Advertisment

Vijay TV Serial; லட்சுமியை கண்ணம்மாவிடம் சேர்க்க, சௌந்தர்யாவின் புது ஐடியா…

Vijay TV barathikannamma serial today episode soundarya new plan: வெண்பா கொடுத்த மாத்திரைகளை சாப்பிடாமல் தூக்கிபோடும் அஞ்சலி, லட்சுமி விஷயத்தில் கண்ணம்மா ஜெயித்ததாக, பாரதியை தூண்டிவிடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; லட்சுமியை கண்ணம்மாவிடம் சேர்க்க, சௌந்தர்யாவின் புது ஐடியா…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கும் கண்ணம்மாவை எதிர்பாரா நேரத்தில் வந்து கட்டி ஆச்சரியப்படுத்துகிறாள் லட்சுமி. லட்சுமியை பார்த்ததும் கண்ணம்மா ஆனந்த கண்ணீர் வடிக்கிறாள். எப்படி என்ன பிரிஞ்சு இருந்த என கண்ணம்மா கேட்க, எனக்கும் கஷ்டமா தான் இருந்துச்சு, டாக்டர் அங்கிள்கிட்ட கெஞ்சி கேட்டு கொண்டு வந்து விட சொன்னேன் என்று சொல்கிறாள் லட்சுமி. பின்னர் பாரதி வீட்டில் ஆம்லெட் போட கத்துக் கொண்டதை கூறி, கண்ணம்மாவுக்கு ஆம்லெட் போட்டு கொடுக்கிறாள் லட்சுமி. இவ்வாறாக லட்சுமி இருப்பதாக கற்பனையாக நினைத்து, தனியாக பேசிக் கொண்டிருக்கும் கண்ணம்மாவை நிஜத்திற்கு கொண்டு வருகிறாள் ஹேமா.

publive-image

என்ன ஆச்சு என ஹேமா கேட்க, என் பொண்ணு ஞாபகம் வந்துருச்சு என்று சொல்கிறாள் கண்ணம்மா. உடனே ஹேமா, உங்க பொண்ணு எங்க என கேட்க, அவ அப்பா கூட இருக்கா என்று சொல்கிறாள். ஏன் அவங்க கூட இருக்கா என ஹேமா கேட்க, குழந்தையை வளர்க்குறதில் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் பங்கு இருக்கு அதான் என்கிறாள். அப்போது ஹேமா, அவ இங்க இனி வரமாட்டாளா என கேட்க, கொஞ்ச நாளில் வந்துருவா என்று சொல்கிறாள் கண்ணம்மா. நா போறதுக்கு முன்னாடி வர சொல்லுங்க, நான் பார்க்கணும் என கேட்கிறாள் ஹேமா. சரி என சொல்லும் கண்ணம்மாவிடம், நான் என் அப்பாவ விட்டு உங்க கூட இருக்கேன், உங்க பொண்ணு அவங்க அப்பாகிட்ட இருக்கா, வித்தியாசமா இருக்குல்ல என்கிறாள் ஹேமா.

publive-image

அடுத்து, ஒரு ஆட்டோ டிரைவர் பிரசவத்திற்கு இலவசமாக சவாரி செல்வதை பெருமையாக அஞ்சலியிடம் சொன்னான் அகில். பின்னர் வாரவாரம் அன்னதானம் போடலாம்னு இருக்கேன் என அகில் சொல்கிறான். அப்போது அஞ்சலி கையில் இருக்கும் மருந்து சீட்டைப் பற்றி கேட்கிறான் அகில். பதற்றமாகும் அஞ்சலியிடம் இருந்து, மருந்து சீட்டை பிடுங்கி பார்க்கும் அகில், பாரதி எழுதி கொடுத்ததா அப்ப சரியா இருக்கும், நான் கூட வெண்பா எழுதி கொடுத்ததோனு நினைச்சேன், சரி இதெல்லாம் நான் வாங்கிட்டு வர்றேன், இப்ப இந்த மாத்திரைகளை சாப்பிடு என கொடுக்கிறான் அகில். ஆனால் அஞ்சலி சாப்பிடுவது போல் நடிக்கிறாள்.

publive-image

அடுத்து, பாரதியிடம் கண்ணம்மா வீட்டுக்கு போய் ஹேமாவ பார்த்தியா என கேட்கிறாள் வெண்பா. ஹேமா இன்னும் 4 நாள் அங்க இருக்க ஆசைப்படுவதாக பாரதி சொல்ல, கண்ணம்மா லட்சுமியை பத்தி எதுவும் கேட்டாளா? என கேட்கிறாள் வெண்பா. அதற்கு பாரதி, கண்ணம்மா உண்மையை சொல்ற வரைக்கும் இத விட மாட்டேன் என்கிறாள். உங்க வீட்டில் எதுவும் சொல்லலையா என வெண்பா கேட்க, எங்க வீட்டில் எல்லாரும் என்ன பார்த்து பயப்படுறாங்க என்று பெருமையாக சொல்கிறான். அப்போது வெண்பா, கண்ணம்மா தான் இந்த விஷயத்தில் ஜெயித்திருக்கா, யாருக்கோ பிறந்த பொண்ணுக்கு உன்ன அப்பாவாக ஆக்க முயற்சிக்கிறாள், அது மாதிரியே இப்ப நடக்குது என பற்ற வைக்கிறாள். மேலும் லட்சுமியும் பொய் சொல்வதாக ஏத்திவிடுகிறாள். அப்போது பாரதி லட்சுமி சின்ன குழந்தை, கண்ணம்மா தான் எல்லாத்துக்கும் காரணம் என்றவாறு, இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன் என கிளம்புகிறான்.

அடுத்து, சௌந்தர்யாவுக்கு போன் செய்யும் கண்ணம்மா, லட்சுமியை பத்தி கேட்கிறாள். சௌந்தர்யா நல்லா இருப்பதாக சொல்ல, லட்சுமியை பத்தி கவலைப்படுகிறாள் கண்ணம்மா. லட்சுமி, நான் ஏன் இங்க இருக்கேன், நீங்க எல்லாம் யாரு என கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டா என சொல்ல, இதுக்கெல்லாம் என்ன தீர்வு என கேட்கிறாள் கண்ணம்மா. தெரியலை என சொல்லும் சௌந்தர்யாவிடம், நேற்று பாரதி வீட்டுக்கு வந்த விஷயத்தை சொல்கிறாள். பின்னர் சௌந்தர்யா, நீ ஹேமாவ கொண்டு வந்து விடு, அத வச்ச லட்சுமிய கூட்டிட்டு போகலாம் என ஐடியா கொடுக்கிறாள். மேலும் பாரதி லட்சுமிய நல்லா பார்த்துக்கிறான், நீ நிம்மதியா இரு என்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment