Advertisment

Explained: குடியரசுத் தலைவர் முர்மு தனது தொடக்க உரையில் குறிப்பிட்ட 4 பழங்குடி கிளர்ச்சிகள்

பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு தனது பயணம் குறித்து பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
droupadi-murmu-

ஜூலை 25, 2022 திங்கட்கிழமை, புது தில்லியில், நாடாளுமன்றத்தின் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு, தலைமை நீதிபதி நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். (PTI)

திங்கட்கிழமை இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியினராகவும், நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணியாகவும் புதியதொரு வரலாற்றை எழுதினார்.

Advertisment

பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு தனது பயணம் குறித்து பேசினார். மேலும் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை வலுப்படுத்திய, நான்கு பழங்குடி புரட்சிகளையும் அவர் குறிப்பிட்டார்.

சந்தால் புரட்சி

ஜூன் 30, 1855 இல், வருவாய் அதிகாரிகள், ஜமீன்தார்கள் மற்றும் ஊழல் மோசடி செய்பவர்களின் அடக்குமுறையை கண்டித்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய, தங்களின் தலைவர்களான கன்ஹோ முர்மு, சந்த் முர்மு, பைரப் முர்மு மற்றும் சிதோ முர்மு ஆகியோரால் 10,000 க்கும் மேற்பட்ட சந்தால்கள் அணிதிரட்டப்பட்டனர்.

பழங்குடியின வரலாற்றில் ‘சந்தால் ஹுல்’ என குறிப்பிடப்படும் ஒரு முக்கிய நிகழ்வு, இன்றைய ஜார்கண்டில் உள்ள போக்னாதிஹ் கிராமத்தில் நடந்தது. அவர்களின் நேரடி கிளர்ச்சிக்குப் பிறகு, கிழக்கிந்திய கம்பெனி சட்டங்களைத் திணிப்பதை எதிர்க்க’ சந்தால்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

இந்த நீடித்த கிளர்ச்சியின் விதைகள் 1832 இல் விதைக்கப்பட்டன. கிழக்கிந்திய கம்பெனி ராஜ்மஹால் மலைகளின் காடுகளில் டாமின்-இ-கோ பகுதியை உருவாக்கி, அங்கு சந்தல்களை குடியேற அழைத்தது. இப்படி பல ஆண்டுகளாக, பிரிட்டிஷாரின் சுரண்டல் நடைமுறைகளின் முடிவில் சந்தால்கள்’ தங்களைக் கண்டனர்.

பைகா கிளர்ச்சி

பல சமீபத்திய விளக்கங்களில், 1817 ஆம் ஆண்டு ஒடிசாவின் குர்தாவில் நடந்த பைக்கா கலகம் இந்திய சுதந்திரத்தின் "அசல்" முதல் போர் என்று குறிப்பிடப்படுகிறது. பாரம்பரியமாக ஒடிசாவின் அரசர்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இராணுவ பிரிவினரான - பைக்காக்கள் - முக்கியமாக அவர்களது நில உடைமைகளை அகற்றியதற்காக, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.

கிளர்ச்சிக்கு முன்னதாக, ஆங்கிலேயர்கள் 1803 இல் குர்தா மன்னரை பதவி நீக்கம் செய்து நாடு கடத்தினர், பின்னர் புதிய வருவாய் குடியேற்றங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். தற்காப்பு சேவையில் ஈடுபட்டிருந்த பைக்காஸுக்கு, இந்த இடையூறு அவர்களின் தோட்டங்கள் மற்றும் சமூக அந்தஸ்து இரண்டையும் இழக்கச் செய்தது.

குமுசர் பகுதியில் இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுமார் 400 கோண்ட்கள் இறங்கியதால் கிளர்ச்சிக்கான தூண்டுதல் ஏற்பட்டது. நாடு கடத்தப்பட்ட குர்தா மன்னரின் உயர் பதவியில் இருந்த இராணுவத் தளபதியாக இருந்த பக்ஷி ஜகபந்து பித்யாதர் மொஹபத்ரா பரமர்பார் ராய், கோண்ட்களின் எழுச்சியில் சேர பைக்காஸ் படையை வழிநடத்தினார்.

பானாபூரில் உள்ள அரசாங்க கட்டிடங்களுக்கு பைக்காக்கள் தீ வைத்தனர், காவல்துறையினரை கொன்றனர், கருவூலத்தை சூறையாடினர், பிரிட்டிஷ் உப்பு ஏஜென்ட்டின் கப்பல் சிலிகாவில் நொறுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குர்தாவுக்குச் சென்று பல பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கொன்றனர்.

அடுத்த சில மாதங்களில், பைக்காக்கள் பல இடங்களில் இரத்தக்களரி போர்களை நடத்தினர், ஆனால் பிரிட்டிஷ் இராணுவம்’ கிளர்ச்சியை படிப்படியாக நசுக்கியது.

பக்ஷி ஜகபந்து’ காடுகளுக்குத் தப்பிச் சென்றார், மேலும் 1825 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்களுக்கு பிடிபடாமல் தலைமறைவாக இருந்தார், இறுதியாக அவர் பேச்சுவார்த்தையின் கீழ் சரணடைந்தார்.

கோல் கிளர்ச்சி

சோட்டா நாக்பூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், 1831 இல் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். புதிய நிலச் சட்டங்களின் உதவியுடன் பழங்குடியினர் அல்லாதோர், பழங்குடியினரின் நிலத்தையும் சொத்துக்களையும் படிப்படியாகக் கையகப்படுத்தியதுதான் இங்கும் தூண்டுதலாக இருந்தது.

பூர்வீகக் குடிமக்களின் பொருளாதாரச் சுரண்டலின் மீதான அதிருப்தி, புத்த பகத், ஜோவா பகத் மற்றும் மதரா மஹதோ ஆகியோரின் தலைமையில் ஒரு எழுச்சிக்கு வழிவகுத்தது. கோல்கள்’ ஹோஸ், முண்டாஸ் மற்றும் ஓரான்ஸ் போன்ற பிற பழங்குடியினரால் இணைந்தனர்.

பழங்குடியினர் பாரம்பரிய ஆயுதங்களுடன் போரிட்டனர், ஆனால், காலனித்துவப் படைகள் தங்களின் நவீன ஆயுதங்களால் அவர்களை வென்றனர். இந்த எழுச்சி, ராஞ்சி, ஹசாரிபாக், பலமாவ், மன்பூம் போன்ற பகுதிகளுக்கு பரவி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீடித்தது. முக்கியமாக காலனித்துவ அதிகாரிகள் மற்றும் தனியார் நில உடைமையாளர்களை குறிவைத்தது.

பில் எழுச்சி

மகாராஷ்டிராவின் கந்தேஷ் பகுதியில் உள்ள பில் பகுதிக்குள் ஆங்கிலேயர்கள் ஊடுருவிய பிறகு, பழங்குடியினர் 1818 இல் புதிய ஆட்சியின் கீழ் சுரண்டலுக்கு பயந்து பின் தள்ளப்பட்டனர். தலைவர் சேவரம் தலைமையில் கிளர்ச்சி நடந்தது மற்றும் பிரிட்டிஷ் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி கொடூரமாக நசுக்கப்பட்டது.

முதல் ஆங்கிலோ-பர்மியப் போரில் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்பட்ட பின்னடைவை பில்கள் பயன்படுத்திக் கொள்ள முயன்றதால் இந்த எழுச்சி மீண்டும் 1825 இல் வெடித்தது.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment