Advertisment

Vijay TV Serial: அர்சனாவை வெளுத்து வாங்கிய சந்தியா; புரியாமல் கோபத்தில் இருக்கும் சரவணன்!

அர்சனாவுக்கு பதிலடி கொடுக்கும் சந்தியா, “வீட்டு செலவுக்கு பணம் கேட்டதுக்காக, கொடவுனை கொளுத்தி சொந்த வீட்டுக்குள்ளயே துணியை எல்லாம் ஒளிச்சு வச்சப்போ அத்தை உன்னை வீட்டை விட்டே துறத்தினாங்க இல்ல...” என்று கேட்கிறாள்.

author-image
WebDesk
New Update
raja rani 2 serial, vijay tv, raja rani 2 serial today episode, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, அர்ச்சனா, சரவணன், சந்தியா, அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய சந்தியா, alya manasa, raja rani 2, vijay tv serial, sandhya, saravanan, archana, raja rani 2 serial story

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசொடில் நடக்கும் விறுவிறுப்பான நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சந்தியா தனது அறையில், மாமியார் சிவகாமி திட்டியதை நினைத்து, “அம்மா இன்னும் எத்தனை காலத்துக்குதான் நான் என்னை நிரூபிச்சிக்கினே இருக்கிறது?ஒவ்வொரு விஷயத்திலயும் நான் பொறுத்து பொறுத்துப் போறேன். ஆனால், அத்தை என்னை ஏன் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தெரியவில்லை” என்று தனது அப்பா அம்மா புகைப்படத்தைப் பார்த்து சந்தியா அழுது புலம்புகிறாள்.

சந்தியா தான் மன்னிப்பு கேட்ட பிறகும் சரவணன் ஏன் இப்படி கோபமாக நடந்துகொள்கிறார் என்று தெரியாமல் தவிக்கிறாள். ஆனால், சுமங்கலி பூஜை அப்போது ஸ்வீட் பற்றி மாமியார் சிவகாமி திட்டியபோது சரவணன் தனக்காக பேசியதை நினைத்துப் பார்க்கிறாள். இனிமேல் சரவணன் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது. முதலில் சரவணனைப் போய் பார்க்க வேண்டும் என்று ஸ்வீட் கடைக்கு சென்று பார்க்கிறாள்.

கடையில் சரவணன் வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். கடைக்கு வந்த சந்தியாவை வாங்க என்றுகூட சொல்லாமல் வியாபாரம் செய்கிறான். ஆனால், கடையில் வேலை செய்யும் பையன் சர்க்கரை சந்தியாவை வரவேற்கிறான். ஆனால், சரவணன் அமைதியாக இருக்கிறான். சரவணனுடன் பேசுவதற்காக சந்தியா அமைதியாக காத்திருக்கிறாள். அப்போது, சரவணனின் நண்பன் ஒருவன் தனது திருமண பத்திரிகை கொடுக்க வருகிறான். நலம் விசாரித்த பிறகு பத்திரிகை கொடுக்கிறான். அப்போது, பத்திரிகையில் மாப்பிள்ளை பெயருக்கு பின்னால், எம்.பி.ஏ படிப்பு போட்டிருக்கிறது. ஆனால், பெண்ணுக்கு படிப்பு போடாதது பற்றி சந்தியா கேட்கிறான். சரவணனும் ஏன் என்று கேட்கிறான்.

publive-image

அதற்கு நண்பன், நான் எம்.பி.ஏ படிச்சிருக்கிறேன். பொண்ணு படிக்கலை அதனால போடவில்லை என்று கூறுகிறான். அதோடு படித்த பெண்ணை திருமணம் செய்தால் அவர்கள் வேலைக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு போய் சம்பாதித்தால் நம்மை மதிக்க மாட்டார்கள். அவர்களை வீட்டிலும் சும்மா உட்கார வைத்திருக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கும். அப்படியே அவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டில் வைத்திருந்தாலும் வேண்டா வெறுப்பாகத்தான் இருப்பார்கள். சந்தோஷமாக வாழ முடியாது. அதனால்தான் படிக்காத பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா மறுத்துக் கூற வாய் எடுக்கிறால், அதற்குள் சரவணன், நீ செய்தது 100 சதவீதம் சரி என்று கூறுகிறான்.

பத்திரிகை கொடுத்த நண்பனும் இருவரையும் திருமணத்துக்கு வரச்சொல்லிவிட்டு கிளம்புகிறான். சரவணன் பேசியதைக் கேட்ட சந்தியா, சரவணனின் கோபத்துக்கு பின்னால் வேறு ஏதோ இருக்கிறது. அதை பேசி சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், இப்போது நேரம் சரி இல்லை என்று நினைக்கிறாள்.

வீட்டில் அர்ச்சனா, சாப்பாட்டு கேரியரில் மதிய சாப்பாடு எடுத்து வைக்கிறாள். அப்போது, சுமங்கலி பூஜையின்போது, இந்த சந்தியா அமெரிக்காவில் இருந்து எங்க அண்ணன் டிரஸ் அனுப்பியிருக்காங்க, ராஜபாளையத்தில் இருந்து ஸ்வீட் அனுப்பியிருக்காங்கனு, சீன் போட்டா, ஆனால், அத்தை அவளை வச்சி செஞ்சிட்டாங்க என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறாள். மாமியார் சிவகாமி, சந்தியாவை திட்டியதை நினைத்து சந்தோஷப்படுகிறாள்.

publive-image

அப்போது சந்தியா உள்ளே வருகிறாள். அவளிடம் அர்ச்சனா இங்கே என்ன வேலை என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா ஏன் நான் இங்க வரக் கூடாதா என்று கேட்கிறாள். அதற்கு அர்ச்சனா இல்லை, அத்தை திட்டியதற்கு நீ ரூமுக்குள்ள கதவை சாத்திக்கொண்டு அழுதிருப்ப என்று நினைச்சேன். அத்தைக்கு உன்னை புடிக்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது நீங்க எங்கயாவது போய்விடலாமானு தோணல, இதெல்லாம் எப்படிதான் பொறுத்துக்கொள்கிறாயோ என்று கேட்கிறாள்.

அதற்கு சந்தியா, அர்சனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “வீட்டு செலவுக்கு பணம் கேட்டதுக்காக, கொடவுனை கொளுத்தி சொந்த வீட்டுக்குள்ளயே துணியை எல்லாம் ஒளிச்சு வச்சப்போ அத்தை உன்னை வீட்டை விட்டே துறத்தினாங்க… அதை நீ எப்படி பொறுத்துகிட்டயோ அதே போல” என்று கூறுகிறாள்.

இதைக்கேட்டு அர்ச்சனா அதிர்ந்து போய் நிற்கிறாள். தொடர்ந்து பேசும் சந்தியா, “தங்க நெக்லசை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைனு சத்தியம் செய்யாத குறையா அந்த பழியை எம்மேல போட்டுட்டு, கடைசியா கேமிரால வீடியோ ஆதாரத்தை சிக்கினப்போ, அத்தை காலில் விழுந்து கதறினயே அப்ப நீ எப்படி பொறுத்துகிட்டயோ அதே போலதான் நானும் பொறுத்துக்கிறேன். போதுமா அர்ச்சனா, எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதா? நான் என்னைக்காச்சு உன் வழியில வந்திருக்கேனா, உன்னைப் பத்தி நான் யார்கிட்டயாவது போட்டு கொடுத்திருக்கிறெனா, நீ மட்டும் ஏன் இப்படி பண்ற? அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நீ அய்யோ பாவம்னு நினைக்கலனாகூட பரவாயில்லை. வேணும்னு போய் அந்த வேதனையை கீறி ரணமாக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு அர்ச்சனா.” என்று கூறுகிறாள்.

சந்தியாவின் பேச்சால் மூக்கு உடைபட்ட அர்ச்சனா என்ன சொல்வது என்று தெரியாமல் சமாளிக்கும் விதமாக, “நீ பாவம்னுதான்” என்று கூறுகிறாள். அதற்கு சந்தியா, உன்னைத் தெரியாதாடி எனக்கு என்கிற விதமாக, “ஓ… அப்படியா, உனக்கு அவ்வளவு அக்கறை இருந்திருந்தா அந்த கூட்டத்தில வச்சு இந்த புடவை விலை வெறும் 200 ரூபாய்தான்னு ஏன் சொன்ன. டாலருக்கும் ரூபாய்க்கும்தான் உனக்கு வித்தியாசம் தெரியாது. இருக்கட்டும். அது எவ்வளவு ரூபாவா இருந்தாதான் என்ன? என் அண்ணன் எனக்கு ஆசையா வாங்கிகொடுத்த சீர் அது. அதை எதுக்கு நீ அசிங்கப்படுத்துனம்னு நினைச்ச. சொல்லு அர்ச்சனா, சொல்லப்போறயா இல்லையா? சொல்லிட்டுப் போ அர்ச்சனா” என்று கேட்கிறாள்.

பயந்து போன அர்ச்சனா, ஆள விடுறா சாமி என்ற கதையாக, அங்கிருந்து பையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். அவர் கடையில எனக்காக வெயிட் பண்ணுவாரு நான் போகனும் என்று அழுகிற மாதிரி சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

publive-image

வீட்டில், சுந்தரம் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் சிவகாமி என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பக்கத்து தெருவில் வாத்தியார் பொன்னு ஸ்கூல்ல பரிசு வாங்கி இருப்பது பேப்பர்ல வந்திருக்கிறதுனு சொன்னாங்க… அதை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது, சந்தியா அத்தை நான் கடைக்குப் போகிறேன் என்று கூறுகிறாள். சிவகாமி இதுதான் சமயம் என்று சாக்கு வைத்து, “பரிசு வாங்கறது எல்லாம் சரிதான். அதனால், குடும்பத்துக்கு என்ன பிரயோசனம்” என்று சந்தியாவைக் குத்திக்காட்டும் விதமாக கேட்கிறார். சந்தியாவுக்கும் தன்னைத்தான் சொல்கிறார் என்று புரிந்துகொள்கிறாள். சுந்தரம், ஏன் சிவகாமி வீட்டுக்கும் வரும் மருமகளுக்கு மகளை நினைத்து சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு சிவகாமி, அதற்குள்ளதான் நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுனு மாறிடறாங்களே. படிப்பும் திறமையும் பணிவை கத்துக்கொடுக்கிறதுக்கு பதிலா, எல்லாம் தெரிஞ்சவங்க என்ற கர்வத்தை கத்துக்கொடுக்குது. அப்புறம் குடும்பம் எந்த லட்சனத்துல நடக்கும். நீ பெருசா நான் பெருசானு போட்டிதான நடக்கும் என்று கூறுகிறார்.

இதைக்கேட்ட சுந்தரம் என்னமோ சிவகாமி எதை எடுத்தாலும் உனக்குனு தனியா ஒரு வித்தியாசமான கருத்து வைச்சிருக்க என்று கூறுகிறார்.

அதற்கு சிவகாமி, இருந்துட்டு போகட்டுங்க.. அந்த கருத்து உங்களுக்கு எல்லாந்தான் புடிக்கலையே தவிர, அது தப்புனு உங்களால சொல்ல முடியல இல்லை. நான் சொல்ற மாதிரி நடக்கத்தானே செய்யுது என்று கூறுகிறாள்.

அந்த நேரம் பார்த்து சரவணன், மாவு அரைத்து பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தோளில் வைத்துக்கொண்டு இன்னொரு கையில் பாக்ஸ் உடன் வருகிறான். சிவகாமி பேசியதில் மனது காயப்பட்ட சந்தியா ஏதோ நினைத்துக்கொண்டு வெளியே செல்ல, இருவரும் தெரியாமல் மோதிக்கொள்கிறார்கள். அதனால், மாவு பாத்திரம் கீழே விழுந்து சிதறுகிறது.

அதிர்ச்சி அடைந்து சந்தியா தனது முந்தானையால் தொடைக்க செல்லும்போது, சரவணன் தடுக்கிறான். கடைகும் வீட்டுக்கும் எத்தனை தடவை கஷ்டப்படுவீங்க, என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம் என்று கூறுகிறான்.

அப்போது சிவகாமி, சரவணா ஏன் இவள் உனக்கு சாப்பாடு எடுத்துக்னு வந்ததில என்ன தப்பு, இதுக்கு முன்னா எடுத்துக்னு வந்தது இல்லையா என்று கேட்கிறாள். அதற்கு சரவணன் கடையில கூட்டமாக இருப்பார்கள் என்று கூறிவிட்டு நான் புறப்படுகிறேன். சாப்பாடு வேணாம். நான் இந்த மாவை வச்சிட்டு போலாம்னுதான் வந்தேன் என்று கூறுகிறான்.

இதைக்கேட்டு சிவகாமி, அதற்காக பட்டினி இருக்கப் போகிறயா? உழைக்கிறதுக்கே அர்த்தம் இல்லாம போயிடும் சரவணா என்று கூறுகிறார். ஆனால், சரவணன், நீங்க சாப்பாட்டை கடைக்கு கொடுத்து விடுங்கம்மா நான் அங்கேயே சாப்பிட்டுக்கிறேன் என்று கூறிவிட்டு புறப்படுகிறான். சிவகாமி, என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான் என்று ஆச்சரியப் படுகிறார். கடைக்கு சாப்பாடு கொடுத்துவிடனுமா ஆனால் இவளை கொண்டுவர வேணாம்னு சொல்றான் என்று கேட்கிறான்.

அதற்கு சுந்தரமும் எனக்கும் ஒன்னும் புரியல சிவகாமி என்று கூறுகிறார். அதற்குள், வேலைக்காரி மயில் அங்கே வந்து மாவு சிதறிக்கிடப்பதைப் பார்த்து என்ன என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி, அது அப்படியே இருக்கட்டும். நீ கடைக்கு போய் சரவணனுக்கு சாப்பட்டை கொடுத்துட்டு வா என்று கூறுகிறார்.

அதற்கு மயில், பொண்டாட்டி கையால சாப்பிட்டதான் புருஷனுக்கு பாசம் வரும்னு நீங்க சொல்வீங்க… சந்தியாம்மா தான கொடுப்பாங்க என்று கேட்கிறாள். இதைக் கேட்டு சிவகாமி, நான் சொல்றது உனக்கு புரிஞ்சு என்ன பிரயோசனம், புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே என்று கூறுகிறார். புருஷன் பொண்டாட்டி நடுவுல பாசம் வரனும்னு அவங்கதான் நினைக்கனும் ரெண்டு பேரும் அதற்கான முயற்சியை எடுக்கனும். ஒரு கை தட்டினா ஓசை வராது மயிலு, சரி போய் சாப்பாட்டை எடுத்துட்டு போய் கொடுத்துட்டு வா என்று கூறுகிறார்.

மயில் தனக்கு எதுவுமே புரியவில்லை என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி இந்த பையை எடுத்துக்கொண்டு போய் சரவணன் கடையில கொடுத்துட்டு வா என்று சொல்கிறேன் புரியுதா என்று அனுப்பி வைக்கிறாள்.

சந்தியா துணியை துவைத்து காயப்போட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வரும் சுந்தரம், என்னம்மா எப்போதும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டிருக்கிற என்று கேட்கிறார். அதற்கு சந்தியா எனக்கு தெரிந்த வேலையை செய்கிறேன் மாமா என்று கூறுகிறாள். அதற்கு சந்தியா, இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து நான் உன்னை பார்த்துகிட்டிருக்கிறேன். எனக்கு எதுவும் தெரியாதுனு நீ எப்பவும் ஒதுங்கி உட்கார்ந்தது கிடையாது. தெரிஞ்சதை செய்ற. தெரியலைனா கேட்டு செய்ற, இதுதானமா ஒரு நல்ல மனுஷனோட குணம். ஆனால், எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல. எதனால, சரவணன் உங்கிட்ட இப்படி நடந்துக்கிறான்.” என்று கேட்கிறார்.

அதற்கு சந்தியா, “ஏன் நல்லதான நடந்துக்கிறார், ஓ, சாப்பாடு கொண்டுவர வேண்டாம்னு சொன்னதை சொல்றீங்களா? அய்யோ நிஜமாவே கடையில கூட்ட்டம் இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று சமாளிக்கும் விதமாக கூறுகிறாள்.

சந்தியா கூறியதைக் கேட்ட சுந்தரம், “விட்டுக்கொடுக்காம பேச வேண்டியதுதான், ஆனால், அதை எங்கிட்டயே சொல்றியாமா? எனக்கு உன்னையும் தெரியும் அவனையும் தெரியும், எதற்காகவும் சிவகாமியை விட்டுக்கொடுக்காதவன் சரவணன், அம்மா சொல்ல தட்டாத பையன், ஆனால், உன் விஷயத்தில அம்மானு சளுகை எதுவும் காட்டல, சிவகாமி உன்னை வீட்டை விட்டே வெளியே அனுப்பனும்னு சொன்னப்போ, கொஞ்சம்கூட தயங்காம அவன் உன் பக்கம் உறுதியா நின்னான், இன்னும் அவன் எத்தனையோ பிரச்னையில அவன் அப்படிதான் இருந்தான். அது சிவகாமிக்கு இப்ப வரைக்கும் வருத்தம் இருக்குனு வை. ஆனால், என்ன பொறுத்த வரைக்கும் நான் சந்தோஷப்பட்டேன். பரவாயில்லை. புருஷனும் பொண்டாட்டியும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழறாங்களேனு நினைச்சேன். இப்ப ஊர்ல இருந்து வந்து இருந்துட்டு போன வளர்மதியும் உங்க ரெண்டு பேரையும் போல ஒரு ஜோடியை பார்த்ததே இல்லைனு சொல்லிட்டு போனாலா இல்லையா, அது வெறும் வாய் வார்த்தை இல்லைமா, மனசுல இருந்து வர நிஜம். ஆனால், இன்னைக்கு சரவணன், ஏன் இப்படி நடந்துக்கிறானுதான் புரியல. ஏதாவது பிரச்னையா மனம் வருத்தம் இருந்தா சொல்லுமா, நான் உனக்காக சரவணன் கிட்ட பேசுறேன். உறவு முறையில நான் உனக்கு மாமனாரா இருக்கலாம். ஆனால், ஒரு பெத்த தகப்பனைப் போல, நினைச்சு எங்கிட்ட சொல்லு சந்தியா” என்று கேட்கிறார். அதற்கு சந்தியா, அப்படியெல்லாம் எதுவும் இல்லை மாமா, எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் என்று கூறுகிறாள்.

அதற்கு சுந்தரம், “ஏதோ ஒன்னு இருக்கு, அது என்னனுதான் தெரியல, சரி புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும், எல்லாத்தையும் வெளியில சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. அதை நான் ஏத்துக்கிறேன். ஆனால், இதை வளரவிடக்கூடாது சந்தியா, என்ன நடந்ததுனு எனக்கு தெரியாதுமா, இருந்தாலும் சொல்றேன். ஒருவேளை சரவணை உங்கிட்ட கோபமா பேசியிருந்தாலோ, இல்லை நீ அவங்கிட்ட கோபமா பேசியிருந்தாலோ, ஒருத்தருக்கு ஒருத்தர் மன்னிப்பு கேட்டு, இந்த பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டுவாங்கமா, அவன் வேலை விஷயமா நாலு எடத்துக்கு போறவன் வர்றவன், என்னதான் நிதானமா இருந்தாலும் மனசிலயே ஓடிகிட்டு இருக்கும். அது வாய் வார்த்தையா வந்திருக்க வாய்ப்பு இருக்கு. நீ கொஞ்சம் அனுசரிச்சு போ, விட்டுக்கொடுத்துப் போ, நான் எதுக்கு சொல்றனா சரவணன் உன் மேல அப்படி ஒரு ஆசை வச்சிருக்கான். இந்த கோபம் எதுக்காக இருந்தாலும் அந்த ஆசையும் அன்பும் 100 சதவீதம் நிஜம். அதை விட்றாதம்மா, அவன் பக்கம் இரு, அவனுக்கு ஆதரவா நீ யோசிச்சு பாரு, கொஞ்சம் தன்மையா எடுத்துச் சொன்னால், அவன் காட்டாயமா புரிஞ்சுப்பான்” என்று கூறிவிட்டு செல்கிறார். மாமனார் சொன்னதைக் கேட்டு சந்தியா யோசிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial 2 Raja Rani 2 Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment