Advertisment

ஒருவர் 150 வயது வரை வாழ முடியுமா? சில நம்பிக்கைகளும் எச்சரிக்கைகளும்

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் யாராவது 122 வயதைத் தாண்டி வாழ்வார்கள் என்பது கிட்டத்தட்ட 100% சாத்தியம் ஆகும் என்று ஒரு புள்ளிவிவர ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Can a person live to age 150, the journal Demographic Research, ஒருவர் 150 வயது வரை வாழ முடியுமா, நீண்ட வயது வாழ முடியுமா, புதிய ஆராய்ச்சி, Nature Communications, resilence, long live possible, indian express, indian express tamil explained

யதார்த்தத்தில் ஒரு மணிதன் எவ்வளவு காலம் வாழ முடியும்? ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவுகளின்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீனே கால்மெண்ட் என்ற மூதாட்டி 122 வயது மற்றும் 164 நாட்கள் வரை வாழ்ந்து 1997ம் ஆண்டு இறந்தார் என்பதே சாதனை. அவருடைய இந்த 24 ஆண்டு சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்பது எந்த அளவுக்கு சாத்தியம், முறியடிக்க முடியும் என்றால் எப்போது சாத்தியம்?

Advertisment

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் யாராவது 122 வயதுக்கு மேல் வாழ்வார்கள் என்பதற்கு கிட்டத்தட்ட 100% வாய்ப்பு உள்ளது என்று ஒரு புள்ளிவிவர ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். மற்றொரு ஆய்வில், இது உயிரியல் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் மற்ற விஷயங்கள் சரியாக இருந்தால் ஒரு மனிதன் 150 வயது வரைகூட வாழ முடியும் என்று கணித்துள்ளனர்.

122 வயதுக்கும் 135வயதுக்கும் இடையே

மக்கள்தொகை ஆராய்ச்சி இதழில் ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்ட இரண்டு ஆய்வுகளில் மிகவும் சமீபத்திய ஒரு ஆய்வு, 13 நாடுகளில் மனித வாழ்க்கையின் உச்சநிலையை ஆராய புள்ளிவிவர மாதிரியைப் பயன்படுத்துகிறது. இதை முனைவர்பட்ட ஆய்வு மாணவர் மைக்கேல் பியர்ஸ் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் ராப்டெரி ஆகியோர் 2020-2100 காலகட்டத்தில் அதிகபட்சமாக இறப்பவர்களின் வயதைப் பற்றிய கணிப்புகள் என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

122 வயது என்ற தற்போதைய சாதனையை முறியடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 100% சாத்தியம் உள்ளது.

124 வயது வாழமுடியும் என்பதற்கு பெரும்பாலும் 99% வாய்ப்பு உள்ளது. 127 வயது வரை வாழ்வதற்குகூட 68% அதிகம் வாய்ப்பு உள்ளது.

130 வயது என்பதற்கு மிகவும் குறைவாக 13% வாய்ப்பு உள்ளது.

120 வயது முதல் 150 வயது வரை

மற்றொரு ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் மே 24ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், மக்கள் நோய்களில் இருந்து விரைவில் மீள்வதற்கான எதிர்ப்புத்திறன் நடவடிக்கையை புதுப்பிக்கிறது - போதுமான தூக்கம் இல்லாதது கடுமையான உடற்பயிற்சிகள் அல்லது நோய்வாய்ப்படுதல் போன்ற அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கான அவர்களின் திறன் ஆகியவற்றை புதுப்பிக்கிறது. இது சிங்கப்பூரைச் சேர்ந்த பயோடெக் நிறுவனமான ஜெரோவின் ஆராய்ச்சி குழுவால், நியூ யார்க், பஃபலோவில் உள்ள ரோஸ்வெல் பார்க் விரிவான புற்றுநோய் மையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

ஜெரோவைச் சேர்ந்த டிம் பிர்கோவ் தலைமையில், அவர்கள் காலப்போக்கில் ஆய்வு பொருள்களின் (மனிதர்களின்) விரைவில் மீள்வதற்கான எதிர்ப்புத்திறனை அளவிட்டனர். அவர்கள் அவற்றின் அளவீடுகளை விரிவுபடுத்தினர். சிலர் 120-150 வயதுகளில் மனித உடலில் விரைவில் மீள்வதற்கான எதிர்ப்புத்திறனை முழுமையாக இழப்பதைக் கண்டறிந்தனர்.

“வயதைக் காட்டிலும் உடலில் எதிர்ப்புத்திறன் குறைந்து வரும் போக்கை நாங்கள் கண்டோம். வயதானவர்களுக்கு கணித்தபோது, உடலின் எதிர்ப்புத்திறன் காணாமல் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச ஆயுட்காலம் குறைகிறது” என்று பிர்கோவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார்.

DOSI எனப்படும் உள்ளடக்கத்துடன் விரைவாக மீள்வதற்கான எதிர்ப்புத்திறன் அளவிடப்பட்டது. பிர்கோவ் இது மிகவும் பெரும்பாலும் கிடைக்கும் இரத்த பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே ஒரு உயிரியல் வயது நடவடிக்கையை முழுமையான இரத்த எண்ணிக்கை மூலம் கணிக்கப்பட்டது என்று விவரித்தார். “இதில் முக்கிய யோசனை என்னவென்றால், ஒரே நபரிடமிருந்து மீண்டும் மீண்டும் மாதிரிகளைப் பெறுவது எளிதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

நீண்ட ஆயுளை அளவிடுதல்

100 ஆண்டுகள் வரை உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆனால், சூப்பர் 100 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை - 110ஐ தாண்டியவர்கள் - ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளனர். 2100 ஆம் ஆண்டளவில் மிக அதிகமான தனிநபர்களின் மனித ஆயுட்காலம் என்ன என்பதைக் கணக்கிட, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பியர்ஸ் மற்றும் ராஃப்டெரி பேய்சியன் ஆகியோர் புள்ளிவிவரங்கள் என்கிற பொதுவான கருவியைப் பயன்படுத்தினர்.

“எதிர்காலத்தில் மனிதனின் ஆயுட்காலம் மற்றும் இறப்பு விகிதத்தை கணிக்க ஐ.நா.வின் முறையைப் பயன்படுத்துகிறோம். இது உண்மையில் எங்கள் குழுவால் உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு நாட்டிலும் கடந்த கால மற்றும் தற்போதைய முன்னேற்ற விகிதத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது” என்று ராஃப்டெரி மின்னஞ்சல் மூலம் கூறினார்.

மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் மக்கள் தொகை ஆராய்ச்சி உருவாக்கிய நீண்ட ஆயுள் குறித்த சர்வதேச தரவுத் தளங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கணிப்புகளை உருவாக்கினர், இது 10 ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவிலிருந்தும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களைக் கண்காணிக்கிறது.

110 வயதை அடைந்த பிறகு

மக்கள் நீண்ட காலம் வாழும்போது, ​​அவர்கள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு குறைந்துவிடுகிறது. 110 வயதாகும் ஒருவருக்கு 114 வயதானவரைக் காட்டிலும் இன்னும் ஒரு வருடம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, 127 வயதுடைய ஒருவர் அடுத்த ஆண்டு உயிர்வாழ்வதைத் தடுக்க என்ன இருக்கிறது, அடுத்தது அவர்கள் 135 வயதை எட்டும் வரை தடுக்க என்ன இருக்கிறது?

அதற்கு ‘ஒன்றுமில்லை’ என்று கூறிய ராஃப்டெரி, “110 முதல் 111 வயது வரை உயிர்வாழும் வாய்ப்பு சுமார் பாதிதான் உள்ளது. அது 127 வயதுடைய ஒருவர் 128 வயது வரை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புக்குச் சமம்… மேலும் 20 ஆண்டுகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு என்பது எடுத்துக்காட்டாக 110 வயது முதல் 130 வரை 20 ஆண்டுகள் வாழ்வதற்கான சக்தி பாதியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு மில்லியனில் ஒன்றாக இருக்கிறது.

“135 வயதிற்குள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 25 ஆண்டுகளின் சக்தியில் பாதியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு 32 மில்லியனில் ஒன்றாக இருக்கிறது. முதல் இடத்தில் 110 வயதை எட்டும் நபர்களின் எண்ணிக்கை அதைவிட மிகக் குறைவாக இருக்கும். எனவே, அவர்களில் ஒருவர்கூட 135 வயதை எட்டும் சாத்தியம் மிகக் குறைவு”என்று அவர் விளக்கினார்.

“இதில் சாத்தியம் குறைவாக இருந்தாலும், அது இன்னும் சாத்தியமாகும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment