கூட்டுக் குடும்பம், அண்ணன் தம்பிகளின் கதை, பாசப் போராட்டம் என தமிழ் சீரியல் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தொடக்கத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கவிதா கெளடா.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த மகாபாரதத்தின் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்தவர் கவிதா கெளடா. அதன் பிறகு, லஷ்மி பிரம்மா எனும் கன்னட நாடகத்தில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றவர் கவிதா கெளடா. தமிழில், நீலி கேரக்டருக்கு பின்பாக, பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவாவின் மனைவி மீனாவாக நடித்து வந்தார். அப்போது, கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைத்ததால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்நிலையில், கவிதா கெளடாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த முன்னாள் மீனாவின் கணவர் யார் என்ற குழப்பத்திலும் சிக்கு தவிக்கின்றனர். இந்நிலையில், கவிதாவின் கணவராக அவரோடு லஷ்மி பிரம்மா தொடரில் நாயகனாக நடித்த சந்தன்குமார் என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil