Advertisment

சொந்தக் காரங்க வெளிநாட்டில் இருக்காங்களா... செம லக் உங்களுக்கு!

தங்க இறக்குமதி வரியை அதிகரித்து, வெளிநாட்டு உறவினர்களிடம் இருந்து அதிக பணம் பெறும் வகையில் விதிகளை திருத்திய மத்திய அரசு; காரணம் என்ன?

author-image
WebDesk
New Update
Major changes coming from August 1

ஆகஸ்ட் 1 முக்கிய மாற்றங்கள்

Sandeep Singh 

Advertisment

Explained: Why has the govt eased norms for Indians to receive more money from relatives abroad, but hiked import duty on gold?: இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவினர்களிடமிருந்து ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை பெற அனுமதிக்கும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (FCRA) சில விதிகளை உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது.

முன்னதாக, அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே வெளிநாட்டு உறவினர்களிடம் இருந்து பெறலாம். வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கும், நாணய மதிப்பு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் தங்கத்தின் இறக்குமதியைத் தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தங்க இறக்குமதி மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த திருத்தம் வந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் எதற்கு வழிவகுக்கும்?

இரண்டு நாட்களில் எடுக்கப்பட்ட இரண்டு நடவடிக்கைகளும், நிதியின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதையும் மறுபுறம் உள்நோக்கிய பணப்பரிமாற்றத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. உறவினர்கள் பணம் அனுப்பும் வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிப்பது, அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் நாணய மதிப்பை நிலைப்படுத்தும் வகையில், இந்தியாவுக்குள் நிதி வரத்து அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தினால், இந்தியாவில் தங்கத்தின் விலை உயரும் என்பதால், தங்கம் இறக்குமதி குறைவாகும். தங்கம் இறக்குமதியின் காரணமாக நிதி வரத்து அதிகரிப்பு மற்றும் நிதி வெளிச்செல்லும் குறைப்பு ஆகியவை 2022 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கணிசமாக அதிகரித்த நாணய மதிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும்.

கவலைகள் என்ன?

2022 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை முறையே $20.1 பில்லியன் மற்றும் $24.6 பில்லியனாக உயர்ந்து இரண்டு மாதங்களில் $44.7 பில்லியனாக இருந்தது. ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே 2021 இல் வர்த்தக பற்றாக்குறை $21.8 பில்லியனாக இருந்தது. பெட்ரோலியம் இறக்குமதியும் அதே அளவு உயர்வுக்கு வழிவகுத்தாலும், தங்கமும் அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. மே 2022 இல், தங்கம் இறக்குமதி 6 பில்லியன் டாலராக இருந்தது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 670 மில்லியன் டாலர் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு, இறக்குமதி செலவை அதிகரிப்பதற்கும், அதன் இறக்குமதி மற்றும் நுகர்வு ஆகியவற்றை குறைப்பதற்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அந்நிய செலாவணி கையிருப்பு குறித்து கவலை உள்ளதா?

அந்நிய செலாவணி கையிருப்பு வலுவாக இருந்தாலும், அதன் சரிவு குறித்து கவலை உள்ளது. அக்டோபர் 2021 இறுதியில் இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு 642 பில்லியன் டாலர்கள் இருந்தாலும், ஜூன் 24, 2022 நிலவரப்படி அது 593 பில்லியன் டாலராக இருந்தது. எனவே, கடந்த எட்டு மாதங்களில் அந்நிய செலாவணி கையிருப்பில் கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர்கள் சரிவு ஏற்பட்டுள்ளது. முன்னோக்கிச் சந்தையில் கூட இதே காலகட்டத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "இரண்டும் இணைந்தால், 8 மாதங்களில் அந்நிய செலாவணி கையிருப்பின் ஒட்டுமொத்தக் குறைப்பு $70 பில்லியன் ஆகும், அது கவலைக்குரிய ஒரு பெரிய காரணம். அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்தவும், நாணய மதிப்பை நிலைப்படுத்தவும், நிதி வெளியேறுவதைத் தடுத்து, நிதியின் வரத்தை அதிகரிக்க வேண்டும்” என்று நிதிச் சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment