Advertisment

Vijay TV Serial : ஹேமாவுடன் ரிசார்ட்டுக்கு வரும் பாரதி... அஞ்சலியை தூண்டிவிடும் வெண்பா

Bharathi Kannamma Raja Rani Megasangamam : பாரதி கண்ணம்மா ராஜாராணி 2 மெகாசங்கம எபிசோட்டில் இன்று என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : ஹேமாவுடன் ரிசார்ட்டுக்கு வரும் பாரதி... அஞ்சலியை தூண்டிவிடும் வெண்பா

பாரதி கண்ணம்மா ராஜா ராணி 2 மகாசங்கமத்தின் இன்றைய எபிசோட்டில், அஞ்சலி தனியாக அமர்ந்திருக்கும்போது அங்கு வரும் வெண்பா, நேற்று நான் கொடுத்த மாத்திரையை நீ சாப்பிடவே இல்லையா என கேட்கிறார். இதற்கு முதலில் சாப்பிட்டு விட்டதாக சொல்லும் அஞ்சலி, அதன்பின் உண்மையை கூறிவிடுகிறாள். அதை நீ சாப்பிட்டு இருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் ஆகி இருக்குமே என வெண்பா மனதிற்குள் நினைத்துக்கொள்கிறாள்.

Advertisment

தொடர்ந்து ஒரு காலத்தில் நீ கண்ணம்மாவை வீட்டைவிட்டு துரத்துவதற்கு என்னவெல்லாம் செய்தாய். ஆனால் இப்போது நல்லவள் போல மாறிவிட்டாய். இது உண்மையா இல்லை இது நடிப்பா என்று யாருக்கு தெரியும் என கூறுகிறார். இதனை கேட்டு மனம் வருந்தும் அஞ்சலி, அழுதுகொண்டிருக்க அதை பார்த்த அகில், வெண்பாவுடன் சண்டை போட சண்டைபோட கிளம்புகிறான். ஆனால் அஞ்சலி தடுத்துவிடுகிறார்.

இதற்கிடையே மகள் ஹேமாவை அழைத்துக்கொண்டு பாரதி  ரிசார்ட்டுக்கு வருகிறான். இதனை கேள்விப்பட்ட சாந்தி, அந்த தகவலை வெண்பாவிடம் சொல்ல, அவர் பாரதியை சந்தித்க்க வேகமாக ஓடிவருகிறாள். வந்தவுடன், அவதைன தனியாக அழைத்து அகில் தன்னை கேவலமாக பேசுகிறார் என்றும் தான் கொடுத்த மாத்திரையை அஞ்சலி சாப்பிட விடாமல் செய்து விட்டார் என்றும், கூறுகிறாள்

இதை கேட்ட பாரதி உடனடியாக அகிலிடம் இது குறித்து விசாரிக்கிறான் நான் சொன்ன ஒரே காரணத்திற்காக தான் வெண்பா இங்கு வந்து தங்கி இருந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த மாத்திரையை ஏன் வேண்டாம் என குப்பையில் தூக்கி போட்டாய் என பாரதி கேட்க, வெண்பா மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அதனால் தான்' என அகில் கூறுகிறார். இதற்கிடையே அந்த மாத்திரையை காட்டு நான் நிரூபிக்கிறேன் என்று பாரதி சொல்கிறான்.

இதனால் பதறி போகிறார் வெண்பா சுதாரித்துக்காண்டு "நீயும் என்னை சந்தேகப் படுகிறாயா? செக் செய்து பார்க்கிறாயா? எல்லோரும் என்னை மாறி மாறி அசிங்கப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்" என கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்படுகிறாள்.

இதற்கிடையே அர்ச்சனா கருத்தடை மாத்திரையை பயன்படுத்தும் விஷயத்தை தெரிந்துகொண்ட பார்வதி, அர்சணாவிடம் சென்று, உங்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையே என வெளிப்படையாக கேட்கிறாள். அதற்கு அர்ச்சணா அது நடக்கும்போது நடக்கட்டும் என விட்டுவிட்டேன் என அவர் சொல்லி சமாளிக்கிறார். ஆனால் மாத்திரை சாப்பிட்டு கர்ப்பம் ஆகாமல் இருந்து கொண்டு இப்படி சொல்கிறாரே என பார்வதி மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.

இதற்கிடையே பாரதியின் அப்பா தனியாக அமர்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் சென்று பேசும்படி வேலைக்காரி சாந்தி வெண்பாவிடம் கூற, அதேபோல்  நீங்கள் உங்கள் மனைவியுடன் இந்த வயதிலும் காதலுடன் இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் மகன் பாரதி மட்டும் எப்படி இருக்கிறான் என நீங்கள் கண்டு கொள்வதில்லை என கூறுகிறார் வெண்பா. ஒரு நல்ல பெண்ணாக பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வையுங்கள் என சொல்கிறாள். அதைக் கேட்டு பாரதியின் அப்பாவுக்கும் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க நேற்று சரவணன் சந்தியாவுக்கு அன்பாக ஒரு கடிதம் எழுதி படித்துக் காட்டியது போல், நீயும் எழுதி காட்டு என சந்தியாவிடம் கேட்கிறார். ஆனால் சந்தியா, தன்னால் எழுத முடியவில்லை என கூற, கண்டிப்பாக எழுதிதான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார் அவர். அதன்பின் வேறு வழியின்றி சில வரிகளை எழுதி படித்துக் காட்டுகிறார் சந்தியா. அதை கேட்டு சரவணன் மகிழ்ச்சி அடைகிறார் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment