Advertisment

கருப்பின் அரசியல் கலாசாரம் வரலாறு!

எதிர்ப்பின் அங்கமாக பார்க்கப்படும் கருப்பு, நிகழ்கால கலாசாரத்தில் எப்படி பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Black in history culture and politics

டெல்லியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கருப்பு ஆடை அணிந்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி மற்றம் காங்கிரஸ் எம்.பி.க்கள்.!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி பேசுகையில், ” குறுகிய மனப்பான்மையில் சூன்ய கருத்துக்களை விதைக்கின்றனர்” என்று யாரையும் குறிப்பிடாமல் பேசினார். தொடர்ந்து, “விரக்தியின் காலம் கருப்பு ஆடையோடு முடிந்துவிடாது” என்றும் கூறினார்.

Advertisment

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உங்களது தோல்வியை மறைக்க இதுபோல் பேசுவதை முதலில் நிறுத்துங்கள். பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமர் நரேந்திர மோடி கருப்பு ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “கருப்பு பணத்தை தவறவிட்டவர்,

தற்போது அர்த்தமற்ற பிரச்னைகளை கையில் எடுக்கிறார் எனக் கூறியிருந்தார்.

மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “வேலையில்லாத திண்டாட்டம் மற்றும் பொருளாதார பிரச்னைகளை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் மீது புகார் அளிப்பதை நிறுத்திவிட்டு நாட்டில் பரவியுள்ள இந்த இருள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

எதிர்மறை விஷயங்களுக்கு கருப்பு ஏன்?

எலன் கான்ராய் மெக்கஃபேரி என்பவரால் ( Ellen Conroy McCaffery )1921ஆம் ஆண்டு எழுதப்பட்ட தி சிம்போலிஷம் ஆஃப் கலர் (The symbolism of colour) என்ற புத்தகம் விஞ்ஞானம் கருப்பை ஒரு நிறமாக கூட பார்ப்பதில்லை. ஏனெனில் இது ஒளியை பிரதிபலிக்காது. மாறாக அனைத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது எனக் கூறியது.

publive-image

அந்த வகையில் மேற்கத்திய உலகம் கருப்பை ஒரு துக்க நிறமாகவே பார்த்தது. நாளாக நாளாக இது சடங்குகளின்போது அணியப்படும் ஒரு வண்ணமாக மாறிப்போனது. அதேபோல் ஒருவரை புறக்கணிக்க கருப்பு ஆடு, கருப்பு பட்டியல் ஆகிய சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன.

கருப்பு நாள் என்பது ஏமாற்றத்தை குறிக்கும் சொல் ஆகும். கருப்பு பணம் என்ற சொல்லும் இவ்வாறு வந்ததுதான்.

கருப்பு என்பது எதிர்மறை மட்டும்தானா?

இல்லை. இல்லவே இல்லை. கருப்பு என்பது ஞானத்தின் நிறம் என ஜான் மில்டன் என்ற கவிஞர் கூறுகிறார். மறுபுறம் வெள்ளை என்பது ஒளியின் மொத்த பிரதிபலிப்பாகும். ஆகவே கருப்பு மற்றும் வெள்ளை நன்மை, தீமையுடன் தொடர்புடையது.

பண்டை காலத்தில் எகிப்தின் நைல் நதியின் கருப்பு மண்ணில் விவசாயம் நன்றாக செழித்து வளர்ந்தது. இதனால் கருப்பு நல்ல நிறமாக பார்க்கப்பட்டது. இது குறித்து எழுத்தாளரும் ஆசிரியருமான கேட் கார்டர் தி கார்டினியனில் எழுதுகையில், கருப்பு மம்மிஃபிகேஷம் மற்றும் அனுபிஸின் கடவுளாக பார்க்கப்பட்டது.

இது எதிர்மறையோ அல்லது தீய சக்தியோ அல்ல. உண்மையில் பாதுகாவலர். தீமைக்கு எதிராக இறந்தவர். அந்த வகையில் கருப்பு தீமைக்கு எதிரான நிறமாகவும், உயிர்த்தெழுதலின் நிறமாகவும் இருந்தது.

லத்தின் மொழியில் அட்டர் என்ற வார்த்தையில் இருந்து கருப்பு என்ற வார்த்தை தோன்றியது. இந்த வார்த்தைக்கு இருள் மற்றும் தீமை ஆகும். அட்டூழியம் என்ற வார்த்தைக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

இதற்கு ஆதாரமாக பின்னாள்களில் வந்த ஓவியங்களில் பிசாசுகள் பெரும்பாலும் கருப்பு வண்ணத்தில் வரையப்பட்டன. இதற்கெல்லாம் மூலமாக கிரேக்கர்கள் கருப்பு வண்ணத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். கருப்பு மண்பாண்டங்கள் உருவாக்கப்பட்டன. பின்னாள்களில் கருப்பு நிற ஆடைகள் சந்தைப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் இந்த ஆடைகள் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன.

நவீன கால கலாசாரத்தில் கருப்பின் பயன்பாடு

தற்போதைய காலகட்டத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் கருப்பு என்பதை இனவெறியுடன் தொடர்புபடுத்தி எழுதியிருப்பார். இது தற்செயலாக நடந்ததுபோல் இருக்காது.

பொதுவாக ஆங்கில மொழி இனவெறியுடன் தொடர்புடையது. நம்மில் பெரும்பாலானோர் இதுபற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தூய்மையின்மை, நிராகரிப்பு, நாடு கடத்தல், தடுப்பு, கைது மற்றும் சட்டவிரோதம் உள்ளிட்ட வார்த்தைகளுடன் கருப்பு தொடர்பு படுத்தப்படுகிறது.

மேலும் பட்டியலின மக்கள் மீது கருப்பு, சிவப்பு முத்திரை குத்துதல் என்பன போன்ற இழிசெயல்கள் கருப்பு நிறத்தின் மூலமாக அவமானப்படுத்துதல் போன்றவற்றை குறிக்கிறது.

கைகளில் கருப்பு பட்டை கட்டினால் எதிர்ப்பு அல்லது துக்கம் உள்ளிட்ட உணர்வுகளை குறிக்கிறது. ஆனால் கருப்பு என்பது எதிர்ப்போ அல்லது துக்க நிறமோ அல்ல. இன்றைய காலக்கட்டத்தில் பேஷன் நிகழ்ச்சிகளில் கருப்பு என்பது புத்திசாலிதனமான நிறமாக உள்ளது.

அது நாகரீகமான ஆடையாக பார்க்கப்படுகிறது. மேலும் நவநாகரீக பெண்கள் தங்கள் அலமாரிகளில் கருப்பு ஆடையை நிச்சயம் வைத்திருப்பார்கள். மேலும் தற்காப்பு கலை விளையாட்டில் கருப்பு பெல்ட் என்பது உயர்ந்த அங்கீகாரம் ஆக பார்க்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து நாட்டில் கிரிக்கெட் மற்றும் ரக்பி ஆட்டத்திலும் வீரர்கள் கருப்பு ஆடையையை அணிகின்றனர்.

அந்த வகையில் நிகழ்காலத்தில் கருப்பு என்பது ஞானத்தில் நிறம் என்பது மிகையல்ல!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment