Advertisment

Vijay TV Serial: லட்சுமிகிட்ட இன்னொரு முகத்தை காட்டுவாரா பாரதி? பயத்தில் கண்ணம்மா

Vijay tv serial barathi kannamma today episode venba kidnapped: இன்றைய எபிஷோடு,பாரதியின் காரில் வரும் லட்சுமியை கண்ணம்மா என்ன செய்யப்போகிறாள். கடத்தப்பட்ட வெண்பா என்ன ஆனாள்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: லட்சுமிகிட்ட இன்னொரு முகத்தை காட்டுவாரா பாரதி? பயத்தில் கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்கிறது. பாரதியின் காரில் வரும் லட்சுமியை கண்ணம்மா என்ன செய்யப்போகிறாள் என்றும் கடத்தப்பட்ட வெண்பா என்ன ஆனாள் என்றும் இன்றைய எபிஷோடில் ஒளிப்பரப்பானது. அதனை நாம் இப்போது பார்க்கலாம்.

Advertisment

பாரதியின் காரில் வரும் லட்சுமியை வண்டியை நிறுத்தி ஆட்டோ டிரைவர் குமாரிடம் கூப்பிட சொல்கிறாள் கண்ணம்மா. நான் இங்க இருக்குறத சொல்ல வேண்டாம் எனவும் சொல்கிறாள். குமார், காரை நிறுத்தி லட்சுமியை ஆட்டோவில் ஏற்றுகிறார். ஆட்டோவில் போகும்போது, காரில் வந்த பிரமிப்பு பற்றி குமாரிடம் சொல்கிறாள் லட்சுமி.

இதற்கிடையில் லட்சுமிக்கும், ஹேமாவுக்கும் ஒரே கலரில் டிரெஸ் எடுத்துட்டு வந்து அதை அகிலிடம் காண்பிக்கிறாள் சௌந்தர்யா. மேலும் அகிலிடம் ,ரெண்டு குழந்தைகளையும் தனித்தனியா பிரிச்சது ஒரு மாதிரி குற்றவுணர்வா இருந்தது. இப்ப குழந்தைங்க ரெண்டு பேரும் சேர்ந்து விளையாட ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு வருசமும் ரெண்டு பேர் பிறந்த நாளையும் ஒன்னா கொண்டாடனும் நினைப்பேன். அதுக்காக தான் இந்த பிறந்தநாளுக்கு  ஒரே மாதிரி டிரெஸ் எடுத்துட்டு வந்துருக்கேன் என சொல்கிறாள்.

அப்போது அகில் கண்ணம்மா அண்ணி இதுக்கு சம்மதிப்பாங்களா, ஒருவேளை பாரதிக்கு தெரிஞ்ச என்ன பண்றது, என கேட்கிறான். அதுக்கு சௌந்தர்யா, பாரதிக்கு மட்டும் தெரிஞ்சா சாமி ஆடிருவான்டா என சொல்கிறாள். ஏதாவது யோசிச்ச பண்ணுவோம் என சௌந்தர்யாவுக்கு சமாதானம் சொல்கிறான் அகில்.



இதற்கிடையில் லட்சுமியும், பாரதியும் நெருங்கி பழகுவதை நினைத்து பயந்து கொண்டிருக்கிறாள் கண்ணம்மா. இது இப்படியே தொடர்ந்தா நல்லா இருக்கும்தான். ஆனா ஒரு வேளை என்னைக்காவது என்னையும் லட்சுமியையும் ஒன்னா சேர்த்து பாரதி பார்த்துட்டா அவ்வளவு தான், அவரோட இன்னொரு முகத்தை லட்சுமிகிட்ட காட்டுவாரு, அதை இந்த சின்ன பொண்ணு எப்படி புரிஞ்சுப்பா என யோசிக்கிறாள். அப்போது அங்கு வரும் லட்சுமி கண்ணம்மாவை கூப்பிடுகிறாள்.

என்னம்மா யோசிச்சுட்டு இருக்க என கேட்கும் லட்சுமியிடம், உன்னோட பிறந்த நாளுக்கு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன் என சொல்கிறாள். எனக்கு புது டிரெஸ்லாம் வேணாம் அம்மா, அதை நீ உன்னோட வேலைக்கு யூஸ் பண்ணிக்கோ என லட்சுமி சொல்கிறாள். அதை கேட்டு சந்தோசம் அடையும் கண்ணம்மா அவளை கட்டி பிடிக்கிறாள். அதன் பிறகு லட்சுமிக்கு கண்ணம்மா சாப்பாடு ஊட்டி விடுகிறாள். அப்போது அங்கு வரும் மஞ்சுக்கும் சாப்பாடு கொடுக்கிறாள் கண்ணம்மா. அப்போது மஞ்சு பணம் இல்லாததால் தான் சுமதி சமைக்கிறதில்லை என சொல்கிறாள்.



இதற்கிடையில், பாரதி இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்ற உண்மையை கண்ணம்மாவிடம் எப்படி சொல்வது என யோசித்து கொண்டிருக்கிறாள் சௌந்தர்யா. அப்போது அங்கு வரும் அகிலிடம் இந்த உண்மையை மறைக்குறது  கண்ணம்மாவுக்கு பண்ற துரோகம் இல்லையா என கேட்கிறாள். அதற்கு, இந்த விஷயத்தை இப்போதைக்கு கொஞ்சம் விட்டு பிடிப்போம் என சமாதானம் சொல்கிறான் அகில்.



இன்னொரு பக்கம், துர்காவின் கஸ்டடியில் இருக்கும் வெண்பா, தன்னை கட்டி போட்டிருக்கும் கயிற்றை அவிழ்த்து ஜன்னல் வழியாக உதவி கேட்டு கத்துகிறாள். அங்கு யாரும் இல்லாததால் ஒரு பேப்பரில் தான் கடத்தப்பட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி எழுதி ஜன்னல் வழியாக தூக்கி போடுகிறாள். அது சரியாக துர்கா மீது விழ, அதை எடுத்து படித்து உள்ளே வருகிறான் துர்கா. இத்துடன் இன்றைய எபிஷோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment