விஜய் டிவியின் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் மோசமான வில்லியாக நடித்து வரும் வெண்பாவின் பெயர் ஃபரீனா. இவர் சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இடையே செய்யும் வில்லத்தனத்தை பார்த்து சமூக வலைதளங்களில் இவரை திட்டாத ஆட்களே இல்லை எனலாம். அவரை வெளியில் பார்க்கும் பெண்கள் கூட அவரது காதுபடவே திட்டுகின்றனராம். எனினும் இவரது வில்லி ரோல் இல்லையென்றால் அந்த சீரியலுக்கு இவ்வளவு ரீச் இருக்காது. இவர் செய்யும் விஷயங்கள் தான் சீரியல் தொடர்ந்து பரபரப்பாக இருக்க காரணாமாக இருக்கிறது.
Advertisment
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லிக்கான விருதை ஃபரீனா வென்றார். விருது வாங்கிய பின் பேசும்போது, தானும் ஹீரோயின் போல் கஷ்டப்பட்டு நடிப்பதாகவும், ஆனால் சீரியல் பார்ப்பவர்கள் தன்னை மிக மோசமாக திட்டுவதாகவும் வருத்தமாக கூறினார். மேலும் ஒரு பெண் கேட்கக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுகின்றனர் என்றார்.
பொதுவாக சீரியல் ஹீரோயின்களை தான் கடை திறப்பு விழாவுக்கு கூட அழைக்கிறார்கள் தன்னை யாரும் அழைத்தது இல்லை என பேசினார். ஃபரினா இப்படி வருத்தமாக பேசிய நிலையில் அவர் ஆசைப்பட்டது தற்போது நடந்துவிட்டது. ஆம் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வெண்பாவை அழைத்திருக்கிறார்கள். அவரும் அங்கு சென்று ரிப்பன் வெட்டி கடையை திறந்துவைத்துவிட்டு அதன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"