Advertisment

Vijay TV Serial Mega Sangamam; தனியே வீடு வாங்க போகும் செழியன்… அதிர்ச்சியில் பாக்கியா, கோபி

Vijay TV Serial pandian stores bakiyalakshmi mega sangamam eswari creates scene: கண்ணனை சமாதானப்படுத்தும் எழில், செழியன் வீடு வாங்க போறதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பாக்கியா குடும்பம் இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial Mega Sangamam; தனியே வீடு வாங்க போகும் செழியன்… அதிர்ச்சியில் பாக்கியா, கோபி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமத்தில் இன்றைய எபிஷோடில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

உனக்கு பிரசாந்த் கூட என்ன தான் பிரச்சனை என கண்ணனிடம் கேட்கிறான் எழில். அதெல்லாம் ஒண்ணுமில்லை என கண்ணன் சமாளிக்க, எழில் விடாபிடியாக என்ன பிரச்சனை எனக் கேட்கிறான். அதற்கு கண்ணன், ஐஸ்வர்யா கூட பேசுனா, பிரசாந்த்க்கு கோபம் வரும், அதான் என்கிறான். இதைக் கேட்ட எழில், அப்போ ஐஸ்வர்யாவ உனக்கு பிடிச்சிருக்கு என்கிறான். அதிர்ச்சியாகும் கண்ணன், அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என சமாளிக்க, எழில் நிஜமா சொல்றியா என கேட்கிறான். அதற்கு கண்ணன் எனக்கு மட்டும் பிடிச்சா போதுமா? என கேட்கிறான். மேலும் ஐஸ்வர்யாவுக்கு என்ன பிடிக்கல என்றும் சொல்ல, உடனே எழில் அதான் பிரசாந்த் மேல் கோபப்படுறியா என கேட்கிறான்.

ஆமாம் என சொல்லும் கண்ணனிடம், ஐஸ்வர்யாவுக்கு பிரசாந்த பிடிச்சிருக்கு, அதனால இத விட்டுடு, உனக்கு பிடிச்ச பொண்ணு உன்ன தேடி வரும் என்கிறான் எழில். மேலும் எனக்கு லவ் பெயிலியர் ஆகி இருக்கு இதெல்லாம் கொஞ்ச நாள் சரியாயிடும் என கண்ணனை சமாதானம் செய்கிறான்.

அடுத்ததாக, ஜெனி அவளின் அப்பாவிடம் போனில் பேசி கொண்டிருக்கும் போது, அங்கு வரும் ஈஸ்வரி, என்ன விஷயம் என கேட்கிறாள். அதற்கு செழியன் தான் பேச சொன்னான் என உளறி விடுகிறாள் ஜெனி. இதற்கு ஈஸ்வரியோ வேற ஊருக்கு வந்தா நீதான் போன் பண்ணி உங்க வீட்ல சொல்லனும், அதையும் செழியன் சொல்லிதான் செய்வியா என கேட்கிறாள். அப்போது ஜெனி, வேற ஒரு விஷயமா செழியன் எங்க அப்பாகிட்ட பேச சொன்னான் என்கிறாள். என்ன விஷயம் என ஈஸ்வரி கேட்க, சும்மா நல்லா இருக்காங்களானு கேட்க சொன்னான் என்கிறாள். ஆனால் சந்தேகமடையும் ஈஸ்வரி, விடாபிடியாக நீ எதையோ என்கிட்ட மறைக்கிற, என்ன விஷயம்னு சொல்லு என்கிறாள்.

publive-image

ஒரு வழியாக ஜெனி, பிளாட் வாங்க போகும் விஷயத்தை சொல்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஈஸ்வரி. அப்போது ஜெனி, செழியனுக்கு ஒரு தனி வீடு வாங்கனும்னு ஆசை, ஆனா நா வேண்டாம்னு தான் சொன்னேன், ஆனா அவன் வீடு வாங்க எங்க அப்பாகிட்ட அட்வான்ஸ் கொடுக்க சொன்னான், என்கிறாள். எங்க கிட்ட சொல்லாமா அட்வான்ஸ் கொடுக்கற வரைக்கும் போய்ட்டானா என கோபப்படுகிறாள்.  அதற்கு ஜெனி செழியன் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சொல்லாம இருக்கலாம் என்கிறாள். ஆனால் சமாதானம் அடையாத ஈஸ்வரி கோபமாக அங்கிருந்து செல்கிறாள்.

அடுத்ததாக, இனியாவை படமாக வரைகிறான் எழில். அப்போது கஸ்தூரி, செல்வி என்ன மாதிரி இருப்பாளா என கேட்கிறாள். அடுத்து கஸ்தூரியை படமாக வரைகிறான் எழில். ஆனால் எழில் படம் வரைவதை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அடுத்து மல்லியும் என்னை வரைஞ்சு கொடுங்க என கேட்கிறாள். வரைந்த பின் எல்லோரிடமும் கொடுத்து ஒரே நேரத்தில் பார்க்க சொல்கிறான் எழில். அதில் எல்லோரையும் அசிங்கமாக வரைந்து இருப்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இனியா எழிலை அடிக்க துரத்த, அவன் அங்கு வரும் கோபி மீது போய் விழுகிறான். கோபி எழிலை திட்டுகிறான். அடுத்து கோபியும் பிரசாந்தும் மீன், கறி எல்லாம் வாங்கி வந்ததாக கூற எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். சென்னையில் கோபி இதுவரை எதுவுமே செய்ததில்லை எனவும் சொல்கிறாள் ஜெனி.

அடுத்ததாக, ஈஸ்வரியை மல்லி சாப்பிட கூப்பிட வர மறுக்கிறாள். பாக்கியா வந்து என்ன விஷயம் என கேட்க, உடனே அழுக ஆரம்பிக்கிறாள் ஈஸ்வரி. கஸ்தூரி போய் கோபியை அழைத்து வர, ஈஸ்வரி, செழியன் தனியாக வீடு வாங்குவதைப் பற்றி கூறுகிறாள். இதைக் கேட்டு கோபியும் பாக்கியாவும் அதிர்ச்சியாகிறார்கள். செழியன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான் என கோபி மறுக்க, அதற்கு நீ இப்படியே நம்பிக்கிட்டு இரு, அவன் ஜெனிய கூட்டிக்கிட்டு தனியா போக போறான் என்கிறாள் ஈஸ்வரி.

publive-image

உடனே கோபி பாக்கியாவிடம் செழியனை அழைத்து வரச் சொல்கிறான். அங்கு வரும் செழியனிடம் தனியா வீடு வாங்க போறியா என கேட்கிறான் கோபி. எதுவும் சொல்ல முடியாமல் தடுமாறுகிறான் செழியன். அப்போது ஜெனி நடந்த விஷயங்களைக் கூறுகிறாள். அதன்பின் கோபி இத ஏன் எங்ககிட்ட மறைச்ச என கேட்கிறான். பாக்கியாவோ நீ தனியா போக போறியா என கேட்க, இல்ல சும்மா வாங்கி போடலாம்னு இருக்கேன் என்கிறான். அதற்கு கோபி சந்தோஷமான விஷயம் தானே, எங்க கிட்ட ஏன் சொல்லல என கேட்கிறான்.

publive-image

நீ எங்கள விட்டு விலகி போக போறியா என கோபப்படுகிறாள் ஈஸ்வரி. எழில் வீட்டில் எல்லாத்தையும் சொல்றான், ஆனா நீ மறைச்சிட்டே என சொல்கிறாள். இத எங்ககிட்ட சொல்லிருந்தா எங்களுக்கும் சந்தோஷம் தானே என கோபி சொல்ல, அதற்கு செழியன் எல்லாம் முடிஞ்ச பின் சொல்லலாம்னு நினைச்சேன் என்கிறான். உடனே கோபி கோபமாக வெளியே கிளம்புகிறான். பாட்டியோ அழுதுக் கொண்டே இருக்கிறாள். அப்போது பாக்கியா, ஜெனிக்கு சொல்லனும்னு தோணிருக்கு ஆனா உனக்கு தோணலை என செழியன் மீது கோபப்பட்டு கிளம்புகிறாள்.

அடுத்ததாக, கோபி குடும்பத்தில் ஏதோ சண்டை என மல்லியிடம் கூறுகிறாள் கஸ்தூரி. அப்போது அங்கு பாக்கியா வந்து யாரும் சாப்பிடலையா என கேட்கிறாள். தனம் என்ன பிரச்சனை என கேட்க, நடந்ததை கூறுகிறாள் பாக்கியா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Pandian Stores Serial Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment