vijay tv show: கிங்ஸ் ஆஃப் டான்ஸ் என்று ஒரு ரியாலிட்டி டான்ஸ் ஷோவை விஜய் டிவி நடத்தியது. இந்த ஷோவின் நடுவராக ராஜு சுந்தரம் மாஸ்டர் இருந்தார். நடன அணிகளில் ஒன்று மாஸ்டர் சாண்டியின் குழு. இப்படி குழுக்களாக நடைப்பெற்ற நடன நிகழ்ச்சி, அப்போதான காலக்கட்டங்களில் சூப்பர் ஹிட் ஷோவாக இருந்தது. இதை சிறப்பு நாட்களில் அவ்வப்போது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் டிவி.
இவரது முதல் மனைவி கஜோல் சன் மியூசிக் தொகுப்பாளராக இருந்து பின்னர் கலைஞர் தொலைக் காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது இவருக்கு ஜோடியானவர்தான் சாண்டி. அந்த சமயத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து சில வருடங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மனம் ஒத்து பிரிந்தனர். என்றாலும், இருவருக்குள்ளும் நட்பு இன்னமும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் சாண்டியின் டான்ஸ் கிளாசில் மாணவியாக சேர்ந்து, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சில்வியா.இவர் வயிற்றில் லாலா பாப்பா உருவான தருணத்தை கிங்ஸ் ஆஃப் டான்ஸ் மேடையில் இருவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். மனைவிக்கு பரிசு கோடு என்று ஊக்கம் அளித்தார் மாஸ்டர் ராஜு சுந்தரம்.அப்போது லவ் யூ லவ் யூ என்று சொல்லி மண்டியிட்டு பூச்செண்டு கொடுத்துவிட்டு மனையின் நெற்றியில் முத்தமிட்டார் சாண்டி.
மீரா செல்லும் இடமெல்லாம் சர்ச்சை தான்.. ஜோடி நிகழ்ச்சியை மறக்க முடியுமா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil