Vijay TV Serial: கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் இறுதியில் சினிமா மற்றும் சின்னத்திரை படபிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது அரசின் கட்டுப்பாடுகளுக்கு உடபட்டு மீண்டும் சின்னத்திரை படபிடிப்புகள் தொடங்கியிருக்கின்றன.
யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்: லைக்ஸை அள்ளும் ’காட்டுப் பயலே’ பாடல்!
அதே வேளையில், சில சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல்கள் கூட நிறுத்தப்பட்டு விட்டன. அதில் முக்கியமான ஒன்று, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல். இதில் செந்தில் இரு வேடங்களிலும், அவருக்கு ஜோடியாக ரக்ஹா ஹொல்லா, ரேஷ்மி ஜெயராஜ் என இரு கதாநாயகிகள் நடித்து வந்தார்கள். இந்த கொரோனா தொற்று சமயத்தில், ரக்ஷாவும், ரேஷ்மியும் வேறு மாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்து செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் அந்த சீரியல் நிறுத்தப்பட்டது.
தற்போது அதன் இரண்டாம் பாகம் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். முதல் அத்தியாயத்தைப் போல புதிய கதைக்களம், காதல் அத்தியாயம் என விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்த உள்ளதாக சேனல் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அடாவடி செய்யும் இளைஞனாக செந்திலும், அவரை தட்டிக் கேட்கும் தைரியமான பெண்ணாக ரச்சிதாவும் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
வனத்துறையிடம் சிக்கிய விமல், சூரி: கொடைக்கானலில் நடந்தது என்ன?
தவிர, விஜய் டிவி-யில் இனி எப்போதும் போல, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாரதி கண்ணம்மா', 'ஆயுத எழுத்து', 'செந்தூரப்பூவே', 'தேன்மொழி பி.ஏ' ஆகிய தொடர்கள் மாலை முதல் இரவு வரை, திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பப்படும். 'ஈரமான ரோஜாவே', 'பொம்முகுட்டி அம்மாவுக்கு', 'பொண்ணுக்கு தங்க மனசு', 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'அன்புடன் குஷி' ஆகியவை திங்கள் முதல் சனி வரை மதியம் ஒளிபரப்பாகும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.