Advertisment

Vijay TV Serial; கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி… உச்சக்கட்ட கோபத்தில் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode soundarya on happy: கண்ணம்மா வீட்டில் பாரதி தூங்குவதை கேள்விப்பட்டு சந்தோஷப்படும் சௌந்தர்யா, வேணு, உச்சக்கட்ட கோபத்தில் வெண்பா… இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி… உச்சக்கட்ட கோபத்தில் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

பாரதி வீட்டுக்கு இன்னும் வராததால், வேணு போன் செய்ய ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. இதனால் பதற்றமடையும் சௌந்தர்யா, ஹேமா பார்க்க போயிருப்பானோ என நினைத்து கண்ணம்மாவுக்கு போன் செய்கிறாள். பாரதி இன்னும் வரல, போன் ஆஃப்ல இருக்கு, அங்க வந்தானா என சௌந்தர்யா கேட்கிறாள். கண்ணம்மா தயங்கியபடி இருக்க, இல்ல அவன் அதிகமா வேற குடிக்கிறான் அதான் அவனுக்கு என்ன ஆச்சோ என சௌந்தர்யா கேட்க, அவரு இங்கதான் வந்தாரு என்று சொல்கிறாள். சரி ஹேமாவ பார்க்க வந்திருப்பான் என நக்கலாக சொல்லும் சௌந்தர்யா, எத்தன மணிக்கு பாரதி அங்க இருந்து கிளம்பினான் என்று கேட்க, கண்ணம்மா தயங்கியபடி அவரு இங்க தங்கிட்டாரு என்கிறாள். ஏன் இன்னும் அங்க இருக்கான், போன அவன்கிட்ட கொடு என கேட்க, குழந்தைகளோடு அவரு தூங்கிட்டாரு என்று சொல்கிறாள் கண்ணம்மா. இதைக்கேட்டு ஆச்சரியத்தில் சந்தோஷமாகிறாள் சௌந்தர்யா.

publive-image

பாரதி, கண்ணம்மா வீட்டில் தூங்குவதைக் கேள்விப்பட்ட வேணு நம்ப முடியாமல் போனை ஸ்பீக்கரில் போட சொல்கிறார். கண்ணம்மாவிடம் நீ பொய் சொல்லல இல்ல என சௌந்தர்யா, இங்க தான் தூங்கிட்டு இருக்காரு என்று சொல்கிறாள். பாரதி அங்க எப்படி தங்குகிறான் என சௌந்தர்யா கேட்க, கொரோனா கட்டுப்பாடுகளால் பாரதி அங்க தங்க வேண்டியதாகிவிட்டது என்கிறாள் கண்ணம்மா. உன் கூட பாரதி அங்க தங்கியிருப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என ஆனந்த கண்ணீர் விடுகிறாள் சௌந்தர்யா. கண்ணம்மா அதெல்லாம் இல்ல என எதோ சொல்ல வர, எங்களுக்கு இந்த சந்தோஷம் போதும் என போனை கட் பண்ணுகிறாள் சௌந்தர்யா.

publive-image

அடுத்ததாக, பாரதி போன் ஸ்விட்சு ஆஃப் ஆனதால், கடுப்பில் இருக்கும் வெண்பா, பாரதி கண்ணம்மா வீட்டில் இருப்பதை தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறாள். சாந்தி, அஞ்சலியிடம் கேட்க சொல்ல, அவ 50 எபிஷோடுக்கு முன்னாடியே திருந்திட்டா, போன எடுக்க மாட்ட என்று சொல்கிறாள் வெண்பா. பொறுக்க முடியாமல் சௌந்தர்யாவுக்கு போன் செய்து, எப்படி இருக்கீங்க என்கிறாள் வெண்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என்ன விஷயம் என சௌந்தர்யா கேட்க, பாரதி அங்க இருக்கானா என கேட்கிறாள். அவன பத்தி உனக்கு தானே அதிகமா தெரியும் என சௌந்தர்யா சொல்ல, பேஷண்ட் பத்தி ஒரு டவுட் கேக்கனும், அவன் போன் ஆஃப்ல இருக்கு என்கிறாள் வெண்பா. பாரதி வீடல இல்லமா, ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பான் என நக்கலாக சொல்கிறாள் சௌந்தர்யா.

சரி பாரதி எங்க இருப்பானு சொல்லுங்க, நான் போய் பார்த்துக்கிறேன் என வெண்பா கேட்க, பாரதிகிட்ட தான் அந்த டவுட்டு கேக்கனுமா, வேற யார்கிட்டயாவது கேட்டுக்க என மடக்குகிறாள் சௌந்தர்யா. டென்ஷனாகும் வெண்பா, ரொம்ப அவசரம், ப்ளீஸ் சொல்லுங்க என கேட்க, பாரதி அவன் பொண்டாட்டி கூட இருக்கான், அதாவது கண்ணம்மா வீட்டில் இருக்கான் என சொல்கிறாள் சௌந்தர்யா. இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் வெண்பாவிடம், அவங்களுக்குள்ள ஏதாவது தனிப்பட்ட முறையில் பேசிக்குவாங்க, யாரும் தொந்தரவு பண்ண கூடாதுனு தான் போன ஆஃப் பண்ணிருப்பான், நீ அவன டார்ச்சர் பண்ணாத என அதட்டுகிறாள் சௌந்தர்யா. பின்னர் சாந்தியிடம் டென்ஷன் ஆக என்ன செய்யலாம் என வெண்பா கேட்க, நேரா போய் பாரதியை கூட்டி வந்துருங்காங்க என சொல்ல, கிளம்புகிறாள் வெண்பா.

அடுத்து, தூக்கிக் கொண்டிருக்கும் பாரதி, கிரைண்டர் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறான். வெளியில் கண்ணம்மா மாவு அரைப்பதைப் பார்க்கும் பாரதி, அவளை நினைத்து கவலைப்படுகிறான். பின்னர் பாரதி, கண்ணம்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்க, கொண்டு வந்து தருகிறாள். கண்ணம்மா கஷ்டப்பட்டு வேலை செய்வதை பாரதி பார்த்துக் கொண்டிருக்க, கண்ணம்மா போய் தூங்க சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment