Advertisment

கொரோனா 2-வது அலை: அடுத்து என்ன?

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மக்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதற்கு வலுவான முன்னுதாரணங்களும் எடுத்துக்காட்டுகளும் உள்ளன.

author-image
WebDesk
New Update
Covid 19 corona virus Pandemic second wave expert opinion explained Tamil news

Covid 19 Pandemic second wave

Covid-19 Pandemic Second Wave Tamil News: நோய்த்தொற்றின் புதிய அலை கண்டம் முழுவதும் பரவுவதால் ஐரோப்பாவின் பெரிய பகுதிகள் இரண்டாவது லாக்டவுன் நிலையில் உள்ளன. அமெரிக்காவில் உள்ள வழக்குகள் புதிய பதிவுகளைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. என்றாலும், அதற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்நிலையில், லாக்டவுனில் விளைவுகள் என்னென்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் பேராசிரியர் சுனேத்ரா குப்தா அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.

Advertisment

கோவிட் -19-ல் இயற்கையாகவே பரவும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அனுமதிப்பதற்கான வாதத்தை வலுப்படுத்தும் முந்தைய தொற்றுநோய்களிலிருந்து ஏதேனும் முன்மாதிரி உள்ளதா?

ஓர் புதிய நோய்க்கிருமி, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நபருக்குள் நுழையும்போது, அது பேரழிவை ஏற்படுத்தும். சில நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடத்தில் உருவாகியவுடன், நோய்க்கிருமியுடனான நமது உறவு மாறுகிறது. பொதுவாக, இது நோய் எதிர்ப்பு சக்தி ஆபத்தை மிகக் குறைவாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கான ஓர் நல்ல சமீபத்திய உதாரணம் ஜிகா (Zika) வைரஸ்: பிரேசிலில் உருவான இந்த வைரஸில் மைக்ரோசெஃபலி அதிகமாக இருந்தது. இப்போது பரவலான மக்கள் தொகையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதாவது ஜிகா மறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல, ஆனால் ஆபத்து குறைவாக இருக்கிறது.

ஓர் தொட்டியோடு ஒப்புமைகளைப் பயன்படுத்தினால், நோய் எதிர்ப்பு சக்தியை இழப்பது என்பது அமைப்பு எவ்வளவு கசிந்ததாக இருக்கிறது என்பதைப் போன்றது. அதாவது நிறையத் தண்ணீரை வெளியேற்ற முடியும் அல்லது அதிக நீரை உள்வாங்க முடியும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அப்படியே இருக்கும். பெரும்பாலான கொரோனா வைரஸ்களுக்கான காட்சி இதுதான்.

“தண்ணீர் பாய்வதைப் பற்றி என்ன? இது புதிய நோய்த்தொற்றுகள் இல்லையா?” என்று கேட்கலாம். பொதுவாக, அவை மறுசீரமைப்புகளாக இருக்கும் என்பதுதான் பதில். SARS-CoV-2, மற்ற கொரோனா வைரஸ்களைப் போல நடந்து கொண்டால், அதன் மறுசீரமைப்புகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கான அதே ஆபத்தை சுமக்காது என்று நான் நினைக்கிறேன்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மக்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதற்கு வலுவான முன்னுதாரணங்களும் எடுத்துக்காட்டுகளும் உள்ளன. முதல் நாட்களில், நீங்கள் ஒரு வெற்று கோட்டையைக் கையாளுகிறீர்கள். எனவே, தண்ணீரின் வேகம் மிக அதிகமாகவே இருக்கும் ஆனால், விரைவில் நிலைப்படுத்தும்.

ஒரு தீர்வாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியமானது, கொரோனாவுக்கு எதிரான ஆன்ட்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நாம் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும்போது, சில நாடுகள் ஏற்கனவே மறுசீரமைப்புகளைக் கண்டறிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆன்டிட்பாடிகள் வீழ்ச்சியடைகின்றன. எனவே, மக்கள் தொகையில் எந்த விகிதத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்க அவற்றைப் பயன்படுத்த முடியாது. இந்த வைரஸை எதிர்த்துப் போராட நியமிக்கும் பல்வேறு விஷயங்களில் இது ஒரு பகுதி மட்டுமே.

சமீபத்தில் அம்பலப்படுத்திய ஒரு மார்க்கர்தான் ஆன்டிட்பாடிகள். நோயெதிர்ப்பில் என்ன நடக்கிறது என்பதை அவை பிரதிபலிக்கவில்லை. எனவே ஆன்ட்டிபாடிகளின் சிதைவினால், நோய் எதிர்ப்பு சக்தி சிதைந்து வருகிறது என்று சொல்வது தவறு. பிற கொரோனா வைரஸ்களுக்கு முந்தைய வெளிப்பாடு இந்த புதிய வைரஸுக்கு சில நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. எனவே, இது ஒரு சிக்கலான விஷயம்தான்.

நார்டிக் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஸ்வீடனின் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மாதிரி, பொருளாதார ஆதாயத்தின் அடிப்படையில் குறைந்த ஈவுத்தொகைகளைக் கொண்டிருந்தது. ஐரோப்பா இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுவதால், இப்போது அது எப்படி இருக்கும்?

மற்ற நார்டிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்வீடிஷ் மாதிரியைக் கணக்கிடுவது நியாயமற்றது. ஓர் உச்சத்திற்குள் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தன என்பதன் அடிப்படையில் அதனைத் தீர்மானிப்பதும் நியாயமில்லை. ஒரே வகையான ஸ்ட்ராடஜியைப் பின்பற்றி, ஸ்வீடன் அடைந்த இறப்புகளின் அளவு இங்கிலாந்துக்குச் சமமாக இருந்தது என்பதுதான் உண்மை. இது மிகவும் நியாயமான ஒப்பீடு. ஸ்வீடன் தனது பராமரிப்பு இல்லங்களைப் பாதுகாக்காமல் அதே தவறுகளைச் செய்தது.

டென்மார்க் மற்றும் நார்வே ஆகிய இரண்டு நாடுகளாலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடிந்தது. எனவே, குறைவான இறப்புகள் இங்கு இருந்ததற்கு ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், பொருளாதார இழப்புகளைப் பொறுத்தவரை,  ஸ்வீடன் உலகப் பொருளாதாரத்தின் வலையமைப்பின் ஒரு பகுதி. எனவே, “அவர்கள் எங்களைப் போலவே மோசமாகச் செய்தார்கள்” என்று சொல்வது அர்த்தமற்ற வாதம்.

Covid 19 corona virus Pandemic second wave expert opinion explained Tamil news Covid 19 corona virus Pandemic second wave explained

ஸ்வீடனில் உள்ளவர்களுடன் பேசுவதிலிருந்து நான் புரிந்துகொள்வது என்னவென்றால், அவர்களின் குறிக்கோள் நிலையான ஒன்றை கடைப்பிடிப்பதுதான்... அதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

அதிகப்படியான கொரோனா வழக்குகளை ஒழிக்கக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நியூசிலாந்தின் அணுகுமுறைகளையும் நாங்கள் கண்காணித்தோம். நியூசிலாந்தின் ஸ்ட்ராடஜி, அதன் எல்லைகளின் ஓரம் வரை வந்து, வேட்டையாடி, கடக்க முடிந்த ஒவ்வொரு வைரஸையும் கொள்ளவே முயற்சிகளை மேற்கொண்டன. இது மிகவும் தேசியவாதமானது மற்றும் மிகச் சிறிய, வசதியான மாநிலங்களுக்குள் மட்டுமே அடையக்கூடியது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில், லாக்டவுனுக்கான செலவுகள் ஆழமானவை என்று நான் நினைக்கிறேன். ஆனால், பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றுவதற்கான இந்த விருப்பம் ஓர் யதார்த்தமான முடிவென்றே நான் நினைக்கிறேன். ஒரு லாக்டவுனுக்கு ஆகும் செலவுகள் மற்றும் 130 மில்லியன் மக்களை எவ்வாறு பட்டினியிலிருந்து காப்பாற்றலாம் (உலகெங்கிலும்) என்பதைக் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக, மக்களிடத்தில் ஓர் மோனோகுலர் பார்வை உள்ளது. இதற்கான முழு செலவையும் சர்வதேச மட்டத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் சர்வதேச குடிமக்கள் என்ற வகையில் எங்கள் கடமைகளை நாங்கள் குறைக்க வேண்டியது இருக்கும்.

இந்த தொற்றுநோயை எவ்வாறு சிறப்பாகக் கையாள்வது என்பதற்கு உலகளவில் என்ன அணுகுமுறைகள் சிறந்த எடுத்துக்காட்டாக, குறிப்பாக இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு எது இருக்கிறது?

ஸ்வீடன் மிகச் சிறந்த நல்ல எடுத்துக்காட்டு. முழு லாக்டவுனுக்குச் செல்லாமல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டது. என் அம்மா கொல்கத்தாவில் இருக்கிறார். அவரும் அவருடைய சகோதரியும் தங்களால் முடிந்தவரை சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்த விருப்பங்கள் நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்தாலும், அவை நிச்சயமாக சேரிக்களில் இல்லை. ஆனால், தாராவி போன்ற இடங்களைப் பாருங்கள், வைரஸ் அதன் வழியாகச் சென்றது, ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இறப்புகள் குறைவாக இருந்தன. ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலான மக்கள் இளைஞர்களாக இருந்தனர். இந்தியாவில் முந்தைய தலைமுறையினர் அதிகம் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால், இந்தக் காலத்து இளைஞர்களைவிட வழக்கமான வெளிப்பாட்டின் மூலம் அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. பொருளாதாரத்தை முடக்குவது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அதிக தீங்கு விளைவிக்கும்.

Covid 19 corona virus Pandemic second wave expert opinion explained Tamil news Corona virus Pandemic second wave India

மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதில் இருந்து இந்தியா எவ்வளவு தூரம் இருக்கிறது?

இந்தியாவில் பல இடங்களில் ஏற்கெனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை தெளிவாக அடைந்துள்ளது. ஏனென்றால், நோய்த்தொற்று அளவு இயற்கையாகவே வீழ்ச்சியடைந்துள்ளதே. "செரோபிரெவலன்ஸ் ஆய்வுகள் வெளிப்பாடு பற்றி என்ன குறிக்கின்றன?" என்ற கேள்விக்கு மக்கள்தொகையில் எந்த விகிதத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, எப்போது என்பதை தற்போது சொல்ல முடியாது என்பதுதான் எங்களுடைய பதில்.

இந்தியாவில், குறிப்பிட்ட இடங்களில் 60-70% ஆன்ட்டிபாடிகளைப் பெறும் ஆய்வுகள் உள்ளன. அவை சமீபத்தில் மக்கள் அம்பலப்படுத்தப்பட்ட பகுதிகள். மேலும், இது மந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அளவை அதிகமாக கொண்டுள்ளது. ஆன்ட்டிபாடிகள் சிதைவது மட்டுமல்லாமல், எல்லோரும் ஆன்ட்டிபாடிகளை உருவாக்குவதில்லை என்பது நமக்குத் தெரிந்த மற்றொரு விஷயமும்கூட.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ்கள் வெளிப்படுவதால், மக்களுக்குக் குறுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து அதிக எஞ்சிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதாவது, மற்றொரு கொரோனா வைரஸிலிருந்து உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி புதிய கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க உதவும் என்று நான் சந்தேகிக்கிறேன். அதாவது நமது சிஸ்டர்ன் எடுத்துக்காட்டில், தொட்டி ஏற்கெனவே பாதி நிரம்பியுள்ளது.

தொற்று மற்றும் இறப்புகள் குறையத் தொடங்குவதுதான், என்ன நடக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஒரே விஷயம். இந்தியா மிகப் பெரிய நாடு. எனவே, அது பிராந்தியத்திற்கு பிராந்தியத்திற்கு நடக்கும். நான் எல்லா தரவையும் முழுமையாகப் பார்க்கவில்லை ஆனால், மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகள் இருக்க வேண்டும்…

Covid 19 corona virus Pandemic second wave expert opinion explained Tamil news Pandemic second wave expert opinion explained

இந்தியாவில் இறப்புகளில் 10 சதவிகிதம் 26-44 வயதுடையவர்கள் என்று தரவு தெரிவிக்கிறது. எந்த வயதினரைச் சாதாரணமாக தங்கள் வாழ்க்கையை வாழ அனுமதிக்க வேண்டும்?

தரவை கவனமாகப் பார்க்க வேண்டும். வயது இணைப்பு இருப்பது நமக்குத் தெரியும். யார் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதைப் பொறுத்தவரை, நிச்சயமாக இங்கிலாந்து மற்றும் பல நாடுகளின் தரவுகள் அந்த வயது அடைவில் உள்ளவர்களுக்கு (26 முதல் 44 வரை) மிகக் குறைந்த ஆபத்து இருப்பதாகக் கூறுகின்றன. இங்கிலாந்தில், பேராசிரியர் கார்ல் ஹெனேகன் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்), இறப்புகள் குறித்து முழுமையான பகுப்பாய்வு செய்துள்ளார். வயதானவர்களில் கூட, இறந்தவர்கள் ஒருவித கொமொர்பிடிட்டி கொண்டவர்கள். ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால், இறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அது வயதானவர்களாக கூட இருக்கலாம். ஆனால், அது பிராந்தியத்திற்கு மாறுபடும்.

இளையவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்துச் சிந்திக்க வேண்டும். அனாவசியமாக வெளியில் செல்வதைக் குறைப்பது, இளம் வயதினரிடையே கூட, சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏற்கெனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை லண்டன் அடைந்திருக்கலாம் என்று நீங்கள் பரிந்துரைத்தீர்கள். உங்கள் கருத்துக்களை வலுப்படுத்தும் அல்லது மாற்றியமைக்கும் கூடுதல் தகவல்கள் ஏதேனும் உள்ளதா?

லண்டன் லாக்டவுனில் இருந்ததால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதை அவசியமாக மறைக்கவில்லை. மே மாதத்தின்போது தரவைப் பெறும் நேரத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கோவிட் -19 பரவப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன்… இது கண்காணிப்புக்கு மக்கள் தொகை அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியின் கணிசமான பங்களிப்பாக இருந்திருக்கலாம். லண்டனில் கோடைக்காலத்தில் தொற்று அளவு மிகக் குறைவாக இருப்பதை நாங்கள் கவனித்தோம். எந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாததால் அது ஒத்துப்போகவில்லை.

எந்தவொரு சுவாச நோய்த்தொற்றுக்கும், குளிர்கால மாதங்களில் காணும் வழக்கமான உயர்வுதான் இப்போது நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் வரும்போது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால், அவர்கள் தொற்றுநோயினால் பாதிக்கப்படுவார்கள். ஆண்டின் இந்த நேரத்தில் தொற்று அளவு அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. ஆனால், மரணங்கள் ஒரே மாதிரியாக உயரவில்லை. எனவே, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் தருணத்தில் ஒரு வலுவான பங்களிப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

நிபுணர்

பேராசிரியர் சுனேத்ரா குப்தா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவார்த்த தொற்றுநோயியல் பேராசிரியராக உள்ளார். அவரது ஆராய்ச்சி நோய்க்கிருமிகளில், குறிப்பாகத் தொற்று நோய் முகவர்களில் பன்முகத்தன்மையின் பரிணாம வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. தொற்றுநோய் குறித்து உலகளவில் அறிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் வர்ணனைகளில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட நிபுணர்களில் ஒருவர். பேராசிரியர் குப்தா, அக்டோபர் 4 கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் ஆசிரியர்களில் ஒருவர். இது கோவிட் -19-லிருந்து குறைந்த ஆபத்தில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சாதாரணமாக வாழ அனுமதிக்க வேண்டும், அதே நேரத்தில் அதிக ஆபத்தில் உள்ளவர்களைச் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கைடன்ஸ்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment