விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் மனைவி சாய் பிரமோதிதா விஜய் டிவி பிரபலங்களுடன் தனது வளைகாப்பு விழாவைக் கொண்டாடியுள்ளார்.
இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில், மக்கள் அனைவரும் புதிய வாழ்க்கை முறைக்கு பழகி வருகின்றனர். பல பிரபலங்கள் இந்த பொதுமுடக்க காலத்தில் திருமணம் செய்துள்ளனர். நடிகர்கள், நடிகைகள் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். சிலர், குழந்தைகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் மனைவி சாய் பிரமோதிதா தம்பதி வளைகாப்பு விழாவைக் கொண்டாடியுள்ளனர். இயக்குனர் பிரவீன் பென்னெட், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களை இயக்கியுள்ளார். கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சாய் பிரமோதிதா. இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவர்கள் இவரும் திருமணம் செய்துகொண்டனர்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னெட் மனைவி சாய் பிரமோதிதா தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பமான சாய் பிரமோதிதா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அவர் தனது வளைகாப்பு விழாவை விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் கண்ணம்மா சீரியல் சீரியல் குழுவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். பிரவீன் பென்னெட் - சாய்பிரமோதிதாவின் பேபி ஷவர் எனப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியிக்கு எடுக்கப்பட்ட அழகிய மகிழ்ச்சியான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள், நெட்டிசன்கள், பிரபலங்கள் என பலரும் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.