Advertisment

Vijay TV Serial: முத்துராசை கொன்றதாக நாச்சியார் வாக்குமூலம்; எல்லாம் யாருக்காக?

கால்வதுறை அதிகாரி கார்த்திக்கிடம் சென்று நாச்சியார் முத்துராசை நான்தான் சுட்டேன். நான்தான் கொலை செய்தேன் என கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial, Naam Iruvar Namaku Iruvar Serial, Naam Iruvar Namaku Iruvar Serial today episode, விஜய் டிவி, நாம் இருவர் நமக்கு இருவர், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், மிர்சி செந்தில், மாயன், நாச்சியார், மஹா, Naam Iruvar Namaku Iruvar, mirchi senthil, maayan, maha, nachiyar, Naam Iruvar Namaku Iruvar Serial today story

Naam Iruvar Namaku Iruvar Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஒரு கிரைம் த்ரில்லர் சீரியல் போல விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்துவருகிறது. அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயன் மனைவி மஹா கர்ப்பமாக இருக்கும் விஷயம் நாச்சியாருக்கு தெரிகிறது. இதையடுத்து நாச்சியார் முத்துராசைக் கொன்ற கொலைப் பழியில் இருந்து மாயனைக் காப்பாற்ற கொலைப் பழியை ஏற்றுக் கொள்வதாக மாயனிடம் கூறுகிறார்.

நாச்சியார் தான் சொன்னது போல, கால்வதுறை அதிகாரி கார்த்திக்கிடம் சென்று நான் முத்துராசை நான்தான் சுட்டேன். நான்தான் கொலை செய்தேன் என கூறுகிறார். முத்துராசு என்னுடைய மகளை டார்ச்சர் செய்தான் அதனால், அவனை நான்தான் சுட்டுக் கொலை செய்தேன் என கூறுகிறார்.

இதைக் கேட்ட டிசி கார்த்திக் அப்படி என்றால் கொலை செய்யப்பட்ட பாடி எங்கே என்று கேட்கிறார். அதற்கு நாச்சியார் பாடி எங்கே என எனக்கு தெரியாது, நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார்.

நாச்சியார் தான்தான் முத்துராசை கொலை செய்ததாக கூறியதை நம்ப மறுத்த போலீஸ் அதிகாரி கார்த்திக், இதை ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என கேட்கிறார். அதற்கு நாச்சியார் மாயன் சொல்ல கூடாது என சத்தியம் வாங்கி விட்டான் அதனால் சொல்லவில்லை என்று கூறுகிறார். இதைக் கேட்ட டிசி கார்த்திக், அப்போது சொல்லமால் இப்போது ஏன் வந்து சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்.

இதற்கு நாச்சியார், “மாயன் அப்பா ஆகப் போகிறான், அவன் வாழ வேண்டியவன், நான் வாழ்ந்து முடிச்சவ, அதனாலதான் தற்போது உண்மையை சொல்கிறேன்” என கூறுகிறார்.

நாச்சியார், நான் தான் முத்துராசை கொன்றேன் என்று கூறினாலும் அதை ஏற்க மறுக்கும் டிசி கார்த்திக், மாயனை காப்பாற்ற நீங்கள் ஏன் இப்படி பேசக்கூடாது, உண்மையான குற்றவாளியை நானே கண்டு பிடித்துக் கொள்கிறேன் என்று கூறி நாச்சியாரை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

இதைக் கேள்விப்பட்டு மாயன் வீட்டிற்கு வந்து நாச்சியாரிடம் ஏன் இப்படி போய் போலீஸிடம் கூறினீர்கள் என்று கேட்கிறான். என்னை உங்கள் மகனாக நினைத்து இருந்தால் இப்படி செய்வீர்களா உணர்ச்சி பூர்வமாக கொந்தளிப்புடன் கேட்கிறான்.

மாயன் கேள்விக்கு பதில் சொல்லும் நாச்சியார் மாயனை அருகே வைத்துக்கொண்டு ரொம்ப உணர்ச்சி பூர்வமாக நெகிழ்ச்சியாக பேசுகிறார். மாயா ஏற்கனவே என்னால்தான் உன் வாழ்க்கை இப்படி வீணா போய்விட்டது என்றா குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. இப்போது இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி செய்தால் உன் அப்பா என்னை மன்னிக்க மாட்டார். மாயா எனக்கு மூன்று பிள்ளைகள் இல்லை நான்கு பிள்ளிகள். மாயா நீயும் என் பிள்ளைதான் என்று பாசத்துடன் கூறுகிறார்.

இதையடுத்து, மாயன் கோவிலுக்கு சென்று மஹா முன்பு சாமி கும்பிடுவது போல மஹாவிடம் மன்னிப்பு கேட்கிறான். ஆனால், மஹா தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தன்னுடைய வாழ்க்கையில் யாரும் இல்லை என்றும் கோபமாக கூறுகிறாள்.தொடர்ந்து பேசும் மஹா, எனக்கு பிள்ளை பிறந்து அப்பா யார்னு கேட்டா கொலைகாரன் ரௌடினு சொல்லவா என மாயனை காயப்படுத்தும்படி கூறுகிறாள். மாயன் மஹாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறான்.

முத்துராசு கொலை செய்யப்பட்டதால் எப்போது சோகமாக அமர்ந்திருக்கும் தனது மகள் ஐஸ்வர்யாவைப் பார்க்கிற நாச்சியார், அவளை ஒரு மாற்றத்திற்காக எங்காவது வெளியில் கூட்டிக்கொண்டு போய் வா என்று சரண்யாவிடம் கூறுகிறார். சரி என்று அவர்கள் புறப்படும்போது எதிரே வடிவு வருகிறார்.

வடிவு ஐஸ்வர்யாவைப் பார்த்து “கணவன் செத்த பிறகு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உனக்கு தெரியாதா” என்று கேட்டு ஐஸ்வர்யாவின் தலையில் இருக்கும் பூவையும் பொட்டையும் அழிக்கிறார். அதோடு ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Serial 2 Naam Iruvar Namakku Iruvar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment