Advertisment

Tamil Serial Story: கண்ணம்மா வீட்டில் பாரதி; கன்னத்தில் விழுந்த அறை!

Tamil Serial Story: பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில், சௌந்தர்யா கண்ணம்மாவைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வரும் பாரதி, கண்ணம்மாவை அநாகரிகமாக திட்டுவதைக் கேட்டு சௌந்தர்யா, மகன் பாரதி கன்னத்தில் அறைகிறாள்.

author-image
WebDesk
New Update
Vijay TV, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial today episode, விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கன்னத்தில் அறைந்த சௌந்தர்யா, பாரதி, கண்ணம்மா, பாரதி கண்ணம்மா சீரியல் இன்று, பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு, Soundharya slaps Bharathi, bharathi kannamma today episode, bharathi kannamma today,saundharya slapping bharathi, bharathi, kannamma

Tamil Serial Story: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்களுடன் உணர்ச்சி பெருக்கை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமாக இங்கே காணலாம்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது. வங்காளத்தில் கிருஷ்ணகோலி என்ற வெற்றிபெற்ற சீரியலின் தழுவலான பாரதி கண்ணம்மா சீரியலில், டாக்டரான பாரதியை வேலைகாரி கண்ணம்மா திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், பாரதி மீது ஆசைப்படும் வெண்பா சதி செய்து பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து விடுகிறாள். கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகத்தை உருவாக்கி விடுகிறாள். பாரதியை விட்டு பிரிவதற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். அதில் ஒரு குழந்தையான ஹேமாவை அவருடைய மாமியார் சௌந்தர்யா கண்ணம்மாவுக்கே தெரியாமல் எடுத்துச் சென்று வளர்க்கிறார். மற்றொரு குழந்தையான லட்சுமி கண்ணம்மா வளர்க்கிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிப்பதால் இரண்டு குழந்தைகளும் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். லட்சுமி கண்ணம்மாவுக்கு தெரியாமல் ஹேமா வீட்டுக்கு சென்று பாரதி, சௌந்தர்யா எல்லோரையும் பார்த்து வருகிறாள். இப்படி கதை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த இரண்டு வாரங்களாக, பாரதியியின் மெடிக்கல் ரிப்போர்ட் ஹேமா வீட்டுக்கு சென்ற லட்சுமி மூலம் கண்ணம்மா வீட்டுக்கு வந்தது. அதை கண்ணம்மா பிரித்து பார்க்காமல் மீண்டும் ஹேமாவிடம் கொடுக்கச் சொல்கிறாள். இப்படி பாரதியின் மெடிக்கல் ரிப்போர்ட் கடந்த 2 வாரங்களாக கண்ணம்மா வட்டாரத்திலே சுற்றி வந்துகொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடு முடிவில், கண்ணம்மா கூறியபடி ஆட்டோ டிரைவர் குமார், அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு சௌவுந்தர்யா வீட்டிற்கு செல்கிறார். பின்னாடியே வெண்பா விரட்டி வந்துகொண்டிருந்தாள். ஆனால், அந்த மெடிக்கல் ரிப்போர்ட் பாரதி கைக்கு போய் சேர்கிறது.

இதையடுத்து இன்றைய எபிசோடில், ஆட்டோ டிரைவர் குமார் வீட்டில் இருக்கும் கண்ணம்மாவை பார்க்க வருகிறார். அப்போது, ரிப்போர்ட்டை கொடுத்தாச்சா என குமார் இடம் கேட்கிறாள். ஆமாம்! கொடுத்தாச்சுமா, மெடிக்கல் ரிப்போர்ட்டை கொடுக்கும்போது அவருக்காக வெளிய காத்திருந்தேன். அப்போது அவரை பற்றி அங்கே இருந்த நிறைய பேர் நல்லவிதமாக புகழ்ந்து பேசினார்கள். ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்கிறார் என சொல்லிவிட்டு, சவாரி வந்ததும் குமார் அங்கே இருந்து கிளம்புகிறார்.

அந்த நேரத்தில், கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யாவும், அகிலும் வீட்டிற்கு வருகிறார்கள். சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு திருநீறு வைத்துவிட்டு, பிரசாதத்தை கொடுக்கிறாள். லட்சுமி எங்க என கேட்கிறாள். அவள் குமார் அண்ணனோட போய் இருக்கிறாள். நீங்கள் என் கைல கொடுத்துட்டு போங்க என கண்ணம்மா சொல்கிறாள். அப்போது சௌந்தர்யா, லட்சுமியை பார்க்காம நான் இங்கே இருந்து போக மாட்டேன் என சொல்கிறாள். அதற்கு கண்ணம்மா, அத்தை சொன்னா புரிஞ்சுகோங்க… நீங்கள் வீட்டுக்கே வந்து திருநீறு வச்சு விட்டால், லட்சுமிக்கு சந்தேகம் வரும் என்கிறாள்.

அதற்கு சௌந்தர்யா, லட்சுமி கேட்டால் உண்மையை சொல். இன்னைக்கு இந்த பிரச்சனைக்கு முடிவு தெரிஞ்சாகனும். எத்தனை நாளைக்கு நான் உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கிறது. பணம் சொத்து வசதி எல்லாம் இருந்தும் நீ இங்க அனாதை மாதிரி இருக்கிற என்று சௌந்தர்யா ஆதங்கப்படுகிறாள். இதற்கு பதில் கூறும் கண்ணம்மா, இல்லை அத்தை, நான் இங்கே நிம்மதியாதான் இருக்கிறேன் என்று கூறுகிறாள்.

அப்போது அந்த வழியாக வரும் பாரதி, அங்கே இருக்கும் சௌந்தர்யாவின் காரை பார்த்துவிட்டு உள்ளே வருகிறான். அந்த நேரம் சௌந்தர்யா, தனது மருமகள் கண்ணம்மாவிடம், நீதான் வரமாட்ற, லட்சுமியை மட்டுமாவது அனுப்பி வை என கேட்கிறாள். அதற்கு கண்ணம்மா அவள் அங்கே வருவதற்கு என்ன என்ன உரிமை இருக்கு அத்தை. உங்களுக்கு தான் வேற மருமகள் வந்துட்டாளே என சொல்கிறாள்.

சௌந்தர்யாவுடன் இருக்கும் அகில், கண்ணம்மா கூறுவது புரியாமல், உங்களுக்கு தனது மனைவி அஞ்சலி மீது என்ன கோபம் என கேட்கிறான். அதற்கு கண்ணம்மா, நான் சொன்னது வெண்பாவை பற்றி, உங்க மகன் பாரதிக்கு இரண்டாம் தாரமாய் கட்டி வச்சு இருக்கீங்க இல்ல, அவளைப் பற்றிதான் பேசுறேன் என கூறுகிறாள். அந்த நேரம் பார்த்து அங்கே உள்ளே வரும் பாரதி, எனக்கும் வெண்பாவுக்கும் எப்பவோ கல்யாணம் ஆகிடுச்சு, அதை கேட்க நீ யாருடி என கோபமாக கேட்கிறான். அவன் ஒருமையில் கத்தியதும், கோபமடைந்த கண்ணம்மா, “என் வீடுக்கு வந்து என்னைப் பத்தி திட்ட உனக்கு என்ன உரிமை இருக்கு, தயவு செய்து இவனை வெளியே போகச் சொல்லுங்க” என கண்ணம்மா கொதிக்கிறாள்.

கண்ணம்மா தன்னை வெளியே போ என்று சொன்னதால் மேலும் கோபமடைந்த பாரதி, “ வெளியே போகலனா சாபம் விடுவியா? நல்ல ஒழுக்கத்தோடு இருக்கிறவங்க சாபம் விட்டாலே பலிக்கிறது இல்லை. அதிலும் உன்னை மாதிரி பொண்ணுங்க சாபம் விட்டா அந்த சாபத்திற்குதான் அசிங்கம்” என்று கண்ணம்மாவைப் பார்த்து ஆவேசமாகவும் ஏளனமாகவும் கூறுகிறான். இப்படி தன் மகன் தரக்கெட்ட வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்ட சௌந்தர்யா, கோபத்தில் பாரதியை ஓங்கி கன்னத்தில் அறைகிறாள். பின்னர், “நீ எல்லாம் என் வயித்துல தான் பிறந்தியா, ஏன்டா, இப்படி இருக்க” என கோபமும் தவிப்பும் கலந்து கேட்கிறாள். பின்னர், சௌந்தர்யா, பாரதியின் வார்த்தைகளால் காயப்பட்டிருக்கும் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு, தேவை இல்லாமல் உன்னை தேடி வந்து கஷ்டப்படுத்திட்டேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.

அனைவரும் வெளியே வரும்போது, பாரதி நீங்கள் எதுக்கு இங்கே வந்தீர்கள் கேட்கிறான். அதற்கு சௌந்தர்யா, “அவ என்னோட மருமகள் இதை மாற்ற யாராலும் முடியாது. சாகிற வரைக்கும் அவளை வந்து பார்ப்பேன். அவளைக் கொண்டாடுவேன்” என்று உறுதியாகக் கூறுகிறாள்.

சௌந்தர்யாவின் வார்த்தையைக் கேட்டு ஆத்திரப்படும் பாரதி “உங்களுக்கு எல்லாம் என்னை பார்த்தால் பைத்தியம் மாதிரி இருக்கா? அவள் எனக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணுனான்னு மறந்துட்டீங்களா?” என்று கேட்கிறான்.

அப்போது சௌந்தர்யா, உனக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு கண்ணம்மாகிட்ட பொய் சொன்னயே அதற்கு என்ன காரணம் என்று கேட்கிறாள். அதற்கு பாரதி, “நான் வேணும்னுதான் அவ மனசு காயப்படனும்னுதான் சொன்னேன்” என்று கூறுகிறான்.

அப்போது அகில், “ இது உனக்கு கேவலமா தெரியலயாடா? சும்மா சொன்னயா? இல்லை நிஜமாவே எங்களுக்கு தெரியாமல் அவளை கல்யாணம பண்ணியிருக்கியா?” என்று பாரதியை மடக்கிக் கேட்கிறான். அகிலின் கேள்வியால் ஆத்திரம் அடைந்த பாரதி, அவனையும் பிடித்து கத்துகிறான். அப்போது குறுக்கிடும் சௌந்தர்யா, “அவன்கிட்ட ஏன்டா கத்தற? என்று கேட்கிறார். “நீங்கள் அவளை அடிக்கடி போய் பார்க்கிறது எனக்குப் பிடிக்கல. அதனாலதான், இப்படி பொய் சொன்னேன்” என்று பாரதி ஆவேசமாகக் கூறுகிறான். இத்துடன் பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த எபிசோடு நிறைவடைந்தது.

பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடில், சௌந்தர்யா கண்ணம்மாவைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வரும் பாரதி, கண்ணம்மாவை அநாகரிகமாக திட்டுவதைக் கேட்டு சௌந்தர்யா, மகன் பாரதி கன்னத்தில் அறைகிறாள். இது பரபரப்பையும் உணர்ச்சிப் பெருக்கையும் வெளியிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment