பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை டைவர்ஸ் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார் வெண்பா.
அடுத்ததாக, பல்லி விழுந்ததால் குழப்பத்தில் அஞ்சலி கையில் மாத்திரைகளை வைத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறாள். மேலும் வெண்பா மீது சந்தேகப்படுகிறாள். அந்த அங்கு வரும் சௌந்தர்யா, மாத்திரைகளை அப்படியே வைத்திருப்பதை பார்த்து அவர் அட்வைஸ் செய்கிறாள். அதன் பின் ஒரே மாத்திரை இரண்டு இருப்பது பார்த்து அது பற்றி சௌந்தர்யா கேட்க, வெண்பா தான் அப்படி போட சொன்னாள், பாரதி தான் எழுதிக்கொடுத்தார் எனவும் சொல்கிறாள். பின்னர் இரண்டு வேண்டாம் ஒரே மாத்திரை போடு என கூறிவிட்டு போகிறாள் சௌந்தர்யா. அப்போதும் அஞ்சலிக்கு வலி அதிகமாகிறது.
கண்ணம்மா போன் செய்யாததை நினைத்து டென்ஷனாக இருக்கிறாள். அப்போது, வெண்பா எதிர்பார்த்தது போலவே போன் செய்து சொல்லலாம் என போன் செய்கிறாள் கண்ணம்மா. ஆனால் வெண்பாவோ வேண்டுமென்றே போனை எடுக்காமல் இழுத்தடிக்கிறாள். அதன் பின் போனை எடுத்து சரியாக கேட்கவில்லை என சொல்லி நடிக்கிறாள்.
இதனால் வெண்பா மீது சந்தேகப்படும் கண்ணம்மா நேராக வெண்பா வீட்டுக்கே வருகிறாள். கண்ணம்மாவை பார்த்து வெண்பா அதிர்ச்சியாகிறாள். பின்னர் வெண்பாவின் கழுத்தை பிடித்து எச்சரிக்கிறாள் கண்ணம்மா. அதன் பின் உன் குழந்தை உனக்கு வேண்டுமென்றால், பாரதியை சட்டப்படி விவாகரத்து செய் என கேட்கிறாள் வெண்பா. அப்படி செய்தால் 'உன் குழந்தையை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன்' என வெண்பா கூறுகிறாள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil