Advertisment

ஒரே குற்றத்திற்காக நாராயண் ரானே மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்ய முடியுமா?

Explained: Can Narayan Rane be booked in multiple FIRs for the same offence?: மஹாராஷ்டிரா முதல்வர் குறித்து பேசியது தொடர்பாக, சிவசேனா தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நாராயண் ரானே மீது மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

author-image
WebDesk
New Update
ஒரே குற்றத்திற்காக நாராயண் ரானே மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்ய முடியுமா?

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் நாராயண் ரானே கருத்து கூறியது தொடர்பாக அவருக்கு எதிராக 10 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் ஒரே குற்றத்திற்காக ஒரே குற்றவாளிக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியுமா, அதே குற்றத்திற்காக அந்த நபரை பல முறை கைது செய்ய முடியுமா?

Advertisment

நாராயண் ரானே மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

இதே சம்பவம் தொடர்பாக சிவசேனா தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நாராயண் ரானே மீது மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை புனே, புனே கிராமப்புறங்களில், நாசிக் கிராமப்புறத்தில் இரண்டு எஃப்.ஐ.ஆர்., துலே, அகமதுநகர், ஜல்கான், தானே, நாசிக் மற்றும் சம்பவம் நடந்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை, ராய்காட் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றார்.

ஒரே குற்றத்திற்காக ஒரு நபருக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியுமா?

மகாராஷ்டிரா காவல்துறையின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் கூற்றுப்படி, லலிதா குமாரி எதிர் உத்திரபிரதேசம் மற்றும் பிற அரசுகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 2013 தீர்ப்பின் படி, ஒரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ள குற்றம் தொடர்பாக ஒரு நபர் புகார் அளித்தால், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஒரே சம்பவம் தொடர்பாக 10 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூறியபோது, குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார்.

அதே குற்றத்திற்காக அந்த நபரை கைது செய்து பலமுறை விசாரிக்க முடியுமா?

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வழக்கறிஞரான ஒய்.பி.சிங்கின் கூற்றுப்படி, அதே குற்றத்திற்காக ஒரு நபரை மீண்டும் கைது செய்யவோ அல்லது விசாரணை செய்யவோ முடியாது, அது இரட்டை ஆபத்தை விளைவிக்கும், இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 20 (2) ஆல் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த சட்டப்பிரிவின் படி எந்தவொரு நபரும் ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை வழக்குத் தொடரவோ அல்லது தண்டிக்கப்படவோ கூடாது.

அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளுக்கு என்ன நடக்கும்?

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஒரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்ட பல எஃப்.ஐ.ஆர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று சிங் கூறினார். இந்த வழக்கில், ரானேவின் கருத்து மஹத் எனும் இடத்தில் செய்யப்பட்டது, அதனால் அனைத்து ஒன்பது எஃப்.ஐ.ஆர்களும் கிளப் செய்யப்பட்டு மஹத் காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும், அதன் முதன்மை அதிகார வரம்பில் சம்பவம் நடந்தது மற்றும் அவர்கள் அனைத்து வழக்குகளையும் ஒரு ஒற்றை எஃப்.ஐ.ஆர் போல விசாரிப்பார்கள். விதிமுறை என்னவென்றால், ஒரே சம்பவம் தொடர்பான விசாரணையின் பன்முகத்தன்மை இருக்க முடியாது மற்றும் ஒரே குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவரை இரண்டு முறை தண்டிக்க முடியாது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment