விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து பார்வையாளர்களை கதிகலங்க வைக்கிற ஃபரீனா ஆசாத், தனது 8 ஆண்டு போராட்டத்தையும் திரையில் சாதிக்க வேண்டும் என்று உடைந்த மேக்கப் பொருட்களுடன் எதுவும் தெரியாத பெண்ணாக சென்னைக்கு வந்த நினைவுகளை உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவாக நடிக்கு ரோஷினி ஹரிபிரியனின் நடிப்பை பாராட்டி சீரியலில் அவர் படும் இன்னல்கலுக்காக ‘உச்’ கொட்டும் பலரும் அதே அளவுக்கு வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனா ஆசாத்தை கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லத்தரசிகள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைத்து தரப்பினரையும் தனது வில்லத் தனமான நடிப்பால் மிரட்டி வருகிறார் வெண்பா.
இந்த சூழலில்தான், விஜய் டிவி டெலி அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விஜய் டிவி விருதுகளில் சிறந்த டிவி சீரியல் வில்லி காதாபாத்திரத்துக்கான விருதை ஃபரீனா ஆசாத் பெற்றுள்ளார். ஃபரீனா ஆசாத், பாரதி கண்னம்மா சீரியலில் வெண்பா வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லிக்கான விருந்து வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு விஜய் டிவி விருது வழங்கப்பட்டது குறித்து, ஃபரீனா ஆசாத் மகிழ்ச்சியுடன் விருது பெற்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டெலி அவார்ட்ஸ் பெற்றுள்ள ஃபரீனா ஆசாத் இன்ஸ்டாகிராமில் குறிப்பிடுகையில், “8 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு இறுதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. “ஒரு வெகுளிப் பெண்ணாக பேருந்தில் உடைந்த மேக்கப் பொருட்களை எடுத்துக்கொண்டு நம்பிகையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு பஸ்ஸில் பயணம் செய்து ராஜ் டிவிக்கு வந்தது. இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. கனவு நிஜமான தருணம் இது.” என்று அவர் உருக்கமாகவும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளார்.
சிறந்த வில்லிக்கான விருது பெற்றிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா ஃபரீனா ஆசாத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.