Advertisment

Vijay TV Serial; கண்ணம்மாவை விட்டு பிரிய மறுக்கும் ஹேமா… என்ன செய்யப்போகிறான் பாரதி

Vijay TV serial barathikannamma today episode hema won't leave kannamma: கண்ணம்மாவை பிரிய மறுக்கும் ஹேமா… பாரதியை சமாதானம் செய்ய முடியாமல் தவிக்கும் சௌந்தர்யா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மாவை விட்டு பிரிய மறுக்கும் ஹேமா… என்ன செய்யப்போகிறான் பாரதி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கண்ணம்மாவை கட்டிபிடித்து அழுதுக் கொண்டிருக்கும் ஹேமாவை பார்க்கும் பாரதி, அதிர்ச்சியாகி கோபத்தோடு அவர்களிடம் வருகிறான். அப்போது கண்ணம்மா ஹேமாவிடம், உன் பாட்டிக்கு எனக்கு அமெரிக்க போக புடிக்கலனு சொல்லு, அவங்க பார்த்துப்பாங்க என சொல்கிறாள். பாரதி ஹேமாவை அழைக்க, ஹேமாவோ கண்ணம்மாவை கட்டிபிடித்து அழுதுக் கொண்டே இருக்கிறாள். அப்போது லட்சுமி ஏன் ஹேமாவ வெளிநாடு கூட்டி போறீங்க என பாரதியிடம் கேட்க, அதற்கு பாரதி, கண்ணம்மாவை பார்த்தவாறே இந்த ஊருல ஒரு வைரஸ் இருக்கு, அது ரொம்ப ஆபத்தானது, அதனால தான் அமெரிக்கா போறோம் என சொல்கிறான். மீண்டும் பாரதி ஹேமாவை அழைக்க, ஹேமாவோ கண்ணம்மாவை விட்டு வர மறுக்க, நான் உன்கூட பேச மாட்டேன் என பாரதியும் அழுகிறான். பின்னர் ஹேமாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறான்.

publive-image

அடுத்ததாக, வெண்பா வீட்டிற்கு ஆட்டோவில் வரும் சாந்தி, ஆட்டோவிற்கு பணம் கொடுக்க சில்லரை இல்லாமல் தவிக்கிறாள். அப்போது வெண்பாவை பார்க்கும் ஆட்டோ டிரைவர் குமார், இவங்க பாரதி சார் பொண்டாட்டி தானே, அதனால காசு வேணாம் என்கிறார். பாரதி பொண்டாட்டி என ஆட்டோ டிரைவர் குமார் சொன்னதைக் கேட்ட வெண்பா சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் குதிக்கிறாள். அப்போது சாந்தி இப்படி கற்பனையில இருக்காம, என்ன செய்றதுனு யோசிங்க என்கிறாள்.

publive-image

அடுத்ததாக, ஹேமா காய்ச்சலால் படுத்திருக்க எல்லோரும் கவலையோடு இருக்கிறார்கள். தூக்கத்தில் ஹேமா, சமையல் அம்மா என்று, சொல்லிக்கொண்டே இருக்கிறாள். மேலும், உங்கள விட்டு நா அமெரிக்க போக மாட்டேன் என்று ஹேமா சொல்வதைக் கேட்ட, சௌந்தர்யா, ஹேமா கண்ணம்மா கூட நல்ல ஒட்டிக்கிட்டா, இந்த பாரதி ஏன் இப்படி பண்றானு தெரியல என புலம்புகிறாள். ஹேமா, கண்ணம்மா கூட சேர்ந்துடக்கூடாதுனு தான் பாரதி இப்படி எல்லாம் பண்றான் என சொல்கிறான் அகில். அப்போது சௌந்தர்யா, கண்ணம்மா இனி அந்த ஸ்கூலுக்கு சமையல் செய்யமாட்டா என சொல்ல, எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து சின்ன குழந்தைகளை பாடுபடுத்துறாங்க என அகில் சொல்ல, அப்போது எழுந்திரிக்கும் ஹேமா, சமையல் அம்மா இனி என்ன பார்க்க வர மாட்டாங்களா என கேட்கிறாள். அதற்கு சௌந்தர்யா கண்டிப்பா உன்ன பாக்க வருவாங்க என ஆறுதல் சொல்கிறாள்.

அடுத்ததாக, துளசி நீ ஏன் ஸ்கூலுக்கு சமைக்க மாட்டேன்னு சொல்ற என கண்ணம்மாவிடம் கேட்கிறாள். அதற்கு கண்ணம்மா நா முடிவு பண்ணிட்டேன், இனி சமைக்க மாட்டேன் என முடிவாக சொல்கிறாள். பின்னர் துளசி, வேறு ஒரு இடத்தில் சமையல் வேலை இருக்கு செய்றியா என கேட்க, கண்ணம்மா ஒத்துக் கொள்கிறாள். அப்போது அங்கு வரும் சுமதி, கொஞ்ச நாளில் தனது குடிகார கணவர் திருந்தி வரப்போவதாக கூறுகிறாள். அப்போது கண்ணம்மா நான் தான் உங்கள பிரிச்சுட்டேன் என வருத்தப்பட, அதற்கு சுமதி அவர் இப்ப திருந்தி வர காரணமே நீதான் நான் தான் உனக்கு நன்றி சொல்லனும் என்கிறாள்.

அதன்பின் கண்ணம்மா சோகமாக இருக்க, அதற்கான காரணம் கேட்கிறாள் சுமதி. ஹேமா அமெரிக்கா போகப்போற விஷயத்தைக் கூறி, ஹேமாவுக்கு வெளிநாடு போகப் புடிக்கல, அவள நினைச்சுதான் கஷ்டமா இருக்கு என்கிறாள். அப்போது சுமதி ஏன் பாரதி இப்படி பண்றான், லட்சுமிக்கு அவன் அப்பாதானே எனக் கூற, அதற்கு கண்ணம்மா அதை நிரூபிக்க ஒரு காலம் வரும் அப்ப பார்த்துக்கலாம் என்கிறாள். பின்னர் சுமதியும் நீ ஏன் ஸ்கூல்ல சமைக்க மாட்டேனு சொல்ற என கேட்க, அதற்கு கண்ணம்மா, ஹேமா பர்த்டே ஃபங்சனுல நான் தான் சமையல் அம்மானு பாரதிக்கு தெரிஞ்சு போச்சு, நா ஹேமாவ பாரதிக்கிட்ட இருந்து பிரிச்சுடுவேனு பாரதிக்கு என் மேல கோபம், அதான் ஹேமாவ ஸ்கூல் மாத்துறேனு சொல்றார், அதனால நா சமைக்குறத விடலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment