Advertisment

Vijay TV Serial; பொறாமைப்படும் சாந்தி… பொங்கி எழும் பாக்கியா

Vijay TV bakiyalakshmi serial today episode bakiya on fire: பொறாமையால் உதவ மறுக்கும் சாந்தியிடம் சண்டையிடும் பாக்கியா, சமையல் சூப்பர் என பாக்கியாவை பாராட்டும் பிரின்சிபல் இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; பொறாமைப்படும் சாந்தி… பொங்கி எழும் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

இனியாவின் ஸ்கூலில் சமையல் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் பாக்கியா, ஜெனி மற்றும் செல்வி. பள்ளியில் வேலை செய்யும் சாந்தி சரியாக உதவியிருந்தால் சீக்கிரமே வேலையை முடித்திருக்கலாம் என ஜெனியிடம் சொல்கிறாள் பாக்கியா. பாக்கியா சமைப்பதை பிடிக்காத சாந்தி, கேட்ட பொருளை தராமல் இழுத்தடிக்கிறாள், மேலும் சமையல் செய்யும் இடத்திற்கு வந்து இன்னுமா செஞ்சு முடிக்கல, நான் செஞ்ச சீக்கிரம் முடிச்சிருப்பேன். பிரின்சிபலுக்கு டிசிபிலின் ரொம்ப முக்கியம் என பாக்கியாவை பயமுறுத்துகிறாள். அதற்கு பாக்கியா நா கேட்ட பொருளை எல்லாம் சரியான நேரத்தில் கொடுத்திருந்தா சீக்கிரம் செஞ்சுருக்கலாம் என்கிறாள்.

நா லிஸ்ட்ல உள்ள எல்லா பொருளையும் கொடுத்துட்டேன், நீங்க போன் பேசிக்கிட்டு இருந்த எப்படி சமைக்க முடியும், நா எல்லா பொருளையும் கொடுத்துட்டத லிஸ்ட்ல கையெழுத்து போட்டு ஆபிஸ்ல கொடுத்துட்டேன் என சாந்தி சொல்கிறாள். அதற்கு செல்வி நீங்க பாதி பொருள் தானே கொடுத்தீங்க என கேட்கிறாள். சாந்தியோ, மிச்ச பொருளை எல்லாம் நா அமுக்கிட்டனா, உங்களுக்கு சமைக்க தெரியல அதுக்கு நா என்ன பண்றது என கேட்கிறாள்.

இதைக் கேட்டு கோபமாகும் பாக்கியா, யாருக்கு சமைக்க தெரியாது, உங்களுக்கு சமையல் ஆர்டர் கொடுக்கலனா நீங்க ஏதாவது தப்பு பண்ணிருப்பீங்க, அத மேடம் கிட்ட கேட்கனும், எங்கள தொந்தரவு பண்ணக்கூடாது என பொங்கி எழுகிறாள்.

publive-image

மேலும் கேட்ட பொருளை கொடுக்கலனா நா எப்படி சமைக்க முடியும், நீங்க எனக்கு எதுவுமே உதவி பண்ணல, நாங்க வெளில வாங்கின பொருளுக்கு எல்லாம் பில் இருக்கு இதெல்லாம் நா பிரின்சிபல் கிட்ட சொல்றேன் என மிரட்டுகிறாள் பாக்கியா. இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் சாந்தி பயத்துடனே, நடுங்கி நிற்கிறாள். நீங்க கொடுத்த கொஞ்ச பொருளை வெச்சு எப்படி சமைச்சுருக்கோம் என்று பாருங்க என சீறுகிறாள் பாக்கியா. மேலும் எனக்கு நெய் இப்ப வேணும் என கோபமாக கத்த சாந்தி இதோ கொண்டு வர்றேன் என பயந்து ஓடுகிறாள். பாக்கியாவின் இந்த கோபத்தை பார்த்து வாயை பிளந்து நிற்கிறார்கள் செல்வியும், ஜெனியும்.

அப்போது பாக்கியாவிற்கு போன் செய்யும் எழிலிடம் நீ சொன்ன மாதிரி கோபமா பேசுனேன் கேட்ட பொருள் எல்லாம் கிடைச்சுருச்சு என சொல்ல, சூப்பர்மா என பாராட்டுகிறான் எழில்.

பின்னர் ஜெனிக்கு போன் செய்யும் அவளின் அம்மா, அவள் வீட்டில் இல்லாததைக் கூறி எங்க இருக்க என கேட்க, பாக்கியாவுடன் இருப்பதாக கூறுகிறாள் ஜெனி. ஜெனியின் அம்மா நீ ஏன் சமையல் வேலை எல்லாம் செய்யுற என கோபமாக கேட்கிறாள். அதற்கு ஜெனி ஆன்ட்டி கூட நா சும்மா தான் இருக்கேன் என சொல்லி சமாளிக்கிறாள்.

பின்னர் சாந்தியிடம் காபியை கொடுத்து, எப்படி இருக்குனு சொல்லுங்க என கேட்டவாறே உங்க மேல கோபம் எல்லாம் இல்லை என்கிறாள். காபி நல்லா இருக்கு என சொல்லிவிட்டு கிளம்புகிறாள் சாந்தி.

publive-image

அடுத்ததாக இனியா வந்து பிரின்சிபல் கூப்பிடுவதாக கூற காரணம் என்னவென்று தெரியாமல் குழம்பி நிற்கிறாள் பாக்கியா. அப்போது அங்கு வரும் பிரின்சிபல் சாப்பாடு சூப்பராக இருந்ததாக பாக்கியாவை பாராட்டுகிறார். என்னை நம்பி ஆர்டர் கொடுத்ததற்கு நன்றி என பிரின்சிபலிடம் சொல்கிறாள் பாக்கியா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment