Advertisment

Vijay TV Serial; பாரதி மன்னிப்பு கேட்டா… வீட்டுக்குள் வருவதைப் பற்றி யோசிக்கிறேன்; கண்ணம்மா பிடிவாதம்

Vijay TV barathikannamma serial today episode venba in a fix: பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்ந்து வாழ வலியுறுத்தும் வேணு, திரும்ப அசிங்கப்பட முடியாது என வீட்டுக்குள் வர மறுக்கும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; பாரதி மன்னிப்பு கேட்டா… வீட்டுக்குள் வருவதைப் பற்றி யோசிக்கிறேன்; கண்ணம்மா பிடிவாதம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கண்ணம்மா ஓடி வந்து என்ன ஆச்சு என கேட்க, உங்கள நினைச்சு கவலை தான் என்கிறார் வேணு. பாரதி ஒண்ணும் பிரச்சனை இல்லைனு சொல்லிட்டான் என சௌந்தர்யா சொல்ல, எதுவும் பிரச்சனை பண்ணனுமா என கோபப்படுகிறான் பாரதி. உடனே சௌந்தர்யா அவனை அமைதியாக்குகிறாள். பின்னர் வேணு, கண்ணம்மாவை பாரதி பக்கத்தில் நிற்க சொல்கிறார். இது தான் என்னோட கடைசி ஆசை என சொல்ல, பாரதி கடுப்பாகிறான். பின்னர் சௌந்தர்யா, பாரதியை இழுத்து வந்து கண்ணம்மா அருகில் ஜோடியாக நிற்க வைக்கிறார். அப்போது வேணு நீங்க சந்தோஷமா வாழணும் அதுதான் என் கடைசி ஆசை, நீங்க இரண்டு பேரும் ஒண்ணா வாழ்வீங்கனு சத்தியம் பண்ணிக் கொடுங்க என கேட்க, இருவரும் செய்ய தயங்குகிறார்கள். அப்போது வேறு ஒரு டாக்டர் வந்து வேணுவை செக் பண்ணுகிறார். அப்போது கண்ணம்மாவுக்கு வெண்பா போன் செய்ய, வெளியே வந்து போனை எடுக்கிறாள்.

publive-image

அப்போது கண்ணம்மா என் மாமாவுக்கு உடம்பு சரியில்லை என விவரங்களை கூறி போனை வைக்கிறாள். இதைக்கேட்டு கடுப்பாகிறாள் வெண்பா. மேலும் வேணு ஏதாவது ப்ளான் பண்ணி அவங்கள சேர்ந்து வாழ வச்சுட்டா, எல்லாம் சொதப்பிடுமே என டென்ஷனாகிறாள் வெண்பா.

publive-image

அடுத்ததாக, ஹேமாவுக்கு போன் செய்து பேசுகிறாள் லட்சுமி. அப்போது லட்சுமி நீயும் நானும் ஒண்ணா? எங்க அம்மா உங்க வீட்டில் உள்ளவங்க எல்லார்கிட்டயும் நல்லா பேசுறாங்க, உங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லனா எங்க அம்மாவ கூப்பிடுறாங்க, என்ன காரணம் என தெரியலை என்கிறாள். மேலும் நாம இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால் ஜாலியா இருக்கும் என்கிறாள். ஹேமாவும் ஆமாம் என்கிறாள்.

publive-image

அடுத்ததாக, நெஞ்சுவலி அதிகம் இருப்பதாக நடிக்கும் வேணு, உயில் எழுதணும் என சொல்ல, பாரதி உங்களுக்கு எல்லாம் இல்லை என டென்ஷனாகிறான். பின்னர் உங்க சொத்து எல்லாத்தையும் அந்த சமையல் அம்மாவுக்கு எழுதி வைங்க என பாரதி சொல்ல, கண்டிப்பா எழுதி வைப்பேன் என்கிறார் வேணு. பின்னர் அங்கு வரும் கண்ணம்மாவிடம், நீ தனியா இருக்க வேணாம், எங்க கூட வீட்டுக்கு வந்துடு, உங்களோட பழைய தவறுகளை நினைச்சு உங்க வாழ்க்கையை நரகமாக்கிக்க வேணாம் என வேணு சொல்கிறார். ஆனால் கண்ணம்மா முடியாது என மறுக்கிறாள். மேலும் என்னால் தனியா வாழ முடியும் என்கிறாள். அப்போது டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டதாக பாரதி சொல்ல, கண்ணம்மாவை வீட்டில் வந்து விட்டுவிட்டு போகச் சொல்கிறார் வேணு. கண்ணம்மா வருவதாக ஒத்துக்கொள்ள, கடுப்பாகி வெளியே கிளம்புகிறான் பாரதி.

publive-image

அடுத்ததாக, எல்லாரும் வீட்டுக்கு வர, உள்ளே வர தயங்குகிறாள் கண்ணம்மா. எல்லோரும் உள்ளே அழைக்க, வர மறுக்கிறாள் கண்ணம்மா. அப்போது சௌந்தர்யா, உள்ள வந்த என்ன கெட்டுப்போயிடும் என கேட்க, எல்லாம் தெரிஞ்ச நீங்களும் இப்படி கேக்குறீங்களா என்கிறாள் கண்ணம்மா. மேலும் இந்த வீட்டில் நடந்த அவமானத்த நான் மறக்க மாட்டேன் என சொல்ல, எங்களுக்காக உள்ள வர மாட்டியா என கேட்கிறாள் சௌந்தர்யா. திரும்ப அசிங்கப்பட என்னால் முடியாது என கண்ணம்மா சொல்ல, இதுக்கு முடிவே இல்லையா என சௌந்தர்யா கேட்கிறாள். உடனே கண்ணம்மா உங்க மகன் மன்னிப்பு கேட்டா வருவதை பத்தி யோசிக்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment