Advertisment

Pandian Stores: ஐஸ்வர்யாவுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டிய கண்ணன்; குடும்பத்தில் சந்தேகப் புயல்!

கண்ணன், ஐஸ்வர்யாவுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டியது தெரியவந்ததால் அவர்கள் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சந்தேகப் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Vijay TV, Pandian Stores Serial, pandian store serial today episode, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு, கண்ணன், ஐஸ்வர்யா, தனம், முல்லை, கதிர் முல்லை, Kannan - Aishwarya meeting, Kannan, dhanam, murthy, mullai, kathir, kathir mullai, pandiyan stores today episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக சந்தித்து பேசுவதை தனம் அண்ணி கண்டிக்கிறாள். அதோடு, ஐஸ்வர்யாவுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டியதும் தெரியவருகிறது இதனால், அவர்கள் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சந்தேகப் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதை என்னவென்றால், 4 சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் தாங்கள் வைத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் அறியப்படுகின்றனர். கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களில் கடைசி தம்பியான கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்கும் பெரிய அண்ணி தனம் அவர்களிடம் சென்று இரண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா நாங்க சும்மாதான் பேசிகிட்டு இருக்கோம் என சொல்கிறான். அப்போது கண்ணன், “ஐசு சும்மா இரு” என சொல்கிறான்.

இதைக் கேட்ட தனம், “என்ன ஐசு முழு பெயர் சொல்லி கூப்பிட முடியாதா?” என தனம் கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, “நாங்கள் காலேஜ்ல ஒன்னா படிக்கிறோம், தனியா பேசுனா என்ன” என்று எதிர்த்து பேசுகிறாள். அப்போது, கண்ணன் அவளை தடுக்கிறான். அவளை உள்ளே அனுப்பிவிட்டு தனம் கண்ணனிடம் பேசுகிறாள்.

அந்த நேரம், அங்கே வரும் கண்ணனின் மற்றொரு அண்ணி முல்லையும் அவனோட நடவடிக்கை சரியில்லை என்றும், காலேஜ் கட்டடிச்சுட்டு வெளிய சுத்தவும் செய்கிறான். என்னுடைய அப்பா பார்த்துவிட்டு அவர்கள்கிட்ட சொல்லிருக்காங்க எனவும் சொல்கிறாள்.

அதன்பிறகு, தனம் கண்ணனிடம் “காலேஜ்ல கட்டடிச்சுட்டு சுத்துகிற அளவுக்கு உனக்கு அவ யாருடா?” என்று கேட்டு அடிக்கிறாள். அதற்கு, கண்ணன், வீட்டு கஷ்டத்தை எல்லாம், அந்த பொண்ணை சொல்லிச்சு, அதனாலதான் ரிலாக்ஸா இருக்கட்டும்னு கூட்டிட்டுப் போனேன்” என்று கூருகிறான்.

இதைக்கேட்டு கோபமடையும் தனம், கண்ணனை “கூட்டிட்டு போவியா கூட்டிட்டு போவியா?” என்று கேட்டு அடிக்கிறாள்.

“பேசுறவன் வீட்டுக்குள்ள உக்கார வச்சு பேசனும், இல்லை, எல்லொரும் இருக்கிற இடத்தில் உக்கார வச்சு பேசனும். இங்க ரகசியமா வந்து பேசுறதுக்கு என்னடா இருக்கு” என்று தனம் கேட்கிறாள்.

அதற்கு கண்ணன் “தப்பு தான் அண்ணி மன்னிச்சுடுங்க” என்று கூறுகிறான்.

“எந்த பொண்ண பார்த்தாலும் அப்படியே பல்லைக் காட்டிட்டு பின்னாடியே போய் பேசுவியாடா?” என்று தனம் கேட்கிறாள், அதற்கு கண்ணன், “நான் அப்படியெல்லாம் இல்லை அண்ணி” என்று கூறுகிறான். ஆனால், முல்லை “நீ அப்படிதாண்டா” என்று கூறுகிறான்.

பிறகு, தனம் கண்ணனை எச்சரிக்கிறாள். பின்னர், “அண்ணி அண்ணன் கிட்ட சொல்லிடாதீங்க” என கண்ணன் கேட்கிறான். தனம் அதற்கு, “அதை நான் முடிவு பண்ணிக்கிறேன்” என கோபமாக சொல்லிவிட்டு செல்கிறாள்

அதன் பின்னர், முல்லை தனியாக நிற்கும் ஐஸ்வர்யாவிடம் வந்து, “என்ன கோபமா இருக்கியா?” என கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, “நாங்க சும்மாதான் பேசிட்டு இருந்தோம். அவுங்க வந்து திட்டுறாங்க..” என சொல்கிறாள்.

“நீங்க பிரெண்ட்ஸ் தான, இங்க எல்லார் முன்னாடியும் பேச வேண்டியது தானா, தனியா போய் ஏன் பேசிட்டு இருக்கீங்க?” என கேட்கிறாள். “சும்மாதான் பேசிட்டு இருந்தோம்” என ஐஸ்வர்யா சொல்கிறாள்.

அதன்பிறகு, முல்லை ஐஸ்வரியாவிடம் கண்ணனைப் பற்றி விசாரிக்கிறாள். அப்போது, ஐஸ்வர்யா கண்ணனை தான் மாமா என்று அழைகப்பதாகவும் தனக்காக கண்ணன் நெறைய ஹெல்ப் பண்ணியதாக சொல்கிறாள். அப்படி கண்ணன் என்ன உதவி செய்தான் என்று கேட்கும் முல்லையிடம், “சித்தி எனக்கு பீஸ் கட்ட பணம் கொடுக்காத போது கண்ணன் மாமா தான் காலேஜ் ஃபீஸ் கட்ட பணம் கொடுத்தாரு” என சொல்கிறாள்.

பணமா என முல்லை அதிர்ச்சியுடன் கேட்க, “ஆமாம் அக்கா… பதினைந்தாயிரம் பணம் கொடுத்தாரு” என சொல்கிறாள். இதனால், முல்லை என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியுடன் நிற்கிறாள்.

இதனிடையே, மூர்த்தி வீட்டிற்கு வரும்போது, அண்ணனிடம் எதையும் சொல்ல வேண்டாம் என கெஞ்சுகிறான் கண்ணன். அதற்குள் கஸ்தூரி போன் பண்ணி, தான் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் ஐஸ்வர்யாவை கண்ணனுடன் அனுப்புமாறு சொல்கிறாள். ஆனால், தனம் அவளை மூர்த்தியுடன் அனுப்பி வைக்கிறாள்.

அப்போது அங்கே வரும் முல்லை, கண்ணனிடம் “ஐஸ்வர்யாவுக்கு நீதான் ஃபீஸ் கட்டுனயா?” என்று கூறுகிறாள். அதற்கு முல்லை “உண்மைய சொல்றியா இல்லை அண்ணிய கூப்பிடவா?” என கேட்கிறாள். அப்போது, கண்ணன், “ஐஸ்வர்யா ஃபீஸ் கட்டுவதற்கு பணம் இல்லை என்று சொன்னபோது நான்தான் நீங்கள் வைத்த பணத்தை எடுத்தேன். பணம் இல்லை என்று நீங்கள் அழுதபோது எனக்கு கஷ்டமாக இருந்தது. தப்புதான் அண்ணி, தப்புதான் அண்ணி, என்னை மன்னிச்சுடுங்க…” என்று மன்னிப்பு கேட்கிறான். ஆனால், அந்த பணத்தை திரும்ப யார் அங்கே வைத்தது என்று தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, வீட்டில் இரவில் அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும் போது, மூர்த்தி மீனா கடைக்கு வந்தது சந்தோஷமாக இருந்ததாக சொல்கிறான். அப்போது கதிர் என்னாச்சு அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க என தனத்திடம் கேட்கிறான். அவள் ஒன்னும் இல்லை என சொல்லும்போது, இவுங்க மூணு பேரும் ஒரு மாதிரி இருக்காங்க என சொல்கிறாள் மீனா. அப்போது கதிர், நீ என்னடா பண்ண என கண்ணனிடம் கேட்கும்போது, அவன் ஒண்ணுமில்லை என சொல்லிவிட்டு உள்ளே எழுந்து செல்கிறான்.

அப்போது தனம் ஒண்ணுமில்லை மாமா நான் அவனை திட்டுனேன் அதான் அப்படி இருக்கான் என சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் இன்று நிறைவடைகிறது. அடுத்த எபிசோடிலாவது என்ன நடந்தது என்பதை தனம் அல்லது முல்லை யாராவது உண்மையை சொல்வார்களா? கண்ணன், ஐஸ்வர்யாவுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டியது தெரியவந்ததால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சந்தேகப் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

கண்ணன் பணம் எடுத்ததை முல்லை தனது கணவன் கதிரிடம் கூறுகிறாள், இதைக்கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறான். அடுத்த எபிசோடில் என்ன நடக்கிறது என்று நாளை பார்ப்போம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment