Advertisment

கொரோனா நோயாளிகளுக்கு அபாயகரமான நுரையீரல் நோய் ஏன்?

Covid 19 Lung Fibrosis Research நோயாளிகள் காலப்போக்கில் சரியாவார்கள் அல்லது மேம்படுவார்கள், சிலர் மேம்பட்ட நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் அல்லது PC-ILD-யினால் பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் உட்வாடியா கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Virus Covid 19 Lung Fibrosis Research Tamil News

Covid 19 Lung Fibrosis Research

Corona Virus Lung Fibrosis Tamil News : நாவல் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவிலும் ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பேரழிவு தரும் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ், நுரையீரலின் காற்று பைகளைச் சுற்றியுள்ள திசுக்களின் வடு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகளால் தப்பிப்பிழைத்தவர்களில் ஏராளமானோர் பதிவாகியுள்ளனர்.

Advertisment

கோவிட் -19-க்கு இடையிலான இடைநிலை நுரையீரல் நோயை (பிசி -ஐஎல்டி) (நுரையீரல் ஃபைப்ரோஸிஸின் மற்றொரு பெயர்) இதய மருத்துவர்கள் அதிக அளவில் அடிக்கடி நிர்வகிக்கப்படுகிறார்கள் என லங் இந்தியா பத்திரிகையில் நுரையீரல் நிபுணர்களான டாக்டர் ஜரிர் எஃப் உட்வாடியா, டாக்டர் பர்வைஸ் ஏ கோல், மற்றும் டாக்டர் லூகா ரிச்செல்டி ஆகியோரால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் -19 நோயாளிகளுக்கு நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எவ்வளவு பொதுவானது?

இது மிகவும் பொதுவானதுதான். உலகெங்கிலும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 60 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் லேசான அல்லது மிதமான தொற்றுநோயை மட்டுமே கொண்டிருந்தாலும், சுமார் 10% பேருக்குக் கடுமையான கோவிட் -19 நிமோனியாவை உருவாக்குகிறது. மேலும் 5% பேர் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறிகளை (Acute Respiratory Distress Syndrome - ARDS) உருவாக்குகிறது. SARS-CoV-2 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது இன்னும் பல மில்லியன் நபர்களில் குறிப்பிடத்தக்க நுரையீரல் பாதிப்பிற்குக் காரணமாக அமைகிறது.

இந்தியாவில் இதுவரை 92 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், 1.34 லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகளும் உள்ளன. "நாங்கள் வழக்கமாகவே இந்த பயங்கரமான ஃபைப்ரோஸிஸ் வழக்குகளைப் பல பார்க்கிறோம்" என டாக்டர் உட்வாடியா கூறினார். கோவிடுக்குப் பிந்தைய காலகட்டங்களிலும், நோயாளிகளுக்கு மற்ற உறுப்புகளிலும் வைரஸின் தாக்கத்தைக் காண விரிவாகப் பின்தொடர வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் எய்ம்ஸ் இயக்குநரும், நாட்டின் முன்னணி நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியிருந்தார். "நுரையீரலில் முற்றிலும் வடு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஏராளமான நிமோனியா நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் வெளியே வந்தாலும், மீட்கப்பட்ட பிறகும் சிலருக்கு வீட்டிலேயே ஆக்ஸிஜன் சப்ளை தேவைப்படுகிறது. மூன்று மாதங்கள் கழித்து, சி.டி. ஸ்கேன் மூலம் நுரையீரல் மோசமான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது” என்று டாக்டர் குலேரியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமானது?

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் குறைவாகவே காணப்பட்டது. நுரையீரல் கடினமாகி, இரத்த ஓட்டத்தில் நுழையும் ஆக்ஸிஜனின் திறன் குறைக்கும் இந்த நோய், பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. கோவிட் -19 வைரஸ், நிமோனியாவின் தொடர்ச்சியாக நுரையீரல் ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்தினால், ஏராளமான வழக்குகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படக்கூடும் என்று இதய மருத்துவரும் பல்மோ பராமரிப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் இயக்குநருமான டாக்டர் சுந்தீப் சால்வி தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுநோயின் முழு வீழ்ச்சியையும் காணமுடிகிறது ஆனால், கடுமையான சுவாச நோய் (Severe Acute Respiratory Syndrome - SARS) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome - MERS) போன்ற நெருங்கிய தொடர்புடைய கொரோனா வைரஸ் பற்றிய குறிப்புகள் டாக்டர் உட்வாடியா போன்ற வல்லுநர்களை அனுமானிக்க வழிவகுத்தது. நோயாளிகள் காலப்போக்கில் சரியாவார்கள் அல்லது மேம்படுவார்கள், சிலர் மேம்பட்ட நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் அல்லது PC-ILD-யினால் பாதிக்கப்படுவார்கள் என்று டாக்டர் உட்வாடியா கூறினார்.

எந்த நோயாளிகள் நீண்டகால நுரையீரல் அசாதாரணங்களை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்?

அதை தீர்மானிக்க மிக விரைவில் உள்ளது என நுரையீரல் இந்தியா மதிப்பாய்வு (உட்வாடியா மற்றும் பலர்) தெரிவிக்கிறது. மிதமான அல்லது தொடர்ச்சியான அறிகுறிகளுடன் / கதிரியக்க அசாதாரணங்களுடன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் விசாரணை தேவை.

கடுமையான கோவிட் -19 ஏ.ஆர்.டி.எஸ்ஸுடன் தீவிர சிகிச்சையில் 45 வயதான புகைபிடிக்காதவரின் வழக்கை டாக்டர் உட்வாடியா மேற்கோள் காட்டி, அவர் 28 நாட்களுக்குள் முன்னேற்றமடைந்து, ஃபைப்ரோடிக் நுரையீரல் நோயை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது மாதகால தொற்றுநோய் இந்தியாவில், மிகவும் மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் ஸ்டெராய்டுகள் இப்போது நிலையான பராமரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இருப்பினும், பெரும்பாலான நோயாளிகள், மீதமுள்ள நுரையீரல் பாதிப்புகளைத் தடுக்க போதுமான அளவு டோஸேஜுகள் இல்லை என்றும் டாக்டர் உட்வாடியா கூறினார்.

கோவிட் பிந்தைய ஃபைப்ரோஸிஸின் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஃபைப்ரோடிக் எதிர்ப்பு மருந்துகள் என்ன பங்கு வகிக்க முடியும்?

அதுபற்றி தற்போது தெளிவாக இல்லை. ஆனால், அவற்றின் சாத்தியமான பயன்பாட்டிற்கு ஒரு பகுத்தறிவு உள்ளது.

கோவிட் மற்றும் இடியோபாத்திக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் (Idiopathic Pulmonary Fibrosis - IPF) பொதுவான புள்ளிவிவரக் காரணிகளைக் கொண்டுள்ளன. அவை ஆண்களையும், வயதானவர்களையும், புகைப்பிடிப்பவர்களையும் அதிகம் பாதிக்கின்றன. இன்டர்ஸ்டீடியல் நுரையீரல் நோயின் (interstitial lung disease) தீவிரத்தன்மை கொண்ட நோயாளிகளுக்கு ஃபைப்ரோடிக் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது என டாக்டர் உட்வாடியா கூறினார்.

ஃபைப்ரோடிக் எதிர்ப்பு மருந்துகள், ஃபைப்ரோஸிஸின் வளர்ச்சியைக் குறைக்கக் கூடிய ஆய்வுகள் மிகக் குறைவு என்று புனேவின் டாக்டர் டி ஒய் பாட்டீல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் நுரையீரல் மருத்துவத் துறையின் தலைவருமான டாக்டர் எம் எஸ் பர்த்வால் கூறினார். மருந்துகளைத் தவிர, ஆதரவான நிர்வாகத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டு ஆக்ஸிஜன் சிகிச்சை, மார்பு பிசியோதெரபி (மேற்பார்வையின் கீழ் சுவாச பயிற்சிகள்) மற்றும் நல்ல ஊட்டச்சத்து ஆகியவை கைகொடுக்கும் என்று டாக்டர் பார்த்வால் கூறினார்.

டாக்டர் உட்வாடியாவின் கூற்றுப்படி, மிகவும் கடுமையான ARDS நோயாளிகளாக இருப்பதால், பெரும்பாலும் ஃபைப்ரோஸிஸுடன் முடிவடையும். அதனால், ஃபைப்ரோடிக் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தக் கருத்தில் கொள்ள வேண்டிய குழுவாக இவர்கள் இருக்கலாம். இத்தகைய நோயாளிகளுக்கு பொதுவாக அதிக ஆக்ஸிஜன் தேவைகள் கொண்ட நீடித்த காற்றோட்டம் தேவைப்படும் மற்றும் ஸ்டெராய்டுகளுடன் ஃபைப்ரோடிக்ஸ் எதிர்ப்பு இருக்கலாம் என்றார்.

நோயின் இயல்பான போக்கை நன்கு புரிந்துகொள்ள, நுரையீரல் ஈடுபாட்டின் அளவு மற்றும் அளவின் அடிப்படையில், தொலைதூரத்திலோ அல்லது நேரிலோ, மொத்தம் 36 மாதங்கள் வரை பின்தொடர்தல் பரிந்துரைக்கப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment