Advertisment

Vijay TV Serial; ஹேமாவை மீண்டும் கடத்த வெண்பா போடும் சூப்பர் பிளான்

Vijay TV Barathikannamma serial today episode venba sly act: ஹேமாவை தேடி அலையும் பாரதி, கண்ணம்மா, ஹேமாவை மீண்டும் கடத்த திட்டமிடும் வெண்பா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஹேமாவை மீண்டும் கடத்த வெண்பா போடும் சூப்பர் பிளான்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

ரவுடிகள் துரத்த ஒடி வரும் ஹேமா, ஒரு மறைவான இடத்தில் ஓட முடியாமல் உட்காருகிறாள். அங்கும் ரவுடிகள் நெருங்கி வர, ஓடிச் சென்று ஒரு காரின் பின்புறத்தில் ஒளிந்துக் கொள்கிறாள். ஹேமாவை கண்டுபிடிக்க முடியாததால் ரவுடிகள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். ஹேமா காரின் பின்புறத்தில் மாட்டிக் கொள்கிறாள்.

publive-image

அடுத்ததாக, ஹேமாவைத் தேடி, ஹேமா போன் செய்த இடத்திற்கு வரும் பாரதி, அங்கு ஹேமா இல்லாததால், திரும்பவும் அந்த அம்மாவுக்கு போன் செய்து கேட்கிறாள். ஆனால் அவருக்கு எதுவும் தெரியாததால், என்ன செய்வது என்ன தெரியாமல் தவிக்கிறான் பாரதி.

publive-image

அடுத்ததாக, தன் அப்பாவுடன் ஹேமாவை தேடி அலைகிறாள் கண்ணம்மா. வழியில் ஒரு கோவிலில் ஹேமாவுக்காக வேண்டிக் கொள்கிறாள் கண்ணம்மா. பின்னர், கண்ணம்மாவின் அப்பா அவங்க போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்தாங்களா என கேட்க, ஹேமாவோட அப்பா என்னை சந்தேகப்பட்டு என் மேல கம்ப்ளைண்ட் கொடுத்துட்டாரு, அத்தை என்னை ஜாமீனில் எடுத்துருக்காங்க என்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் கண்ணம்மாவின் அப்பா, அவன் உன்ன வாழ விடாம பண்றான், நீ அவன் குழந்தைய தேடிகிட்டு இருக்கியா எனக் கோபப்படுகிறார். உடனே கண்ணம்மா இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல ஹேமாவ கண்டுபிடிக்கனும் என கிளம்புகிறாள்.

அடுத்ததாக, வீட்டில் டென்ஷனாக இருக்கும் வெண்பாவிடம் என்ன விஷயம் என கேட்கிறாள் சாந்தி. ஹேமா தப்பித்துவிட்டதாக கூறுகிறாள் வெண்பா. உடனே சாந்தி, ஹேமாவுக்கு அவள கடத்துனது நீங்கனு தெரியுமா என கேட்கிறாள். அதெல்லாம் அவளுக்கு தெரியாது என வெண்பா சாதாரணமாக சொல்ல, அதற்கு சாந்தி நம்ம ரவுடிங்க ஏதாவது உளறி இருந்த என்ன பண்றது என கேட்கிறாள். அதைக்கேட்டு அதிர்ச்சியாகும் வெண்பா, இப்ப என்ன பண்றது என சாந்தியிடம் கேட்கிறாள். பாரதி கூட நீங்களும் போய் தேடுங்க, அவர் ஹேமா கண்டுபிடிக்கற மாதிரி இருந்தா நீ ஹேமாவ அவருக்கு தெரியாமா மறுபடியும் கடத்திருங்க என ஐடியா கொடுக்கிறாள் சாந்தி. இதைக்கேட்டு சந்தோஷப்படும் வெண்பா உடனே, பாரதியிடம் செல்ல கிளம்புகிறாள்.

publive-image

பாரதிக்கு போன் செய்து, ஹேமா கிடைச்சிட்டாளா, எங்க இருக்க என கேட்க, ஹேமா பாரதிக்கு போன் செய்ததை வெண்பாவிடம் கூறுகிறான் பாரதி. இதனால் அதிர்ச்சியாகும் வெண்பா, நானும் உன்கூட வந்து தேடுறேன் என சொல்கிறாள். பின்னர் ரவுடிகளுக்கு போன் செய்து அங்கு வர சொல்கிறாள் வெண்பா.

அடுத்ததாக, காவல் அதிகாரிகளிடம் ஹேமாவை கண்டுபிடித்து தர போனில் கேட்கிறாள் சௌந்தர்யா. அப்போது, அஞ்சலி வந்து காபி கொடுக்க, குடிக்க மறுக்கிறாள். அப்போது அங்கு வரும் வேணு, ஹேமாவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என சொல்கிறான். ஹேமாவை கடத்தியது யாராக இருக்கும் என யோசிக்கிறாள் சௌந்தர்யா. அப்போது, கண்ணம்மா கர்ப்பமான இருந்த போது தான் இப்படி நம்ம வீட்டில அபசகுணமான நிறைய விஷயங்கள் நடந்துச்சு என அழுகிறாள்.

அடுத்து காருக்குள், பசியால் மயங்கி கிடக்கிறாள் ஹேமா. ஹேமா இருக்கும் காரின் அருகில், வந்து ஹேமாவை தேடி அலைகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment