Advertisment

Vijay TV Serial Mega Sangamam; தனம் மூஞ்சில அடித்த மாதிரி பேசிய செழியன்... கொதித்த முல்லை!

Vijay tv serial mega sangamam pandian stores bakiyalakshmi today episode chezhiyan angry at dhanam: ஜெனியிடம் சண்டையிடும் செழியன், தனத்திற்காக செழியனிடம் கோபப்படும் முல்லை இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial Mega Sangamam;  தனம் மூஞ்சில அடித்த மாதிரி பேசிய செழியன்... கொதித்த முல்லை!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களின் மெகா சங்கமத்தில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கவலையாக இருக்கும் கோபியிடம் மன்னிப்பு கேட்கிறான் செழியன். ஆனால் தன்னிடம் மறைத்தற்காக வருத்தப்படுகிறான் கோபி. மேலும் வீட்டில் எல்லா முடிவுகளையும் செழியன்கிட்ட கேட்டுதான் எடுப்பேன், ஆனா இப்ப செஞ்சததுதான் கஷ்டமா இருக்கு என்கிறான் கோபி. நா எதுவும் பணம் கேட்டுவிடுவேனு சொல்லலையா என கோபி கேட்க, அதற்கு செழியன் அப்படியெல்லாம் ஒன்னுமில்லை என்கிறான். நீ வீடு வாங்குறது எல்லோரும் கொண்டாட வேண்டிய விஷயம், அத இப்படி பண்ணிட்டியே என வருத்தப்படுகிறான் கோபி.

அடுத்ததாக, ஜெனிதான் எல்லாத்துக்கும் காரணம் என எழிலிடம் கோபமாக கூறுகிறான். அதற்கு எழில், நீ இப்ப கூட மறைக்கதான் பார்க்குற, அப்பா எவ்வளவு வருத்தப்படுறார் பாரு என்கிறான். சொல்ல கூடாதுனு நினைக்கல, எப்படி சொல்றதுனு தான் தெரியலை, இப்ப நா என்ன பண்ண என கேட்கிறான் செழியன். அதற்கு எழில் நீ ஜெனிக்கிட்ட சண்டை போடக் கூடாது என கூறிவிட்டு செல்கிறான்.

publive-image

அடுத்ததாக, ஜெனியிடம் போய் சண்டை போடுகிறான் செழியன். உனக்கு பொறுப்பே இல்லை, எங்க வீட்டுல எனக்கு எப்ப சொல்றதுனு எனக்கு தெரியாதா, எங்க வீட்டுல உன்ன வேணாம்னு சொன்னாங்க, ஆனா நான் தான் ஏமாந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என கத்துகிறான் செழியன். அதைக்கேட்டு அழும் ஜெனியிடம், உன்கிட்ட இந்த வேலையை சொன்னதுதான் தப்பு என அடிக்க போகிறான் செழியன். அப்போது செழியனை தடுக்கிறாள் தனம்.

பொண்டாட்டியை அடிக்கிறது தப்பு என தனம் சொல்ல, அதற்கு செழியன் இவ என் பொண்டாட்டி நா அடிப்பேன், என் குடும்ப விஷயத்துல தலையிட நீங்க யாரு என தனத்தை எதிர்த்து பேசுகிறான். உடனே எழில் அவங்ககிட்ட ஏன் அப்படி பேசுற என கேட்க, அதற்கு செழியன் நம்ம வீட்டு விஷயத்துல தலையிட அவங்க யாரு என மீண்டும் சொல்கிறான். அப்போது எழில் இந்த விஷயத்த நீ அப்பாகிட்ட பேசி சமாதானம் பண்ணாம இவங்க கிட்ட ஏன் கோபமா பேசுற என எழில் கேட்கிறான். செழியன் உடனே ஜெனியிடம் உனக்கு இப்ப சந்தோஷமா என கேட்டவாறே மீண்டும் அடிக்க போகிறான். பாக்கியா செழியனை தடுக்க, அங்கிருந்து கோபமாக கிளம்புகிறான் செழியன்.

அடுத்து, தனத்திடம் செழியன் கோபமாக பேசியதால், முல்லை நாம இங்க இருந்து கிளம்பலாம் என்கிறாள். கண்ணனும் கோபப்பட தனம் அவனை சமாதானம் செய்கிறாள். முல்லை கிளம்பலாம் என முடிவு செய்ய தனம் அவளை தடுத்து மல்லி தப்பா நினைக்க போற என்கிறாள். ஆனால் முல்லையும் கண்ணனும் கிளம்புவதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அடுத்து, ஈஸ்வரியிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டிருக்கும் செழியனிடம், தனம் கிட்ட ஏன் அப்படி பேசுன என கேட்கிறாள். அதற்கு செழியன் மீண்டும் அவங்க யாரு என கேட்க, கோபப்படும் பாக்கியா, நீ என்ன பெரிய ஆளா வந்துட்டியா?, என கேட்கிறாள். மேலும், எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு, கோபப்படுறியா என கேட்கிறாள். அடுத்து தனத்திடம் போய் மன்னிப்பு கேட்க சொல்கிறாள் பாக்கியா. அதற்கு ஈஸ்வரி செழியன் ஏன் மன்னிப்பு கேக்கனும், அவளுக்கு என்ன அக்கறை என செழியனுக்கு ஆதரவாக கேட்கிறாள். இதைக் கேட்டு கோபமடையும் பாக்கியா நான் அங்க இருந்தாலும், தனம் மாதிரி தான் செஞ்சுருப்பேன் என்கிறாள்.

publive-image

ஆனால் ஈஸ்வரி செழியனை மன்னிப்பு கேட்க சொல்லக் கூடாது என பாக்கியாவிடம் சொல்கிறாள். அப்போது பாக்கியா எந்த பொண்ணுக்கிட்டயாவது மரியாதை குறைவா பேசுனா நா சும்மா இருக்க மாட்டேன் செழியனை மிரட்டிவிட்டு செல்கிறாள்.

அடுத்து, மீண்டும் ஜெனியிடம் வந்து சண்டை போடுறான் செழியன். அப்போது பாட்டி கேட்டதால தான் சொன்னேன் என ஜெனி சொல்ல, உனக்கு இதை மறைக்க தெரியாதா, நீ என்ன சின்ன பொண்ணா, என திட்டுகிறான் செழியன். அப்போது அங்கு வரும் எழில், ஏன் அவங்கள திட்டுற என கேட்கிறான். அதற்கு செழியன் எல்லாத்துக்கும் காரணம் இவ தான், நா எப்படியாவது அப்பாவ சமாளிச்சிருப்பேன் என சொல்கிறான். இனியாவும் எழிலும் செழியனிடம் கோபப்பட, செழியன் உடனே சென்னை கிளம்புவதாக சொல்கிறான். இங்க என்ன எல்லோரும் குற்றவாளி மாதிரி பார்க்குறாங்க, சம்பந்தம் இல்லாதவங்களாம் என்னை பத்தி பேசுறாங்க என செழியன் சொல்ல, அதற்கு எழில் தனம் அக்கா சொன்னத பெரிசா எடுத்துக்காதே என்கிறான். ஆனால் செழியன் முடிவாக கிளம்புவதாக சொல்கிறான். ஜெனியை கூட அழைக்க, ஜெனி எல்லோரும் தப்பா நினைப்பாங்க என மறுக்க, ஜெனியை விட்டுவிட்டு கிளம்ப முடிவு செய்கிறான் செழியன். இதனால், ஜெனியை சமாதானம் செய்கிறான் எழில்.

செழியன் பெட்டியோடு வெளியே வர அவனை தடுக்கும் ஜெனியிடம் மீண்டும் கோபப்படுகிறான். ஈஸ்வரி வந்து செழியனை தடுக்க, அப்போது செழியன் சம்பந்தம் இல்லாதவங்களாம் என்கிட்ட கேள்வி கேப்பாங்க, நா பதில் சொல்லனுமா என தனத்தைப் பார்த்து சொல்கிறான். இதைகேட்டு எல்லோரும் அதிர்ச்சியடைய, பாக்கியா செழியனை திட்டுகிறாள்.

அட்வான்ஸ் கொடுத்துட்டு சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு என்ன தப்பா பாக்குறீங்க, இதுல சம்பந்தம் இல்லாதவங்களும் தலையிடுறாங்க என சொல்கிறான் செழியன். செழியன் வீட்டை விட்டு கிளம்ப தயாராக, எல்லோரும் அவனை தடுக்கிறார்கள். அப்போது தனம் செழியனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அப்போது முல்லை நீங்க ஏன் இவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க என பொங்கி எழுகிறாள். அப்போது யார் பேச்சையும் கேட்காமல் செழியன் சென்னைக்கு கிளம்புகிறான். அடுத்து தனம் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க, பாக்கியாவோ தனத்திடம் மன்னிப்பு கேட்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Pandian Stores Serial Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment