Advertisment

Vijay TV Serial; ஹேமா பற்றிய உண்மையை நெருங்கும் கண்ணம்மா… புது குழப்பத்தில் சௌந்தர்யா

Vijay TV barathikannamma serial today episode soundarya in trouble: ஹேமா பற்றி அஞ்சலி, துளசியிடம் விசாரிக்கும் கண்ணம்மா, பாரதியை எப்படி சமாளிப்பது என குழப்பத்தில் சௌந்தர்யா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஹேமா பற்றிய உண்மையை நெருங்கும் கண்ணம்மா… புது குழப்பத்தில் சௌந்தர்யா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கண்ணம்மாவுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது என துளசியிடம் கேட்கிறாள் சௌந்தர்யா. நான் கண்ணம்மாகிட்ட இதபத்தி பேசினதே இல்லை என்கிறாள் துளசி. அப்புறம் எப்படி தெரிஞ்சிருக்கும் என இருவரும் யோசிக்கிறார்கள். அப்போது, இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தேகமடைகிறான் பாரதி. பின்னர் கண்ணம்மாகிட்ட இதப்பத்தி சொல்லிறாத என துளசியிடம் சொல்கிறாள் சௌந்தர்யா. அப்போது பாரதி தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விடும் சௌந்தர்யா, உடனே அங்கிருந்து கிளம்புகிறாள்.

publive-image

அடுத்து, அஞ்சலிக்கு போன் செய்யும் கண்ணம்மா, ஹேமா வெண்பாவுக்கும் பாரதிக்கும் பிறந்த குழந்தைனு நான் நினைச்சிட்டுருந்தேன், அத்தையும் என்கிட்ட மறைச்சுட்டாங்க, உண்மையில் ஹேமா யாரு? என கேட்கிறாள். அதற்கு அஞ்சலி, ஹேமாவா அத்தை தத்தெடுத்துட்டு வந்தாங்க என்கிறாள். எதனால் தத்தெடுத்தாங்க என கண்ணம்மா கேட்க, அப்போ வீட்டில் நிறைய பிரச்சனை, ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும் என அத்தை அப்படி செஞ்சாங்க என்கிறாள் அஞ்சலி. உடனே கண்ணம்மா ஹேமா என்னை மாதிரியே இருக்காளே அது எப்படி? என கேட்க, தெரியலை என சமாளிக்கிறாள். ஹேமாவுக்கும் லட்சுமிக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருதே என கண்ணம்மா சந்தேகமாக கேட்க, தத்தெடுத்த நாளை பிறந்த நாளா கொண்டாடுறோம் என்கிறாள் அஞ்சலி. ஆனாலும் சந்தேகம் தீராத கண்ணம்மா, ஏதோ எனக்கு சரியா படல என்கிறாள்.

publive-image

அடுத்து, அஞ்சலி நீ ஏன் ஹேமாவ பத்தி கேக்குற என கேட்க, ஹேமா வெண்பாவோட குழந்தைனு நினைச்சேன், அது இப்ப இல்லைனு ஆச்சு, அதனால் ஹேமா யாரோட குழந்தைனு தெரிஞ்சுக்கலாம் என கேட்டேன் என சொல்லி போனை வைக்கிறாள். பின்னர் கண்ணம்மா ஏன் ஹேமாவ பத்தி கேக்குற என யோசிக்கிறாள் அஞ்சலி.

அடுத்ததாக, துளசியின் ஞாபகம் வர அவளுக்கு போன் செய்கிறாள் கண்ணம்மா. கண்ணம்மா போனை எடுப்பதா வேண்டாமா என குழப்பத்தில் தவிக்கும் துளசி, ஒரு வழியாக போனை எடுக்கிறாள். அப்போது கண்ணம்மா, ஒரு முக்கியமான விஷயம் நேரில் வந்து பேசுகிறேன் என சொல்லி, துளசியை பார்க்க கிளம்புகிறாள். கண்ணம்மாவை எப்படி சமாளிப்பது என யோசிக்கும் துளசி, சௌந்தர்யா சொன்னது மாதிரி செஞ்சிட வேண்டியது தான் என முடிவெடுக்கிறாள்.

publive-image

அடுத்து, கோபமாக இருக்கும் சௌந்தர்யாவிடம், என்ன விஷயம் என வேணு கேட்க, துளசியை பார்த்து பேசிக் கொண்டிருந்ததை பாரதி பார்த்துட்டான் என்கிறாள். பாரதிக்கு சந்தேகம் வந்துடுச்சு, அவன் வந்து என்ன கேட்க போறானோ என்கிறாள் சௌந்தர்யா. அவளை சமாதானப்படுத்துகிறான் வேணு. அப்போது அங்கு வரும் அகில், அஞ்சலிக்கு கண்ணம்மா போன் செய்து விசாரித்ததை சொல்கிறான்.

அடுத்து துளசியை பார்க்க வரும் கண்ணம்மாவிடம், லட்சுமியை பற்றி கேட்க, நல்லா இருப்பதாக சொல்கிறாள். பின்னர் துளசியிடம், எனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் இன்னொரு குழந்தை எங்க என கேட்கிறாள் கண்ணம்மா. தடுமாறும் துளசி, உனக்கு இரட்டை குழந்தை பிறந்துச்சா என சமாளிக்க பார்க்க, கண்டிப்பா உனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கும் உண்மையை சொல்லு என்கிறாள் கண்ணம்மா. ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என சமாளிக்கிறாள் துளசி. அப்போது கண்ணம்மா, நீ உண்மையை சொல்றியா, இல்லா யாராவது சொல்லச் சொன்னாங்களா என கேட்கிறாள். அதற்கு துளசி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை என சமாளிக்கிறாள். ஆனாலும் சந்தேகம் தீராத கண்ணம்மா, ஹாஸ்பிட்டலில் என்னமோ நடந்திருக்கு என தீர்மானமாக இருக்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment