Advertisment

விஷால், சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம்.. நீதிமன்றம் உத்தரவு

விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

author-image
WebDesk
New Update
Actor Vishal house attacked in Anna Nagar Chennai

நடிகர் விஷால்

21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். அந்த கடனை லைகா நிறுவனம் செலுத்தியது.

இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடனை செலுத்தாமல் "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், "15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்" என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது,  உத்தரவை அமல்படுத்தாதது குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார்.

லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால், பணத்தை செலுத்தவில்லை; ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதற்கும் வட்டி கட்டி வருகிறார். 6 மாதங்கள் ஆனாலும் செலுத்த இயலாது என, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில் விஷால்  தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். வேண்டுமானால் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யட்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் அன்றைய தினம் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.சுந்தர் விசாரணைக்கு வந்தபோது விஷால் ஆஜராகவில்லை.

விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment