காதல் இடமறியாது: எவ்ளோ பப்ளிக்கா புரபோஸ் பண்ணிருக்காங்கப்பா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடி சேர்ந்த ஆல்யா மானசாவும் சஞ்சீவ் கார்த்திக்கும் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஜோடியாக இணைந்தனர். ஆல்யா ஒரு பொது இடத்தில் காதலை புரபோஸ் செய்த வீடியோவை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடி சேர்ந்த ஆல்யா மானசாவும் சஞ்சீவ் கார்த்திக்கும் நிஜ வாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டு ஜோடியாக இணைந்தனர். ஆல்யா ஒரு பொது இடத்தில் காதலை புரபோஸ் செய்த வீடியோவை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார்.
Advertisment
சஞ்சீவ் கார்த்திக்கும் - ஆல்யாவும் ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போதே காதலித்தனர். அந்த சீரியல் முடியும் தருவாயில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆல்யா மானசா - சஞ்சீவ் இருவருக்கும் திருமணம் நடந்து சில மாதங்களுக்கு முன்புதான் ஆல்யா மானசாவுக்கு குழந்தை பிறந்தது. ஆல்யா பிரசவத்துக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறார்.
பிரசவத்துக்குப் பிறகு ஆல்யா மானசா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படம், வீடியோக்களை வெளியிடுவார்.
இந்த நிலையில், சஞ்சீவ் கார்த்திக் ஆல்யா மானசா தன்னிடம் பொது இடத்தில் காதலை புரபோஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பொது இடம்னு கூட பார்க்காமா எவ்ளோ பப்ளிக்கா புரபோஸ் பண்ணிருக்காங்கப்பா என்று வியந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"