Advertisment

கேரளாவில் புது தொற்று எண்ணிக்கை ஜீரோ, மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

கொரோனா பரவலில் மாநிலங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் குறைந்தது 25 நகராட்சி பகுதிகளில் பத்துக்கும் குறைவான மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளாவில் புது தொற்று எண்ணிக்கை ஜீரோ, மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

இந்தியாவின் பல மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று இல்லாத நாளை கேரளா மாநிலம் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தது. கடைசியாக, கடந்த மார்ச் 18ம் தேதியன்று  கேரளாவில் புது  கொரோனா தொற்றை  பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட நாட்களில் ஒன்று (அ) இரண்டு என்ற எண்ணிக்கையில் தான் கொரோனா தொற்றை கேரளா  பதிவு செய்து வருகிறது . இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் மாநிலம் கேரளாவாக இருந்தாலும், கடந்த மாதம் முதலாக  அதன் தொற்றின் வளர்ச்சி விகிதத்தை மிகவும் கணிசமாக குறைத்துள்ளது.

Advertisment

மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட 497 பேர் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுநாள் வரையில், மூன்று கொரோனா தொடர்பான இறப்புகளை கேரளா சந்தித்துள்ளது. குறைந்த அளவிலான இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவை போல், குறைந்தது பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கொரோனா தொற்றை பதிவு செய்யவில்லை. இவற்றில், சில மாநிலங்கள் பல நாட்களாகவே எந்த புது தொற்றை உறுதிபடுத்தவில்லை. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் மிக மெதுவான வேகத்தில் புது கொரோனா தொற்றை பதிவு செய்து வருகிறது.

தெலுங்கான மாநிலம் கடந்த சில நாட்களாகவே ஒற்றை இலக்கு எண்ணிக்கையில் தான் கொரோனா தொற்றை பதிவு செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை, புதிதாக ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 1044 ஆக உயர்ந்தது.

இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சியைத் தூண்டும் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக எந்த வித மாற்றமும் இல்லை . மகாராஷ்டிராவில், நேற்று ஒரு நாளில் மட்டும் 1008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவின் ஒரு மாநிலம், ஒரு நாளில் 1000 எண்ணிக்கையைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11506 ஆக உயர்ந்துள்ளது. அதில், 1879 பேர் நோயிலிருந்து குனமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, நாடு முழுவதும் 2283 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டையடிய்ப்பட்டது. தினசரி, எண்ணிக்கையில் 2000 - ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். இந்தியாவி மொத்த எண்ணிக்கை 37234-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்களில் கொரோனா தொற்றின் வளர்ச்சி விகிதங்கள் வெவ்வேறு கட்டத்தில் இருப்பதால், மே- 4 ல் இருந்து செயல்படுத்தப்படும் பொது முடக்கம் ஒரு தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கொண்டிருக்கும். கொரோனா பரவலில் மாநிலங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் குறைந்தது 25 நகராட்சி பகுதிகளில் பத்துக்கும் குறைவான மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment