Advertisment

ராஜ்கபூருடன் அந்த விவகாரம் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்: வைஜயந்தி மாலா சர்ச்சை; ரிஷி கபூர் ரியாக்ஷன்

எனது தந்தைக்கு நர்கிஸ் ஜியுடன் தொடர்பு இருந்தபோது நான் சிறுவனாக இருந்தேன், அதனால் எனக்கு அந்த பாதிப்பு தெரியவில்லை.

author-image
WebDesk
New Update
ராஜ்கபூருடன் அந்த விவகாரம் ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்: வைஜயந்தி மாலா சர்ச்சை; ரிஷி கபூர் ரியாக்ஷன்

பாலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகான ராஜ் கபூர் தனது  நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான சங்கம் திரைப்படத்தில் வைஜெயந்திமாலாவை நடிக்க வைத்தபோது, ​​இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்ததாக வதந்திகள் பரவின. ராஜ் கபூர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த நிலையில். இந்த வதந்தி கபூர் குடும்பத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.

Advertisment

ஆனால் அவர்களின் உறவு பற்றிய வதந்திகள் முற்றிலும் தவறானவை என்றும், வைஜெயந்திமாலா பந்தம்... என்ற தனது நினைவுக் குறிப்பில்,  ஆர்.கே. "விளம்பரம் பெறுவதற்கும் தலைப்புச் செய்திகளைப் சுவாரஸ்யப்படுத்தவதற்காக மிகவும் ஆசைப்பட்டவர். அதனால் தான் நான் அவருடன் காதல் வயப்பட்டதாக வதந்திகள் பரவின.

இந்த ‘முட்டாள்தனம்’ ராஜ் கபூரின் பிஆர் செய்த ‘சூழ்ச்சித்தனம்’ என்று வைஜெயந்திமாலா குறிப்பிட்டுள்ளார். ஆனால் “ஊடகத்தைச் சேர்ந்த எவரும் எனது கருத்தைத் தெரிந்துகொள்ள அக்கறை காட்டவில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் இதனால் எனக்கு மிகவும் கோபம் தான் வந்தது என்று அவர் தனது நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சங்கம் படம் தயாரித்த 4 ஆண்டுகளில், ஆர்கே "பெண்கள் மீது ஆர்வம் கொண்டவர் என்பதை அவர் கவனித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர் ஆர்.கே. ஸ்டுடியோவின் விளம்பரப் பிரிவு ராஜ் கபூரின் பிம்பத்தை உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆர்.கே. பெண்களை விரும்புபவர் மற்றும் இந்த மாதிரியான விவகாரங்களில் ஈடுபடுவது என்பது தொழில்முறை தந்திரங்களின் ஒரு பகுதி இது ஒரு ஸ்டண்ட் பிரச்சாரம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

தொடர்ந்து மதுமதி நடிகர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியிட்ட தனது வாழ்க்கை வரலாற்றில், ராஜ் கபூருடனான தனது உறவை எப்படி முறித்துக்கொண்டார் மற்றும் தன்னை விளம்பரத்திற்காக எவ்வாறு அழைத்தார் என்பதில் கபூர் குடும்பம் தெரிந்துகொள்ளவில்லை அதேபோல் ராஜ் கபூரின் மகனும், மறைந்த நடிகருமான ரிஷி கபூர் தனது நினைவுக் குறிப்பான குல்லம் குல்லாவில் இது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

raj kapoor

ரிஷி தனது தந்தை வைஜெயந்திமாலாவுடன் இருந்தபோது, ​​​​அவரது தாய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று கூறியிருந்தார்.“எனது தந்தைக்கு நர்கிஸ் ஜியுடன் தொடர்பு இருந்தபோது நான் சிறுவனாக இருந்தேன், அதனால் எனக்கு அந்த பாதிப்பு தெரியவில்லை. வீட்டிலும் எதுவும் தவறாக இருந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால் அப்பா வைஜெயந்திமாலாவுடன் தொடர்பு கொண்ட காலத்தில் என் அம்மாவுடன் மரைன் டிரைவில் உள்ள நட்ராஜ் ஹோட்டலுக்குச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது,” என்று அவர் எழுதியிருந்தார்.

ராஜ் கபூர் இந்த விவகாரத்தை முடிக்கும் வரை நான் என் தாயருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் எழுதியிருந்தார். அதேபோல் வைஜெயந்திமாலாவின் விவகாரத்தை மறுத்ததையும் ரிஷி குறிப்பிட்டுள்ளார். “சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், வைஜெயந்திமாலாவுக்கு என் தந்தையுடன் தொடர்பு இல்லை என்று ரிஷி மறுப்பு தெரிவித்திருந்தார்.

விளம்பர பசியின் காரணமாக அவர் காதலை உருவாக்கியதாக வதந்திகள் பரவியதைகவும், இதனால் தனக்கு கோபம் வந்ததாகவும் கூறியிருந்த அவர். அவரால் எப்படி இவ்வாறு நடந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்கிறீர்களா? அல்லது உண்மையைக் சொல்ல அவர் அருகில் இல்லாததால், நடந்ததை மறைக்க முயற்சிக்கிறாரா என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.

மேலும் “அவரது (வைஜெயந்திமாலா) புத்தகம் வெளிவந்ததும், எனது கருத்துக்களை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். அப்போது நான் நினைத்ததை அவர்களிடம் சொன்னேன். காலப்போக்கில் என் கோபம் தணிந்தது. மக்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக சங்கடமான உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,

ஆனால் அப்பா உயிருடன் இருந்திருந்தால், அவர் இந்த விவகாரத்தை இவ்வளவு திட்டவட்டமாக மறுத்திருக்க மாட்டார் அல்லது அவரை விளம்பரப் பசி என்று அழைத்திருக்க மாட்டார் என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும், ”என்று அவர் எழுதியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment