Advertisment

Pandian Stores: 'இவன் கெட்ட கேட்டுக்கு லவ் வேறயா?' கோபமான முல்லை

Vijay TV Serial: அந்த போட்டோவை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் தனம். மூர்த்தி அந்த போட்டோவை பார்த்து எழுந்து போகிறான். அதன் பிறகு போட்டோவை பார்க்கும் முல்லை, “இது என்னோட அக்கா மல்லி என சொல்கிறாள்.”

author-image
WebDesk
New Update
Vijay TV, Vijay TV Serials, Pandian Stores, mullai kathir, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோடு, கண்ணன், முல்லை கதிர், தனம், மூர்த்தி, மீனா, ஐஸ்வர்யா, kannan, pandian stores serial, pandian store today episode, pandian stores serial today episode, kannan aishwarya love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

Advertisment

ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் எதிகொள்ளும் நிகழ்வுகள், பிரச்னைகள், அனுசரித்துச் செல்லுதல், இவைகளை மையமாக வைத்து கதை நகர்த்தப்பட்டு வருவதால், பார்வையாளர்களை மிக நெருக்கமாக உணரவைத்து ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில், “ கதிர் இன்று வெள்ளிக்கிழமை கூப்பன் குலுக்கல் இருக்கு என்று சொல்கிறான். அதற்கு மூர்த்தி “கடைக்கே வர சொல்லிருவோமா?” என்று கேட்கிறான்.

“வேணாம் அண்ணே! அங்க கூட்டம் நிற்க முடியாது” என்று ஜீவா சொல்கிறான். அதற்குப் பிறகு, குடோனில் வைத்து கூப்பன் குலுக்கலாம் என முடிவு செய்கிறார்கள்.

அதன்பிறகு கண்ணன் காலேஜ் கிளம்பும் போது, மீனா முல்லையிடம் காலேஜ்க்கு போகிறேன் என சொல்கிறான்.

அதற்கு “மீனா போய்ட்டு வாடா…” என்று சொல்கிறாள். ஆனால், முல்லை அவன் கூறியதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாள். அப்போது, மீனா கண்ணனிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறாள்.

அதற்கு கண்ணன், “ஒண்ணுமில்லை அண்ணி…” என சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அவன் புறப்பட்டு சென்ற பிறகு, மீனா, “என்னாச்சு முல்லை, நீங்களும் அவன்கிட்ட பேச மாட்றீங்க, தனம் அக்காவும் முகம் கொடுத்து பேசல என்னாச்சு சொல்லுங்க…” என்று முல்லையிடம் கேட்கிறாள்.

அதற்கு முல்லை, “நேற்று ஐஸ்வர்யா வந்திருந்தா, கண்ணன் அவகிட்ட தனியா பேசிட்டு இருந்தான். அதுக்கு அக்கா செம்மையா திட்டுனாங்க…” அதுதான் காரணம் என்ற தொனியில் பதில் கூறுகிறாள்.

இதைக் கேட்ட மீனா, “ஒரு வேளை ரெண்டு பேரும் லவ் பண்றாங்களோ” என கேட்கிறாள்.

இதற்கு முல்லை, “இவன் கெட்ட கேடுக்கு லவ்தான் குறைச்சல்..” என்று கூறிவிட்டு கோபமாக எழுந்து செல்கிறாள்.

இதனிடையே, ஐஸ்வர்யாவை கூப்பிட கண்ணன் வரும் போது, “என்னாச்சு மாமா முகம் ஒருமாதிரி இருக்கு…” என கேட்கிறாள். அதற்கு கண்ணன், “அதெல்லாம் ஒன்னும் இல்லை… வண்டில ஏறு மொத…” என்று அவன் சொல்கிறான். அதற்கு ஐஸ்வர்யா, “நான் வரல..” என சொல்கிறாள்.

ஐஸ்வர்யா வரவில்லை என்று கூறியதால், கண்ணன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்படுகிறான். அவன் போன பிறகு, ஐஸ்வர்யா நடந்து வருகிறாள். அதன்பிறகு, மீண்டும் வண்டியை திருப்பிக்கொண்டு வந்த கண்ணன், “வீட்ல கொஞ்சம் பிரச்சனை ஐசு… என்னான்னு கேட்காத” என சொல்லி ஐஸ்வர்யாவை வண்டியில் உக்காரவைத்துக்கொண்டு செல்கிறான்.

அடுத்த காட்சி குடோனில் கூப்பன் குலுக்கல் நடைபெறும் காட்சி அமைகிறது. மீனாவின் குழந்தை கயல் பாப்பாவை வைத்து சீட்டை எடுக்கிறார்கள். அதில் வரும் பெயருக்கு எலக்ட்ரிக் ஸ்டவ்வை பரிசாக தருகின்றனர்.

“ஒவ்வொரு வெள்ளி கிழமையும் நம்ம கடையில குலுக்கல் இருக்கு… எல்லாரும் கலந்துகோங்க” என சொல்லி அனைவரையும் அனுப்பி வைக்கிறார்கள்.

அதன்பிறகு வீட்டில் அமர்ந்திருக்கும் மூர்த்தி தனத்திடம் கட்டப்பை கேட்கிறான். அப்போது அவள் எடுக்க உள்ள போகும்போது, “பரண் மேல இருக்கிற பையை நீங்க எப்படி எடுப்பீங்க?” என சொலும் கதிர், தனத்தை உக்கார வைத்துவிட்டு அதை எடுப்பதற்கு அவனே போகிறான்.

இதையடுத்து, பெரிய அண்ணன் மூர்த்தி கண்ணனிடம், “இன்னைக்கு காலேஜ் இல்லையா?” என்று கேட்கிறான். அதற்கு, “இதோ கிளம்பனும்” என கண்ணன் பதில் சொல்கிறான்.

அப்போது கதிர் பரணில் இருந்து பழைய போட்டோவை எடுத்து வருகிறான். அதை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அப்போது முல்லையின் பழைய போட்டோவை பார்த்து கொண்டிருக்கும்போது, சின்ன வயசுல முல்லை இங்கயே தான் இருக்கும் என மூர்த்தி சொல்கிறான். அப்போது அவன் அம்மா “சின்ன வயசுல முல்லை ஜீவாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் சொல்லுவா” என சொல்கிறாள்.

அப்போது மீனா, “ஏன்ங்க அப்படி சொன்னிங்களா” என முல்லையிடம் கேட்கும் போது, “அது ஏதோ சின்ன வயசுல சொன்னது” என தனம் சொல்கிறாள். அப்போது மீனா ஒரு போட்டாவை பார்த்து “இது யாரு… நான் பார்த்ததே இல்லை” என்று கேட்கிறாள்.

அந்த போட்டோவை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் தனம். மூர்த்தி அந்த போட்டோவை பார்த்து எழுந்து போகிறான். அதன் பிறகு போட்டோவை பார்க்கும் முல்லை, “இது என்னோட அக்கா மல்லி என சொல்கிறாள்.” இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

தனம் அந்த போட்டோவில் இருக்கும் முல்லையின் அக்காவைப் பார்த்து ஏன் அதிர்ச்சி அடைந்தாள்? அந்த போட்டோவைப் பார்த்து மூர்த்தி ஏன் எழுந்து சென்றான், முல்லையின் அக்கா மல்லிக்கும் மூர்த்திக்கும் தனத்துக்கும் என்ன பிரச்னை என்ன நடந்தது என்பது அடுத்து வரும் எபிசோடுகளை சுவாரஸ்யமானதாக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Pandian Stores Serial Pandian Stores
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment