Naam Iruvar Namakku Iruvar : விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் தேவி மாயனை பூ வச்சு விட சொல்லிவிட்டு திரும்பி நிற்கிறாள். மாயன் பூ வச்சுவிடறதான்னு ஷாக்கில் இருந்தே இன்னும் மீளவில்லை. அதற்குள் அந்த அழகுச் சிலை... மதுர மல்லியே திரும்பி மாயனை பார்த்து டேய் பூ வச்சு விடுடான்னு மறுபடியும் கேட்கிறாள்.
வேணாங்க... விளையாடாதீங்க.. அப்புறம் நான் வச்சு விட்ருவேன்னு மாயன் அசடு வழிஞ்சுக்கிட்டே சொல்றான். டேய் வச்சுவிடுன்னு மறுபடியும் திரும்பி நிற்கிறாள் தேவி. மொட்டு மொட்டாய் இருக்கும் மதுரை மல்லி சரத்தை இரண்டாய்.. நான்காய் மடிச்சு கையில் வச்சுக்கிட்டு தேவியை பார்க்க... அவளும் திரும்பிப் பார்க்கிறாள்.
ஃ பர்ஸ்ட் டைம் பாருங்க... அதான் கை உதறுதுன்னு சொல்லிகிட்டே பூவை அவள் தலை அருகில் கொண்டு போறான். என்னது பூவை மாட்டிவிட ஆணி ஒன்னும் இல்லையேன்னு சொல்லிகிட்டே தலையில் பூ வைக்கிறான். அழகாய் பின் குத்தி வச்சுட்டு அவளையே பார்த்து நிற்கிறான். அவளும் திரும்பி இவனைப் பார்த்துட்டு, தலையில் இருக்கும் பூவை தடவிப் பார்க்கிறாள். இருவருக்குள்ளும் காதல் பிரவாகம்.
உனக்காக வாழ நினைக்கிறேன் ஹிட் சாங்கை போட்டுவிட்டு மாயனையும் தேவியையும் காதல் பார்வை பார்த்து ரொமான்ஸ் பண்ண வைத்துவிட்டு முடித்துக்கொண்டு விட்டார்கள். எல்லா தொலைக்காட்சி சீரியல்களிலும் ரொமான்ஸ் பண்ணும்போது பெரும்பாலும் உனக்காக வாழ நினைக்கிறேன்னு விஜய் பாடலை போட்டுவிட்டு ஹாயா ஒதுங்கிக்கிறாங்க. அது பாட்டுக்கு ஓடுது!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”