Advertisment

புது சீரியல் அறிவித்த விஜய் டி.வி: அப்போ பிரைம் டைமில் இந்த சீரியலை தூக்கப் போறாங்களா?

விஜய் டிவியில் விரைவில் புதிய சீரியல் தொடங்க உள்ளதால் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் நடிகர் ரஞ்சித் நடிகை ஸ்ரீநிதி நடிக்கும் சீரியலை விரைவில் தூக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
Vijay TV new serial announced, Sippikkul Muthu, Actor Ranjith, Srinidhi, சிப்பிக்குள் முத்து புது சீரியல் அறிவித்த விஜய் டிவி, செந்தூரப் பூவே சீரியல், பிரைம் டைமில் செந்தூரப் பூவே சீரியலை தூக்கப் போறாங்களா, நடிகர் ரஞ்சித், நடிகை ஸ்ரீநிதி, Vijay TV, Senthoora Poove serial end soon, vijay tv prime time serial senthoora poove, Sippikkul Muthu serial streaming

விஜய் டிவியில் விரைவில் புதிய சீரியல் தொடங்க உள்ளதால் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் நடிகர் ரஞ்சித், நடிகை ஸ்ரீநிதி நடிக்கும் செந்தூரப் பூவே சீரியலை விரைவில் தூக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

திரைப்பட நடிகர் ரஞ்சித் நடிகை ஸ்ரீநிதி நடிப்பில், செந்தூரப்பூவே சீரியல் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகர் ரஞ்சித் துரைசிங்கம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரோஜா கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடிக்கிறார். சூழ்நிலை காரணமாக துரைசிங்கம் ரோஜாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். ரோஜா ஏற்கெனவே காதலன் மூலம் கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் கோபப்படாமல் அவரை மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அவர்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடாது என்று ரோஜாவின் மாமாவும் துரைசிங்கத்தின் மாமா மகள் ஐஸ்வர்யாவும் சூழ்ச்சி செய்து பிரச்னையை உண்டாக்குகிறார்கள்.

சினிமா பெயரில் அமைந்துள்ள செந்தூரப் பூவே சீரியலில் சினிமா நடிகர் ரஞ்சித் நடித்ததால், மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செந்தூரப் பூவே சீரியல் கதை கவனம் பெற்ற அளவுக்கு டி.ஆர்.பி. எகிற முடியவில்லை. அதனால், இந்த சீரியல் விரைவில் முடிவடையும் என்று பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில்தான், விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற புதிய சீரியலின் ஒளிபரப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான அக்கா, தங்கை கதைதான் என்றாலும் இந்த கதையில் தங்கை காதலித்தவனை திருமணம் செய்துகொள்வதற்காக அக்கா ஒரு மனவளர்சி குன்றியவனை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை பாழாக்கிக்க்கொள்கிறாள். சினிமா பெயரில் அமைந்த சிப்பிக்குள் முத்து சீரியல், ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லேலி காபுரம்’ என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். சிப்பிக்குள் முத்து சீரியல் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் சிப்பிக்குள் முத்து என்ற புதிய சீரியலின் ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளதால், செந்தூரப்பூவே சீரியலை தூக்கப்போகிறார்கள் என்று என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், செந்தூரப் பூவே சீரியல் பிரைம் டைமில் இருந்து தூக்கப்போகிறார்களா என்று இந்த சீரியலின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment