்ன செய்யுறது என யோசிக்கிறாள் சௌந்தர்யா.

publive-image

அடுத்து, பாரதி கேட்ட கேள்விகளை நினைத்து, குழம்பித் தவிக்கிறாள் கண்ணம்மா. அப்போது அங்கு பாக்கியாவும் சண்முகமும் அங்கு வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் சந்தோஷப்படும் கண்ணம்மா, பாக்கியாவை உள்ளே கூப்பிடுகிறாள். பாக்கியா தயங்கி நிற்க, உள்ளே வாங்க என்கிறாள் கண்ணம்மா. அப்போது கண்ணம்மா கஷ்டப்பட்டு உழைச்சு சொந்தக் காலில் நிற்பதாக பெருமையாக சொல்கிறாள் பாக்கியா. பின்னர் பாக்கியா, அஞ்சலி வளைகாப்புக்கு கண்ணம்மாவை அழைக்க, சந்தோஷமாகிறாள் கண்ணம்மா. பின்னர் கண்ணம்மா நான் எப்படி அங்க வர முடியும் என தயங்க, அது உன்னோட வீடு கண்டிப்பா நீ வரணும் என்கிறார் சண்முகம். கண்ணம்மாவும் வருவதாக ஒப்புக்கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment