Advertisment

கோவிட் அவசரநிலை நேரங்களில் செய்ய வேண்டியவை என்ன?

Explained: What to do in case of a Covid-19 emergency: ஆக்சிஜன் செறிவு வீழ்ச்சி, காய்ச்சல், மார்பில் வலி, கடுமையான தலைவலி, ஆக்ஸிஜன் செறிவு 92 க்குக் கீழே இருப்பது, மற்றும் சுவாசக் கோளாறு. இது தவிர, ஒரு நபர் 6 நிமிட நடை சோதனை செய்ய முடியாவிட்டால், அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது, எனவே அதை அவசரகால சூழ்நிலையாக கருத வேண்டும்

author-image
WebDesk
New Update
கோவிட் அவசரநிலை நேரங்களில் செய்ய வேண்டியவை என்ன?

கோவிட் நோயாளிகள் மிகவும் தாமதமாக மருத்துவமனைகளை அடைகிறார்கள் இதன் காரணமாக அவர்கள் வழியிலே இறந்துவிடுகிறார்கள், அல்லது படுக்கைக்காக காத்திருக்கிறார்கள், அல்லது நேராக ஐ.சி.யுவில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பல மருத்துவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையை ஒருவர் எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மருத்துவர்களிடம் கேட்டறிந்தது.

Advertisment

கோவிட் அவசரநிலை என்றால் என்ன?

லூதியானாவின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அவசரநிலை பிரிவு தலைமை மருத்துவர் அபிமன்யு ஷர்மா, “கோவிட் அவசரகால அறிகுறிகளாகக் கருதக்கூடிய அறிகுறிகள், ஆக்சிஜன் செறிவு வீழ்ச்சி, ஹீமோடைனமிக் உறுதியற்ற தன்மை, தீர்க்கப்படாத உயர் தர காய்ச்சல், மார்பில் வலி, கடுமையான தலைவலி, ஆக்ஸிஜன் செறிவு 92 க்குக் கீழே இருப்பது, மற்றும் சுவாசக் கோளாறு. இது தவிர, ஒரு நபர் 6 நிமிட நடை சோதனை செய்ய முடியாவிட்டால், அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது, எனவே அதை அவசரகால சூழ்நிலையாக கருத வேண்டும்”. என்று கூறுகிறார்.

எந்த அறிகுறிகளை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது?

மூச்சுத் திணறல், 94 சதவீதத்திற்கு மேல் ஆக்ஸிஜன் செறிவூட்டலைப் பராமரிக்க முடியாமல் இருப்பது அல்லது சில நிமிடங்கள் நிற்கும்போது கூட அமைதியற்றதாக உணர்வது, படபடப்பு, அதிக துடிப்பு அல்லது இதய துடிப்பு (நிமிடத்திற்கு 100 க்கு மேல்), தொடர்ச்சியான தளர்வான மலம் அல்லது வாந்தியெடுத்தல், உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் அல்லது அதிக நீரிழப்பு, எச்சிலில் இரத்தம் அல்லது இருமல் ஆகியவை சில அறிகுறிகளாகும், இவற்றை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று லூதியானாவில் பயிற்சி பெறும் பொது மருத்துவர் டாக்டர் சுரேந்திர குப்தா கூறுகிறார்.

இதை எவ்வாறு தடுக்க முடியும்?

மருத்துவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்யுங்கள், ஆக்ஸிஜன் அல்லது நாடி துடிப்பு விகிதத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் கண்காணிக்கவும், மேலும் நீரேற்றத்துடன் இருங்கள். தூக்கம் ஹைப்போக்ஸியாவுக்கு வழிவகுக்கும் இதனால் ஒருவருக்கு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம். இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு குவிவது தலைச்சுற்றலை ஏற்படுத்தும் எனவே, ஆழமான சுவாசப் பயிற்சி எடுப்பது இரத்தத்தில் உள்ள வாயுக்களின் சரியான சமநிலையை பராமரிக்க உதவுகிறது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய சத்தான உணவு மற்றும் திரவங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீரான இடைவெளிக்குப் பிறகு சிறிது தண்ணீர் பருகினால் ஆக்ஸிஜனும் கிடைக்கும் என்று இன்டாஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அங்கூர் ஷா கூறினார்.

கோவிட் அவசரநிலை ஏற்பட்டால் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

நோயாளி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு எப்போதும் சிகிச்சையளிக்கும் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் ஒரு சிறப்பு மருத்துவ நிபுணருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் அல்லது ஒரு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நோயாளியின் நிலையைப் பொறுத்து, உள்ளூர் கோவிட் படுக்கை கிடைக்கும் ஆப்-ஐ பயன்படுத்தி ஆக்ஸிஜன் படுக்கைக்கு ஏற்பாடு செய்யப்படலாம்.

ஆர்டி-பி.சி.ஆரைத் தவிர, அறிகுறிகள் தோன்றிய முதல் நாள் முதல் வேறு என்ன சோதனைகள் நடத்தப்பட வேண்டும்?

கோவிட் சோதனையான ஆர்டி-பி.சி.ஆரைத் தவிர, முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி), இரத்த சர்க்கரை அளவு, அளவு-சிஆர்பி (சி-ரியாக்டிவ்-புரதம்), எஸ்ஜிஓடி, டி-டைமர், எல்.டி.எச், ஃபெரெடின், ஐ.எல் -6, சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயல்பாடு சோதனைகள் மற்றும் இதயத்திற்கான HRCT ஆகியவை மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பீட்டிற்கு செய்யப்பட வேண்டும்.

இந்த சோதனைகள் உடலின் முக்கிய உறுப்புகள் சரியாக செயல்படுகின்றனவா என்பதையும், அதற்கேற்ப மருந்துகளைத் தொடங்க முடியுமா என்பதையும் அல்லது உடலில் ஏதேனும் வீக்கம் உள்ளதா என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது என்று இருதயநோய் நிபுணரும் முன்னாள் ஐ.எம்.ஏ தலைவருமான டாக்டர் குல்வந்த் சிங் கூறினார்.

ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் நெகட்டிவ், ஆனால் சிஆர்பி சோதனையில் பாஸிடிவ் மற்றும் எச்.ஆர்.சி.டி, கோவிட் நிமோனியாவைக் குறிக்கிறது என்றால் என்ன செய்வது?

கோவிட் -19 நெறிமுறையின்படி ஒருவர் சிகிச்சையைத் தொடங்க வேண்டும், ஏனெனில் சி.டி ஸ்கேன் நுரையீரலில் கொரோனா தொற்றின் ஈடுபாட்டைப் பற்றிய தெளிவான படத்தைக் கொடுக்கிறது. ஆர்டி-பி.சி.ஆருக்கு 70 சதவிகிதம் மட்டுமே உணர்திறன் உள்ளது மற்றும் தவறான நெகட்டிவ் முடிவுகளும் உள்ளன. எனவே, விரைவில் சிகிச்சை தொடங்க வேண்டும் என்று டாக்டர் அபிமன்யு கூறினார்.

சாதாரண நேரத்தில் வீட்டில் எந்த வகையான சிகிச்சையைப் பின்பற்றலாம்?

நோயாளி ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்ய வேண்டும். நோயாளி ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் 6 நிமிட நடை சோதனை செய்ய வேண்டும், நடை பயிற்சிக்கு பிறகு ஆக்ஸிஜன் செறிவு மற்றும் துடிப்பு அளவுகளை பதிவு செய்ய வேண்டும். இதனால் SpO2 அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிறந்த கண்காணிப்புக்கு ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ், நோயாளி வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நோயாளிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பீதி அடையக்கூடாது.

நோயாளி குறுகிய சுவாச பயிற்சிகளைச் செய்ய வேண்டும், தங்கள் வீட்டிற்குள் சிறிது நேரம் நடக்க வேண்டும். இது நோயாளி வயதானவராகவோ அல்லது நீரிழிவு நோயாளியாகவோ இருந்தால் அவருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டலை அதிகரிக்க உதவும்.

இங்கே, சாதாரண சுவாச பயிற்சிகளைப் பின்பற்றலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், அதே நேரத்தில் ஆக்ஸிஜன்-செறிவு வீழ்ச்சி மற்றும் இதயத் துடிப்பு கூர்மையான அதிகரிப்பு ஆகியவற்றைக் காண்பிப்பவர்களுக்கு மார்பு இறுக்கத்திற்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தும் சிகிச்சையை வழங்க வேண்டும், அதாவது நுரையீரல் நிமோனியா.

கோவிட் அவசரநிலையைத் தவிர்க்க என்ன வகையான மருந்துகள் கொடுக்க வேண்டும்?

வாய்வழி மற்றும் மூச்சுக்குழாய்கள் மூலம் உள்ளிழுக்கும் ஸ்டெராய்டுகள் கொடுக்கப்பட வேண்டும், ஆண்டிபயாடிக், வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் நீராவி உள்ளிழுத்தல் ஆகியவை அவசரநிலைகளைத் தவிர்க்க மருந்துகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆல்கஹால் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் ஒருவர் கோவிட் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இணை நோய் உள்ள நோயாளிகள் கோவிட் அவசரநிலையை எவ்வாறு தவிர்க்கலாம்?

நீரிழிவு நோய் அல்லது இதய நோய் அல்லது சிறுநீரக நோய்கள் அல்லது பக்கவாதம் போன்ற நோயுற்றவர்கள் தங்கள் மருந்துகளைத் தொடர வேண்டும் மற்றும் அவர்களின் அத்தகைய நோய்களில் நல்ல கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து ஆழ்ந்த சுவாசத்தை கடைபிடிக்க வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும், உற்சாகமாகவும் மற்றும் மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டுச் சூழலில் கூட உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் செறிவூட்டலைத் தவிர்த்து, அவர்களின் இரத்த-குளுக்கோஸ், இரத்த அழுத்தத்தை அவர்கள் தவறாமல் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் அசாதாரண உணர்வு அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்கள் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும், என்று டாக்டர் குப்தா கூறினார்.

ஒரு நோயாளி அடிக்கடி சோதனைகள் செய்ய வேண்டுமா?

நோயாளிகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். ஆகவே, ஆர்டி-பி.சி.ஆர் அல்லது ஆய்வக சோதனைகள் மற்றும் இதயத்திற்கான எச்.ஆர்.சி.டி ஆகியவை ஒரே நேரத்தில் செய்யப்பட்டால் நல்லது, ஆனால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி தேவைப்பட்டால் சோதனைகளை மீண்டும் செய்யலாம். இருப்பினும், மிகுந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

ஒரு கோவிட் நோயாளியின் கட்டாய 14 நாட்கள் தனிமையை, நோயாளி மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நோயாளிகளை ஜன்னல்கள் மற்றும் ஒரு குளியலறையுடன் கூடிய ஒரு தனி அறையில் வைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பீதியடையக்கூடாது மற்றும் தடுப்பூசிக்கு ஓடத் தொடங்கக்கூடாது, ஏனெனில் இது எதிர் விளைவைத் தரும்.

ஒருவர் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். குடும்ப மருத்துவர்கள் அல்லது ஒரு சிறப்பு மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தவிர, தனிமையில், நோயாளிகள் தங்கள் ஆன்லைன் வணிக நடவடிக்கைகளைத் தொடர வேண்டும், வீடியோ அழைப்புகள் மூலம் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று டாக்டர் குப்தா கூறினார். மேலும் ஆய்வக பணியாளர்கள் மாதிரி சேகரிப்புக்காக நோயாளிகளை மீண்டும் மீண்டும் அழைக்கக்கூடாது, ஏனெனில் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் .

நோயாளிகளுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை முறையான இடைவெளியில் கொடுக்கப்பட வேண்டும். நோயாளி சாதாரண நிலையில் இருந்தால், நோயாளி சோப்பு அல்லது சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலுடன் தங்கள் அறை மற்றும் குளியலறையை அவர்களே சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும் அல்லது பராமரிப்பாளர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி அதைச் செய்ய வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Covid 19 Corona Treatment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment