விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று என்ன நடந்தது என பார்ப்போம். மல்லியை குடும்பத்துடன் தனம் சேர்த்துவைப்பதாக நேற்றைய எபிஷோடு இருந்தது.
இன்றைய எபிஷோடில்…
மூர்த்தியை கல்யாணம் பண்ணி இருந்தால் உன் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என்று முருகனும் பார்வதியும் சொல்கிறார்கள். அதற்கு மல்லி, இங்கே நான் கல்யாணம் பண்ணி வந்திருந்தா 15 வருசம் இந்த பசங்கள நா வளர்த்து கஷ்டப்பட்டிருக்கணும் என சொல்கிறாள். அப்போது அங்கு வரும் முல்லை இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். தனத்தை மூர்த்தி வீட்டார் நல்லா பாத்துக்குறாங்க என்பவர்களிடம் நானும் நல்லா தான் இருக்கேன் என வெறுப்பாக பேசுகிறாள் மல்லி. மேலும் என் புருசன் இல்லனாலும் அவர் விட்டுபோன சொத்து நிறைய இருக்கு, அது போதும் எனக்கு, என்னால் பணம் இல்லாமல் வாழ முடியாது என பேசுகிறாள் மல்லி.
நம்மக்கிட்ட இருந்த சொத்து எல்லாம் போச்சு, இப்ப கடனில் தான் இருக்கோம், நாம இருக்குறது வாடகை வீடு என முல்லை மல்லியிடம் சொல்கிறாள். அதனால தான் உன்ன கண்ணனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்களா என நக்கலாக சொல்கிறாள் மல்லி. மூர்த்தி குடும்பமும் முன்னேறாமல் இருப்பது சந்தோஷமாக உள்ளதாக சிரிக்கிறாள் மல்லி. அப்போது அங்கு வரும் தனத்திடம் முருகன், பார்வதி, மல்லி மூவரும் கிளம்புவதாக சொல்கிறார்கள். அதற்கு தனம் மல்லி இங்க இருக்கட்டும் மூர்த்தியை பார்த்துட்டு போகட்டும் என்கிறாள். மல்லியும் இங்க இருந்துட்டு காலையில் வர்றேன் என்கிறாள். புருசனும் பிள்ளையும் இல்லாம மல்லி இருப்பதை நினைத்து கவலைப்படும் முருகன், மல்லியை திரும்ப அழைத்து வந்த தனத்திற்கு நன்றி சொல்லி கிளம்புகிறார்.
அடுத்து போனில் மல்லி பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் மூர்த்தி, பின்னால் இருந்து பார்த்ததில் மல்லியை தனமாக நினைத்து அவளிடம் பணத்தை வாங்கிக்க சொல்கிறான். தயங்கியவாறே திரும்பும் மல்லியைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார் மூர்த்தி. இருவரும் மாறிமாறி நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் அங்கு வருகிறாள் தனம். என் மேல் கோபம் இல்லயா என கேட்கும் மல்லியிடம், நீ எங்க இருந்தாலும் நல்லா இருந்தா எனக்கு சந்தோஷம் என சொல்கிறான் மூர்த்தி. பின்னர் மல்லி திரும்ப வந்த கதையை மூர்த்தியிடம் சொல்கிறாள் தனம்.
அடுத்து சமையலறையில் மல்லி எனக்கு புது இடம் தூக்கம் வரலை என்கிறாள். அதற்கு முல்லை உனக்கு இது புது இடமா என கேட்க, நீ தான் எப்போதும் இங்கேயே இருப்ப, ஜீவா பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த நீ எப்படி கண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்ட என முல்லையிடம் கேட்கிறாள். அதற்கு, கண்ணனும் முல்லையும் நல்ல கணவன் மனைவி என தனம் சர்டிபிகேட் தருகிறாள். அப்புறம் என்னை என் குடும்பத்தோடு சேர்த்து வைச்சதுக்கு தனத்துக்கு நன்றி சொல்கிறாள் மல்லி. மூர்த்தியை மல்லி கல்யாணம் பண்ணிகாம போனது நல்லதுதான் அப்பதான் நான் மூர்த்தியை கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது, நா ரொம்ப சந்தோஷமான இருக்கேன் என மல்லியிடம் சொல்கிறாள் தனம். மல்லி, எனக்கு எப்போதும் வசதியான வாழ்க்கையே வேணும் எனவும் நா சந்தோஷமா இருக்கேன் என சொல்கிறாள்.
பின்னர் கண்ணனும் முல்லையும் மல்லி திரும்ப வந்ததைப் பற்றி பேசிகொண்டிருக்கிறார்கள். மல்லி எங்க அண்ணன விட்டு போனது நல்லது தான் அப்ப தான் தனம் அண்ணி மாதிரி நல்ல மனைவி எங்க அண்ணனுக்கு கிடைச்சுருக்காங்க என அனைவரும் தனம் புகழ் பாடுகிறார்கள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.