Pandian Stores Serial: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறபோது உறவுகளுக்கு இடையே நடக்கிற அன்பான நிகழ்ச்சிகள், சண்டைகள், ஒற்றுமை ஆகியவற்றுடன் பார்வையாளர்களை நெருக்கமாக உணரவை வைக்கும் வகையில் கதை அமைந்துள்ளது.
அதிலும், குறிப்பாக வீட்டுக்கு மூத்த மருமகளாக விரும்பி வந்த தனம், தனது கணவனின் தம்பிகள் சிறு பிள்ளைகளாக இருந்த ஜீவா, கதிர், கண்ணன் ஆகியோரை வளர்த்து ஆளாக்கியதோடு, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது மக்களைக் கவர்ந்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில், கதிர் வீட்டில் அனைவருக்கும் பிரியாணி சமைத்து சூடாக சுவையாக பரிமாறுகிறான்.
இதையடுத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், “கதிர் சமைத்த பிரியாணி நன்றாக இருப்பதாக அனைவரும் பாராட்டி சாப்பிடுகின்றனர். அப்போது ஐஸ்வர்யா கண்ணனை கூப்பிடும் போது, அவன் பார்த்து விட்டு கீழே குனிந்து கொள்கிறான்.
தனம், கண்ணனை ஐஸ்வர்யா கூப்பிடுவதைக் கவனிக்காமல் அவன் குனிந்துகொண்டதை கவனிக்கிறாள். அப்போது “கஸ்தூரி நான் வரேன்னு உனக்கு எப்படி தெரியும் கதிரு, எனக்காக பிரியாணி சமைச்சு வச்சிருக்க…” என்று கேட்கிறாள்.
அப்போது தனம் “உங்களுக்காக ஒன்னும் சமைக்கல, எனக்காக என் கொழுந்தன் சமைச்சு இருக்காரு…” என சொல்கிறாள்.
அப்போது, மீண்டும் ஐஸ்வர்யா கண்ணனை கூப்பிடுவதை கவனித்து, “இவ மேல தான் ஏதோ தப்பு இருக்கு…” என நினைக்கிறாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு கண்ணனை நிறுத்தி பேசச் சொல்கிறாள் ஐஸ்வர்யா. “நீ ரொம்ப தான் உன் அண்ணிக்கு பயப்படுற” என சொல்கிறாள். அதற்கு கண்ணன், “அவுங்க என் அண்ணி…” என சொல்கிறான்.
அந்த நேரத்தில், அங்கே வரும் மீனா “இங்க என்ன நடக்குது?” என்று கேட்கிறாள்.
அதற்கு ஐஸ்வர்யா, “கண்ணன் பேசவே மாட்றான் அக்கா…” என்று சொல்கிறாள். அதற்கு கண்ணன், “இங்க என்ன அண்ணி பேச இருக்கு, காலேஜ்ல பார்த்தா பேசுவேன் அவ்வளவு தான்” என சொல்லிவிட்டு சென்று விடுகிறான்.
இதைக்கேட்ட மீனா, “அவன் அப்படித்தான் வீட்ல செமயா நடிப்பான்” என்று மீனா சொல்கிறாள். அதற்கு, ஐஸ்வர்யா, “நான் விட மாட்டேன் அக்கா…” என சொல்லிவிட்டு செல்கிறாள்.
இதனிடையே, கண்ணனிடம் “இந்த கேஸ் ஜெயிச்சா எவ்வளவு கிடைக்கும் என கேட்கும் போது, அது ஒரு முப்பது லட்சம் வரும் என சொல்கிறான்.
இதற்கு கஸ்தூரி, “அவ்வளவு தானா?” என்று சொல்லும்போது மீனாவும் பதிலுக்கு கஸ்தூரியைக் கலாய்க்கிறாள்.
அந்த நேரத்தில், ஐஸ்வர்யாவும் அங்கே வருகிறாள். அவளின் கல்யாணம் பற்றி கேட்கிறாள். அப்போது மீனா, “பேசாம நம்ம கண்ணனுக்கு ஐஸ்வர்யாவை கொடுங்க…” என மீனா சொல்கிறாள்.
அதற்கு கஸ்தூரி, “இவனுக்கா? இன்னும் உங்க முந்தானைய பிடிச்சுட்டே சுத்துறான். நல்ல ஆம்பள பையன் மாதிரியா இருக்கான்” என்று சொல்கிறான்.
இதைக் கேட்ட ஐஸ்வர்யா “என் கல்யாணத்தை பற்றி நீங்க ஒன்னும் முடிவு பண்ண வேண்டாம், நான் யாரை கல்யாணம் பண்ணனும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்” என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிடுகிறாள்.
அவள் போன பிறகு, மீனா கண்ணனிடம், “இவங்களே பொண்ணு கொடுத்தாலும் நமக்கு வேண்டாம். ரெண்டு பேரும் இப்படி வாய் பேசுறாங்க” என்று சலித்துக்கொள்கிறாள். இதனைத் தொடர்ந்து, சத்யமூர்த்தி, ஜீவாவின் வருகைக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.
அப்போது, கதிர், “இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்க, நீங்க கவலைப்படாம இருங்க…” என்று சொல்கிறான் கதிர்.
அதற்குள் சத்யமூர்த்தியும் ஜீவாவும் வீட்டிற்கு வருகிறார்கள். தனம் அவர்களிடம் , “என்னாச்சு, போன்லையும் எதுவும் சொல்லல” என்று கேட்கிறாள்.
கதிர் இடையில், “கேஸ் நமக்கு சாதகமா வந்துச்சா இல்லையா?” என்று கேட்கிறான். அப்போது ஜீவா “பாவம்ணே இதுக்கு மேல டென்சன் ஆக்காதீங்க, சொல்லிடுங்க” என்று சஸ்பென்சை உடைக்கிறான்.
மூர்த்தி அப்போது, ஸ்வீட் கொடுத்து கேஸ் நமக்கு சாதகமா தீர்ப்பாகிருச்சு, நாம ஜெயிச்சுட்டோம்” என்று கூறுகிறான். “இந்த சந்தோஷத்தை ஒரு வார்த்தை போன்ல சொல்லிருக்கலாம்ல” என்று தனம் கேட்கிறாள்.
அதற்கு மூர்த்தி, “நேர்ல சொல்லி உங்க முகத்துல வர்ற சந்தோஷத்தை பார்க்க தான் சொல்லாம இருந்தோம்” என சொல்கிறான். அப்போது மூர்த்தியின் அம்மாவும் “பசங்க வந்துட்டாங்களா? என்று உள்ளே இருந்து குரல் கொடுகிறார்.
கண்ணன் உள்ளே போய் அம்மாவை அழைத்து வருகிறான். அவரும் கோர்ட் தீர்ப்பு சாதகமாக வந்ததை நினைத்து சந்தோசம் அடைகிறார்.
அப்போது ஜீவா, “கேஸ் நமக்கு சாதகமா வந்த பிறகு, அந்த இடத்தை கேட்குறாரும்மா சித்தப்பா” என்று சொல்கிறான். அதற்கு அம்மா “அதெல்லாம் வேண்டாம் அவர் அடிமாட்டு விலைக்கு கேப்பாரு…” என்று சொல்கிறாள்.
இதற்கு மூர்த்தி, “நம்ம போய் அங்க அவர் பக்கத்துல உட்கார முடியாதும்மா… இப்ப உள்ள விலைக்கே பேசி அவருக்கு கொடுத்துடலாம். இடத்தை விற்று பணம் வந்தா, நம்மோட நிறைய பிரச்சனை சரியாகும்” என்று சொல்கிறான். அதன்பிறகு கதிர் அவர்களை வாங்க சாப்பிடலாம் என்று அழைக்கிறான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், கண்ணன் ஐஸ்வர்யா கூப்பிடுவதை கவனிக்காமல் இருந்தாலும் திரும்பத் திரும்பக் கூப்பிட்டு வில்லியாக வேகம் எடுக்கிறாள். அப்போது தனம் இவள் மீதுதான் தவறு இருக்கிறது என்று ஐஸ்வர்யா மீது ஒரு கண் வைக்கிறாள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.