Advertisment

Vijay TV Serial: வெண்பா கடத்தல்; கண்ணம்மாவை தேடிச் சென்று சண்டை போடும் பாரதி!

Vijay tv serial barathi kannamma today episode: வெண்பா காணாமல் போனதற்கு கண்ணம்மாவை சந்தேகப்படும் பாரதி. பாரதியை டி.என்.ஏ டெஸ்ட்க்கு அழைக்கும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: வெண்பா கடத்தல்; கண்ணம்மாவை தேடிச் சென்று சண்டை போடும் பாரதி!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். நேற்றைய எபிஷோடில் பாரதி வாங்கி கொடுத்த டிரஸை கண்ணம்மாவிடம் காட்டி பாரதியே அப்பாவாக இருந்தால் நல்லா இருக்கும் என்கிறாள் லட்சுமி. அடுத்ததாக மாவு பிஸினஸ் செய்ய முடிவெடுக்கிறாள் கண்ணம்மா.

Advertisment

இன்றைய எபிசோடில்…

வெண்பா வீட்டிற்கு வரும் பாரதி, ஏற்கனவே வேலைக்காரப் பெண் தனியா இருக்குற பெண் வீட்டுக்கு நீங்க வந்துட்டு போறது நல்லா இல்லை என்று சொன்னதை நினைத்துப் பார்க்கும் பாரதி திரும்பிச் செல்ல நினைக்கிறான். அப்போது வேலைக்காரப் பெண் ஓடி வந்து, என்ன விஷயம் என கேட்கிறாள். அதற்கு வெண்பாவுக்கு என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ளவே வந்தேன். நான் இங்க அடிக்கடி வருவதும் நல்லா இல்லை என்கிறான் பாரதி.

அப்பொழுது வெண்பாவை இத்தனை நாளா கண்டுபிடிக்க முடியல எனக்கு பதட்டமாக இருக்கு என்கிறாள் வேலைக்காரப் பெண். போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என்கிறான் பாரதி. வெண்பா பண்ணி வச்சிருக்க கிரிமினல் வேலைகளுக்கு போலீஸ் கிட்ட போனா சரியா வராது என நினைக்கும் வேலைக்காரப் பெண், கண்ணம்மாவுக்கும் வெண்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் என்றும், கண்ணம்மா வெண்பாவ அடிச்சிருக்காங்க என்றும் ஒரு வேளை கண்ணம்மா வெண்பாவ கடத்தி வச்சுருப்பாங்களோ என கண்ணம்மா மீது குற்றம் சாட்டுகிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் பாரதி, வெண்பாவ என் மனைவினு சொன்னதால் கண்ணம்மா கடத்திருப்பாளோ என சந்தேகமடைகிறான் பாரதி.

அடுத்ததாக, கண்ணம்மா தன் வீட்டில், நேற்று லட்சுமி பாரதியை அப்பாவாக நினைப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாள். ரத்த பாசம் தான் இப்படி லட்சுமியை நினைக்க வைக்கிறது என யோசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு கோபமாக வருகிறான் பாரதி.

எதுக்கு இங்க வந்தீங்க என கேட்கும் கண்ணம்மாவிடம் என்னோட ஒரே பொண்டாட்டி வெண்பா எங்க என கேட்கிறான் பாரதி. உன் பொண்டாடிய ஏன் இங்க வந்து கேட்குற என நக்கலாக கேட்கிறாள் கண்ணம்மா. வெண்பா நாலைந்து நாளா காணோம், உனக்கும் அவளுக்கும் தான் அடிக்கடி பிரச்சனை வருதே வெண்பா என்ன பண்ண என கோபமாக கேட்கிறான் பாரதி. அவள ஊறுகாய் போட்டு வச்சுருக்கதாக சொல்லும் கண்ணம்மா, அவள எனக்கு சுத்தமா புடிக்காதுதான் ஆனா அவள காணோம்னா போலீஸ்ல போய் சொல்லு இல்லன தெருத்தெருவா போய் தேடு என காட்டமாக சொல்கிறாள் கண்ணம்மா.

வெண்பா ஒழிச்சுக்கட்ட நீதான் ஆசைப்படுற, நான் வெண்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டதால நீதான் கடத்தி வச்சுருப்ப என சொல்கிறான் பாரதி.  என் வாழ்க்கையில் உன்ன மாதிரி ஒரு கேடு கெட்டவன நான் மறந்து ரொம்ப நாளாச்சு இதுல வெண்பாவ நான் கடத்துறதா வேற சொல்றியா என கோபாமாக கூறும் கண்ணம்மா, நீதான் சந்தேகப்பட்டு அவள துரத்திருப்ப இது ஒன்னும் உனக்கு புதுசு இல்லயே என்கிறாள்.

போலீஸ்ல உன் மேல கம்ப்ளைட் கொடுப்பேன் என கூறும் பாரதியிடம், கம்ப்ளைண்ட் கொடு, போலீஸ் ஒருவேளை என் மேல் எந்த தப்பும் இல்லன சொல்லிட்ட டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வருவியா, அதுல என் குழந்தைக்கு நீதான் அப்பானு சொல்லிட்ட என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும் என சவாலுக்கு அழைக்கிறாள் கண்ணம்மா. இதைக் கேட்டு ஆத்திரமடையும் பாரதி கண்ணம்மாவை அடிக்க போகிறான்.

அப்போது, கண்ணாடி கிளாஸில் கையை கிழித்துக் கொள்கிறான் பாரதி. ரத்தத்தை துடைக்க வரும் கண்ணம்மாவை தடுக்கிறான். இதனால் கண்ணம்மா பாரதியை வீட்டை விட்டு போகச் சொல்கிறாள்.

திரும்ப வெண்பா வீட்டிற்கு வரும் பாரதியிடம் வேலைக்காரப் பெண் கண்ணம்மா மீதே மீண்டும் குற்றம் சுமத்துகிறாள். அப்போது பாரதி பாக்கெட்டில் இருக்கும் தாலியை பார்க்கிறாள் அவள். பாரதி வெண்பா இப்ப இங்க இருந்த தாலி கட்டிருவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அடுத்து ஹேமாவை சாப்பிடச் சொல்லும் சௌந்தர்யாவிடம் அப்பா வந்தவுடன் சாப்பிடுகிறேன் என்கிறாள் ஹேமா. அப்போது அங்கு வரும் பாரதி அவர்களுடன் சாப்பிட மறுக்கிறான். அப்போது பாரதிக்கு கையில் அடிப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment