Advertisment

சினிமாவை காதலிப்பவர் உதயநிதி - நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி

அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை எனவும் குள்ளநரி கூட்டம் படம் ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் அலுவலகத்தில் ஆபிஸ் பாய் போல் காத்திருந்தேன் என்று விஷ்ணு விஷால் கூறினார்.

author-image
WebDesk
New Update
vishnu vishal, udhaynidhi, Ishwarya lakshmi, Tamil Cinema, Tamilnadu, விஷ்ணு விஷால், உதயநிதி, தமிழ் சினிமா, ஐஸ்வர்யா லட்சுமி

தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுவதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Advertisment

அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை எனவும் குள்ளநரி கூட்டம் படம் ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் அலுவலகத்தில் ஆபிஸ் பாய் போல் காத்திருந்தேன் என்று விஷ்ணு விஷால் கூறினார். விஷ்ணு விஷால் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சியான போஸ்டர் குறித்தும் பேட்டியின் போது பதில் அளித்தார்.

publive-image

கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள கட்டா குஷ்டி திரைப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக படக்குழுவினர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர்.

சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும் படத்தின் மையக் கருத்து குறித்தும் பல்வேறு தகவல்களை விஷ்ணு விஷால் பகிர்ந்து கொண்டார்.

publive-image

ஆணும் பெண்ணும் சமம் மற்றும் கணவன் மனைவி இடையே ego நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனவும் தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது என கூறினார். திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் content எதிர்பார்க்கிறார்கள் என்று விஷ்ணு விஷால் கூறினார்.

தொடர்ந்து பேசிய விஷ்ணு விஷால், திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன. தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுவதாகக் கூறினார்.

publive-image

சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் குறித்து பேசும்போது அந்த புகைப்படங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இயக்குனர்கள் கதை எழுதும்போது நானும் அதற்கு பொருந்துவேன் என நினைக்கும் வகையிலும், fitness தொடர்பாகவும் மட்டுமே வெளியிட்டதாக கூறினார்.

மேலும், ரன்வீர் சிங் புகைப்படம் எடுத்து வெளியிடும் முன்னரே இந்த புகைப்படங்களை தன் மனைவி எடுத்து வைத்து விட்டதாகவும், உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதை பெண்கள் சமூக வலைதளங்களில் இடும்போது பாராட்டுபவர்கள் ஆண்கள் வெளியிடும் போது அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து, ரெட்ஜெயண்ட் நிறுவனமே அனைத்து திரைப்படங்களையும் வெளியிடுகின்றனவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நாங்கள் கேட்பதால்தான் அவர்கள் முன்வந்து வெளியிடுகிறார்கள்.

எனது படங்களுக்கு சிக்கல் வந்த போதும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதும் சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை எனக்காக அவர்கள் வெளியிட்டு கொடுத்தார்கள்.

எனவே, அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை என்று கூறினார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்குகிறாரா என்ற கேள்விக்கு, சமூக வலைதளங்களில் இதை போன்று படித்தேன் எனவும், அவர் அவ்வாறு தமிழ் திரையுலகில் தனது புதிய முயற்சிகளை எடுத்தால் அது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கும் அவருக்கும் இடையிலான உறவு அனைவரும் அறிந்ததே என்று விஷ்ணு விஷால் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Vishnu Vishal Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment