ஊரடங்கு காலத்தில் விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் நாயகி ஜாக்குலின் கிராமத்து பம்புசெட்டில் ஜாலியாக குளிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து சினிமா, டிவி சீரியல்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், சினிமா, டிவி நடிகர்கள், நடிகைகள் வீட்டில் ஒய்வெடுத்து வருகின்றனர்.
நடிகைகள் பலரும் குவாரண்டைன் காலத்தில் கொரோனா வைரஸ் பற்றியும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவரக்ள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் அதே நேரத்தில் ரசிகர்களுக்காக வேடிக்கையான பொழுதுபோக்கு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ஜாக்குலின். இவர் விரைவிலேயே அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ சீரியலில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். தேன்மொழி சீரியலுக்கு தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜாக்குலின் பிரபலமானார். இதனால் ஜாக்குலின் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
View this post on Instagram
Kulichitu erukom ???????? #Thaenmozhi ❤️
A post shared by Jacquline Lydia (@me_jackline) on
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், ஜாக்குலின் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் தனது தாயுடன் கிராமத்து பம்பு செட்டில் ஜாலியாக குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ஜாக்குலின் அவருடைய அம்மாவுடன் பம்பு செட் தொட்டியில் இருக்கிறார். அப்பொது ஒருவர் நீங்கள் இரண்டு பேரும் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது திடீரென பம்புசெட் பைப்பிலிருந்து தண்ணீர் வர ஜாக்குலின் நனைந்துபோகிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட ஜாக்குலின் “குளிச்சிட்டு இருக்கோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் தேன்மொழி சீரியல் நாயகி ஜாக்குலின் ஜாலியாக கிராமத்து பம்புசெட்டில் குளிக்கும் வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.