Advertisment

Vijay TV Serial: பார்வதி மேல் பொய் சொல்லாதீங்க... சந்தியாவிடம் கோபப்பட்ட சரவணன்!

சரவணன், “உங்களுக்கு இங்க இருக்க இஷ்டம் இல்லைனா அதை வெளிப்படையா எங்கிட்ட சொல்லுங்க… அதைவிட்டுட்டு இப்படி ஒவ்வொருத்தர் மேலயும் தப்பு சொல்லிகிட்டு இருக்காதீங்க, ” என்று சந்தியாவிடம் கடுமையாக பேசிவிட்டு செல்கிறான்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial, Raja Rani 2 Serial, Raja Rani 2 Serial today episode, Sandhya Complaint at Saravanan about Parvathy, Alya Manasa, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடு, பார்வதி, சந்தியா, சரவணன், சந்தியாவிடம் கோபப்பட்ட சரவணன், Raja Rani 2 serial story, raja rani story today, raja rani 2 serial updates

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின் இந்த வாரம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளின் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அதில், சந்தியாவின் நாத்தனார் பார்வதியை அவளுடைய பாய் ஃபிரண்ட் ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே அவன் பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். அப்போது பார்வதியை பிண்தொடர்ந்து வந்த சந்தியா கதவை உடைத்துச் சென்று அதிரடியாக காப்பாற்றுகிறாள். அவன் சந்தியாவை தாக்க முயற்சிக்கும்போது சரவணன் வந்து காப்பாற்றுகிறான். இப்படி அந்த புரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ஆல்யா மானசா நடிக்கிறார். ஹீரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். சந்தியாவின் நாத்தனார் பார்வதி கதாபாத்திரத்தில் வைஷ்ணவி சுந்தர் நடிக்கிறார்.

இந்த நிலையில், ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சந்தியா தனது நாத்தனார் பார்வதி காலேஜ்க்கு போவதாக சொல்லிவிட்டு ஒரு பையனுடன் பைக்கில் போனதை பார்த்துவிட்டு, அது பார்வதிதான் அதே பேக், அதே டிரஸ் சந்தேகமே இல்லை என்று பெட்ரூமில் அமர்ந்து கொண்டு யோசித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது, சரவணன் உள்ளே வந்ததுகூட தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறால்.

சரவணன் நம்மிட விவாகரத்து கேட்பதற்குத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்களோ என்று நினைத்துக்கொள்கிறான். ஆழ்ந்த யோசனையில் வெளியே வரும் சந்தியா, சரவணனிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் கோபப்படாமல் கேளுங்கள் என்று கூறுகிறாள். ஆனால், சரவணன், அவள் விவாகரத்துதான் கேட்கப் போகிறாள் என்று தவறாக நினைத்துக்கொண்டு நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். அவன் சொன்னதைக் கேட்டு சந்தியா என்ன தயாராக இருக்கிறீர்கள் என்று கேட்கிறாள். சரவணன் ஒன்றுமில்லை நீங்கள் சொல்லுங்கள் என்று கூறுகிறான்.

அதற்கு சந்தியா, மார்க்கெட்டுக்கு போய்விட்டு வரும்போது பார்வதி ஒரு பையனோட பைக்கில் போனதை பார்த்தேன். அதே டிரஸ், அதே பேக், எனக்கு தெரியும் அது பார்வதியேதான். ஆனால், வீட்டுக்கு வந்து காலேஜ்தான் போனயா என்று கேட்டதற்கு அவள் பதற்றமாகி தடுமாறினாள் என்று கூறுகிறாள். பார்வதி நல்ல பொண்ணுதான். தவறு செய்ய மாட்டாள். ஆனால், தப்பா யார்கிட்டயாவது மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று பக்குவமாக எடுத்துக் கூறுகிறாள்.

இதைக் கேட்டுக்கொண்ட சரவணன், நேராக சென்று பார்வதியிடம் கேட்க போகிறான். பார்வதி தனது அறையில், சந்தியா தன்னை காலேஜ் போனயா என்று கேட்டதை நினைத்து பார்த்திருப்பாங்களோ என்று யோசித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வரும் சரவணன், பார்வதி காலேஜ் போனயாமா என்று கேட்கிறான். பார்வதி பதற்றமாகி அதை மறைத்துகொண்டு காலேஜ் போய்விட்டு வந்துட்டேன் என்று சொல்கிறாள். போய்விட்டு யார் பைக்கில வந்து என்று கேட்டு பார்வதிக்கு ஷாக் கொடுக்கிறான். ஆனால், பார்வதி தான் யார் பைக்கிலும் போகவே இல்லை என்று அழுது சாதித்துவிடுகிறாள்.

சரவணன் போன பிறகு, பார்வதி இந்த சந்தியா அண்ணிதான் பார்த்திருப்பாங்க… என்னையா போட்டு குடுகிற, இருங்க நேரம் வரும்போது உங்களை வகையா போட்டு கொடுக்கிறேன். இனிமேல் யார் கேட்டாலும் இப்படி அழுது இல்லைனு சாதிச்சுடனும்.” என்று சொல்லிக்கொள்கிறாள்.

சரவணன் சந்தியாவிடம் சென்று பார்வதியிடம் கேட்டுவிட்டேன். அவள் பைக்கில் போகவில்லை என்று சொல்கிறாள் என்று கூறுகிறான். ஆனால், சந்தியா நான் அவளைத்தான் பார்த்தேன் என்று சொல்கிறாள். அதற்கு சரவணன், நான் நீங்க பொய் சொல்ல மாட்டீங்கனு நம்புறேன். நான் உங்களை எப்படி நம்புறேனோ அதே போலதான் பார்வதியையும் நம்புறேன். நீங்க வேற யாரையாவது பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சரி விடுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறான்.

வீட்டின் கூடத்தில் சிவகாமி, ஒரு சீட் எடுத்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் சிவகாமி, பாட்டி சொன்ன சம்மந்தத்தைப் பற்றி கேட்கிறாள். அதற்கு சரவணன், அது பார்வதிக்கு பிடிக்க வேண்டும் இல்லையா என்று கேட்கிறான். அதற்கு சிவகாமி, நீ என்னப்பா நினைக்கிற என்று கேட்கிறார். அதற்கு சரவணன், நல்ல ஆட்களாகத்தான் தெரிகிறார்கள். மாப்பிள்ளை நல்லா படிச்சிருக்கிறார். நல்லா பேசுறார் நல்ல ஆளாகத்தான் தெரிகிறார் என்று கூறுகிறான்.

அதற்கு சிவகாமி, எனக்கும் அப்படிதான் தோணுது என்று கூறுகிறார். பிறகு, போன் நம்பர் எழுதிய சீட்டை சரவணனிடம் கொடுத்து போன் பண்ணச் சொல்கிறார். சரவணனும் போன் நம்பரை அழுத்தி போன் பண்ண முயற்சிக்கிறான். அதற்குள் சிவகாமி என்ன நினைத்தாரோ வேண்டாம் வேண்டாம் என்று தடுத்துவிடுகிறார். சரவணன் ஏன் என்று கேட்டதற்கு, இந்த சம்மந்தம் உங்க பாட்டி பார்த்தது. நாமலே பேசினா அப்புறம் நீயே முடிவு எடுக்கிற அளவுக்கு ஆயிட்டயா என்று என்னைதான் திட்டுவாங்க என்று கூறுகிறார். பிறகு, சரவணனிடம் பாட்டிக்கு போன் பண்ண சொல்கிறார். சரவணன் போன் பண்ணும்போது அங்கே சுந்தரம் வருகிறார். என்ன சிவகாமி எங்க அம்மாவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி உங்க அம்மாவுக்கு போன் பண்றேன். தனியா இருக்கிறீங்களே உங்க அம்மாவை வரவழைக்கலாம்னுதான் என்று கூறுகிறார்.

உற்சாகம் அடையும் சுந்தரம், எங்க அம்மா வந்தால் வீடே ஜெகஜோதியாக இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி, உங்க அம்மா, நம்ம பார்வதிக்கு ஒரு சம்மந்தம் பார்த்தாங்க இல்லை. அதைப் பற்றி பேசத்தான் உங்க அம்மாவுக்கு போன் பண்றோம் என்று கூறுகிறார். அப்போது அங்கே வருகிறாள் பார்வதி. பாட்டிக்கு போன் பண்ணும் சரவணன் ரிங் போகிறது ஆனால் போன் எடுக்கவில்லை என்று கூறுகிறான்.

தனக்கு கல்யாண ஏற்பாடு செய்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு பார்வதி கவலைப்படுகிறாள். இரவு நேரம் ஆனதும், பார்வதி தனது பாய் ஃபிரண்ட் விக்கிக்கு போன் பண்ணுகிறாள். தனக்கு வீட்டில் கல்யாண பண்ணம் மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறுகிறாள். அதோடு, சந்தியா அண்ணி நாம பைக்ல போகும்போது பார்த்திருப்பாங்க போல என்று கூறுகிறாள். அதற்கு விக்கி சரி என்ன பண்ணலாம் என்று கேட்கிறான். பார்வதி அது தெரியாமல்தானே நான் உனக்கு போன் பண்றேன். எங்க குடும்பத்தில எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துட்டாங்கனா அப்புறம் ஃபோர்ஸ் பண்ணி ஒத்துக்க வச்சிடுவாங்க என்று கூறுகிறாள். அதற்கு அவன் சரி பயப்படாத நான் சொல்ற மாதிரி செய் என்று கூறுகிறான்.

பார்வதி போனில் பேசிக்கொண்டிருக்கும்போது மறைவாக இருந்து கேட்டுக்கொண்டிருந்த சந்தியா உடனடியாக சென்று தனது கணவன் சரவணனிடம், பார்வதி யார்கிட்டயோ போனில் பேசுகிறாள், நான் ஏற்கெனவே சொன்னெ நீங்க நம்பல என்று கூறுகிறாள். அதற்கு சரவணன், நீங்க பார்வதியைப் பற்றி ஏதோ தவறான அபிப்பிராயத்தை உங்க மனசுல உருவாக்கிட்டீங்க. அதனாலதான் அவள் எது செய்தாலும் தப்பா தெரியுது. முன்னாடி, நீங்க பார்வதி பைக்ல போனானு சொல்லி கேட்கப் போய் அவளுக்கு கஷ்டமாயிடுச்சு. எனக்கும் கஷ்டமாயிடுச்சு என்று கூறுகிறான். அதற்கு சந்தியா, “இல்லை, இப்போதும் வீட்ட்ல கல்யாண ஏற்பாடு பேசுவது பற்றி யாரோ ஒரு பையனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். நான் அப்பவும் பொய் சொல்லலை, இப்பவும் பொய் சொல்லலை, நீங்க வேனால் போய் அவ போன்ல பேசிகிட்டு இருப்பதை போய் பாருங்க.. போய் கேளுங்க என்று கூறுகிறாள்.

சந்தியா சொன்னதைக் கேட்டு சரவணன் நேராக சென்று பார்வதியிடம் கேட்கப் போகிறான். போனில் பேசிக்கொண்டிருந்த பார்வதி சரவணன் வருவதைப் பார்த்துவிட்டு போனைக் கட் பண்ணிவிட்டு தனது தோழிக்கு போன் பண்ணி சொல்லுடி என்று பேசுகிறாள். சரவணன், நேராக சென்று பார்வதியிடம் போனில் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறான். அதற்கு பார்வதி என்னோட ஃபிரண்ட் ஜானகியிடம் பேசுவதாகக் கூறுகிறாள். சரவணன் போனை வாங்கி யார் பேசுவது என்று கேட்கிறான். மறு முனையில் நான் ஜானகி பேசுவதாகக் பெண் குரல் கேட்கிறது. பிறகு, போனை பார்வதியிடம் கொடுத்துவிட்டு நேராக அறைக்கு வருகிறான். என்ன ஆச்சு என்று கேட்கிறாள். பார்வதி போனில் பேசியது யார் என்று கேட்கிறாள். அதற்கு, சரவணன் கோபமடைந்து, ஏங்க நான் ஏற்கெனவே செம கோபத்தில இருக்கிறேன். நீங்க வேற கடுப்பை கிளப்பாதீங்க, நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க, நீங்க மட்டும்தான் நல்லவங்க… மத்தவங்க எல்லாம் தப்பு பண்ணிகிட்டு இருக்கோம்னா” என்று கேட்கிறான். இதைக் கேட்டு ஷாக் ஆகும் சந்தியா, “ஏங்க நான் எங்க அப்படியெல்லாம் சொன்னேன்” என்று கேட்கிறாள்.

அதற்கு சரவணன், ஆமாம் நீங்க வேற எப்படி சொன்னீங்க, பார்வதி, பைக்ல போனா, பார்வதி யார்கிட்டயோ போன்ல பேசிட்டு இருக்கிறானு, அதுவும் நம்ம வீட்ல கல்யாணம் ஏற்பாடு பண்றதைப் பத்தி யார்கிட்டயோ போன்ல சொல்றானு சொன்னீங்க இல்லை என்று கோபமாக கேட்கிறான். அதற்கு சந்தியா நான் சொல்றது எல்லாமே நிஜமங்க, அவள் பேசினதை நான் கேட்டேன். அதை உங்ககிட்ட வந்து சொன்னேன்.

அதற்கு சரவணன், அவள் போனில் பேசினது அவள் பையன் கூட பேசல, அவள் ஃபிரண்ட் கூட பேசிகிட்டிருந்தாள். அந்த பொண்ணோட குரலை நானே கேட்டேன். ஆனால் உங்கள் கற்பனையில பார்வதி ஒரு பையன்கூடதான் போன்ல பேசினானு சொல்றீங்க. எனக்கு தெரியாமல்தான் கேட்கிறேன். உங்களுக்கு என்ன பிரச்னை. ஏன் அவ மேலை பழியை போட்டுகிட்டு இருக்கிறீங்க என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, “நிஜமா நான் பொய் சொல்லைங்க, பார்வதி பத்தி நான் பொய் சொல்லி என்ன பண்ணப்போறேன்” என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், அதை நீங்கதாங்க சொல்லனும், ஆனால், நீங்க சொன்னதெல்லாம் முழு பொய். அவள் எந்த பையன் கூடயும் பேசலைங்க. எனக்கு இப்பதான் தோணுது. நீங்க பார்வதியை ஒரு பையங்கூட பார்த்ததுகூட பொய்யா இருக்குமோனு தோணுது.” என்று கூறுகிறான். இதைக்கேட்டு சந்தியா அழுகிறாள்.

தொடர்ந்து பேசும் சரவணன், நீங்கள் உங்கள் மனதில் பார்வதியைப் பற்றி தப்பான எண்ணத்தை வைத்திருக்கிறீர்கள். அதனால்தான், இல்லாத விஷயத்தை இட்டுக்கட்டி சொல்லிகிட்டு இருக்கீங்க… உங்களால தேவையில்லாம பார்வதியை சந்தேகப்பட்டு பேசிட்டேன். நீங்க எதுக்கு தேவையில்லாமல் அவளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க. அவளை எதுக்கு வேவு பாக்குறீங்க… உங்களுக்கு எதுக்குங்க இந்த சிஐடி வேலை. இங்க பாருங்க இந்த குடோனுக்கு தீ வைச்சது. கடைக்கு சீல் வைச்சது. இந்த மாதிரி முக்கியமான விஷயம் எல்லாம் நீங்க சொன்னது சரியா இருந்துச்சு நான் ஒத்துக்கறேன். ஆனால், இதெல்லாம் குடும்ப பிரச்னைங்க. ஒருத்தரைப் பற்றி தப்பா பேசிட்டு திரும்பத்திரும்ப போய் கேட்டோம்னு வச்சுக்கோங்க, அசிங்கமா போயிடும். இப்பவே பார்வதி என்னைப் பத்தி என்னை நினைச்சுகிட்டு இருக்கிறானு தெரியல என்று கூறுகிறான்.

அதற்கு சந்தியா, “பார்வதியை என்னுடைய தங்கச்சியா நினைச்சுதான் நான் சொன்னேன்” என்று கூறுகிறாள். அதற்கு சரவணன், “நல்லது அதை இத்தோட நிறுத்திக்கோங்க… வீட்டுக்குள்ள உளவு பார்த்தது பத்தாதுனு, என்னை வேற செய்ய வெச்சிட்டீங்க. உங்களை சொல்லக்கூடாதுங்க… என் தப்பு. நீங்க சொன்ன உடனே யோசிக்காம அறிவுகெட்டத் தனமா நேரா போய் பார்வதிகிட்ட பேசிட்டு வந்தேன் பாருங்க என்ன சொல்லனும். உங்களுக்கு இங்க இருக்க இஷ்டம் இல்லைனா அதை வெளிப்படையா எங்கிட்ட சொல்லுங்க… அதைவிட்டுட்டு இப்படி ஒவ்வொருத்தர் மேலயும் தப்பு சொல்லிகிட்டு இருக்காதீங்க, நீங்க மத்தவங்க மேல எல்லாம் குத்தம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க நல்லவிதமாதான் நடந்துக்கிறீங்களானு யோசிச்சு பாருங்க…” என்று கடுமையாக பேசிவிட்டு செல்கிறான். இதைக்கேட்டு பார்வதி மிகவும் வருத்தம் அடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Alya Manasa Raja Rani 2 Raja Rani 2 Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment