Advertisment

மொத்த டீசல் விலை உயர்வும், அதன் தாக்கங்களும்

மொத்த டீசல் விலை ரூ.25 உயர்வு; அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னென்ன?

author-image
WebDesk
New Update
மொத்த டீசல் விலை உயர்வும், அதன் தாக்கங்களும்

Karunjit Singh

Advertisment

Explained: Hike in price of bulk diesel and its impact: எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) ஞாயிற்றுக்கிழமை மொத்த டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 25 ரூபாய் உயர்த்தியுள்ளன, இதனால் சில்லறை நுகர்வோரை விட வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ரயில்வே போன்ற மொத்த நுகர்வோருக்கு எரிபொருளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 43 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு 78.11 டாலரில் இருந்து 111.4 டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

டீசலை மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்குபவர்களுக்கு டீசல் விலையில் என்ன வித்தியாசம்?

நாடு முழுவதும் உள்ள எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீசலின் விலையை விட மொத்த விற்பனை டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகமாக உள்ளது. மும்பையில், டீசலின் மொத்த விலை லிட்டருக்கு ரூ.122 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, அதேநேரம் மும்பையில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.14 ஆக இருந்தது என்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: தெலங்கானா போதன் நகரில் சிவாஜி சிலையால் சர்ச்சை

அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் (Indian Oil Corporation Ltd.), பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum Corporation Ltd.) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum Corporation Ltd) ஆகியவை கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை நிலையானதாக வைத்திருக்கின்றன. சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டின் விற்பனையில் குறிப்பிடத்தக்க இழப்பை எதிர்கொள்கின்றன.

மொத்த டீசல் விலை உயர்வின் தாக்கம் என்ன?

இந்திய ரயில்வே, மால்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற முக்கிய மொத்தமாக டீசல் வாங்குபவர்கள் சில்லறை நுகர்வோரை விட கணிசமாக அதிக விலையை எதிர்கொள்வார்கள். மொத்தமாக டீசல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கையானது மொத்த நுகர்வோரை சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருளைப் பெற ஊக்குவிக்கும் என்று தொழில்துறை குறிப்பிட்டுள்ளது.

”டீசலின் சில்லறை விற்பனை மற்றும் தொழில்துறை விலைக்கு இடையே லிட்டருக்கு ரூ.25 அதிகரித்ததன் காரணமாக எரிபொருள் நிலையங்களில் (சில்லறை விற்பனை நிலையங்கள்) தேவை அதிகரித்து வருகிறது. டீலர்கள் மற்றும் B2B & B2C வாடிக்கையாளர்கள், அதிக விலை உயர்வை எதிர்பார்த்து தங்கள் தொட்டிகள் மற்றும் கையிருப்புகளை நிரப்புவதற்கு அதிக அளவில் எரிபொருளை ஏற்கனவே கொள்முதல் செய்துள்ளனர், என்று ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் (RBML) செய்தித் தொடர்பாளர் கூறினார், RBML நாடு முழுவதும் 1380 சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை இயக்குகிறது.

RBML இன் ஆதாரங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டின் விநியோகத்தையும் சில்லறை விற்பனை நிலையங்களில் குறைத்துள்ளதாக உறுதிப்படுத்தியது, ஏனெனில் இரண்டு தயாரிப்புகளின் விற்பனையிலும் அது நஷ்டத்தை எதிர்கொள்கிறது. 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டபோது, ​​அரசுக்குச் சொந்தமான OMCகள் வழங்கும் மானிய விலைகளுக்கு வழங்க முடியாமல், ரிலையன்ஸ் எரிபொருள் சில்லறை விற்பனை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எரிபொருள் விலை உயர்வை எதிர்பார்த்து பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு கடுமையாக அதிகரித்துள்ளதாக கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Diesel Price
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment