Advertisment

சிவசேனா சின்னம் பெற தாக்கரே – ஷிண்டே இடையே போட்டி; தேர்தல் ஆணையம் எப்படி முடிவு எடுக்கும்?

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிளவைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, கட்சியின் வில் & அம்பு சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கேவியட் மனு; இத்தகைய சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் எப்படி முடிவு எடுக்கிறது?

author-image
WebDesk
New Update
சிவசேனா சின்னம் பெற தாக்கரே – ஷிண்டே இடையே போட்டி; தேர்தல் ஆணையம் எப்படி முடிவு எடுக்கும்?

Ritika Chopra 

Advertisment

Explained: As Uddhav Thackeray and Eknath Shinde battle over Shiv Sena symbol, how will EC decide?: ஒரு அரசியல் கட்சியின் சின்னம் தொடர்பாக மீண்டும் ஒரு போருக்கு களம் அமைக்கப்பட்டுள்ளது.

திங்களன்று, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, கட்சியின் வில்-அம்பு சின்னத்திற்கான உரிமைகோரலை முடிவு செய்வதற்கு முன், தனது தரப்பைக் கேட்குமாறு கோரியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்தி காரணமாக, சிவசேனா அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை இழந்து, இறுதியில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் வீழ்ந்தது.

சின்னம் தொடர்பான மோதல் இன்னும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தின் வாசலை எட்டாததால், உத்தவ் தாக்கரே முகாம் தேர்தல் ஆணையத்தை அணுகுவது ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாகும். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் "அசல்" சிவசேனா என்று கூறிக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே, கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோருவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் கடிதம் எழுதவில்லை.

இதையும் படியுங்கள்: கர்ப்பப்பை புற்றுநோய்க்கு இந்திய தடுப்பூசி: குறைந்த விலையில் விற்பனை; சீரம் அறிவிப்பு

"சிவசேனா தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் ஏதேனும் ஒரு கட்சி அல்லது குழு தேர்தல் ஆணையத்தை அணுகினால், அசல் சிவசேனாவை <உத்தவ் தாக்கரே தலைமையிலான> வழக்கில் ஒரு கட்சியாக சேர்க்குமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளோம்" என்று சிவசேனா எம்பி அனில் தேசாய் கூறினார்.

ஏக்நாத் ஷிண்டே முகாம் தேர்தல் ஆணையத்தை அணுகினால், தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் வரை இரு தரப்பும் அதை பயன்படுத்த முடியாதபடி சின்னத்தை முடக்கிவிடும்.

தேர்தல் ஆணைய விசாரணைகள் என்பது நீண்ட மற்றும் விரிவானவை, மேலும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம். கட்சிகள் பிளவுபடும்போது, ​​ஒரு கட்சியின் அடையாளமுமாகவும் வாக்காளர்களுடனான அடிப்படைத் தொடர்புமாக இருக்கக்கூடிய சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை எப்படி முடிவு செய்வது?

அத்தகைய சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன?

சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு அரசியல் கட்சியில் பிளவு பற்றிய கேள்வியில், சின்னங்கள் ஆணை, 1968 இன் பாரா 15, கூறுகிறது: “<தேர்தல்> கமிஷன் திருப்தி அடையும் போது... வழக்கின் அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, <அவர்களின்> பிரதிநிதிகளைக் கேட்டபின்… அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் போட்டிப் பிரிவுகள் அல்லது குழுக்கள் உரிமை கோரும் போது தேர்தல் ஆணையம் அவை ஓவ்வொன்றையும் அந்தக் கட்சி என்று அங்கீகரிக்கும், மற்றும் கேட்கப்பட விரும்பும் பிற நபர்கள், அத்தகைய போட்டி பிரிவு அல்லது குழு அல்லது அத்தகைய போட்டி பிரிவுகள் அல்லது குழுக்கள் எதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்று முடிவு செய்கிறார்கள் மற்றும் கமிஷனின் முடிவு அத்தகைய அனைத்து போட்டி பிரிவுகள் அல்லது குழுக்களுக்கும் கட்டுப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளில் உள்ள சர்ச்சைகளுக்கும் இது பொருந்தும். பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் பிளவு ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் பொதுவாக சண்டையிடும் பிரிவுகளுக்கு தங்கள் வேறுபாடுகளை தங்களுக்குள்ளாகவே தீர்க்க அல்லது நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்துகிறது.

சின்னங்கள் ஆணை அமலுக்கு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையம் இதுபோன்ற விஷயங்களை எவ்வாறு எதிர்கொண்டது?

1968 க்கு முன், தேர்தல் நடத்தை விதிகள், 1961 இன் கீழ் தேர்தல் ஆணையம் அறிவிப்புகள் மற்றும் நிர்வாக உத்தரவுகளை வெளியிட்டது. 1968 க்கு முன் ஒரு கட்சியின் மிக உயர்ந்த பிளவு என்பது 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தது. பிரிந்து சென்ற குழு 1964 டிசம்பரில் தேர்தல் ஆணையத்தை அணுகியது, மற்றும் அதை சிபிஐ (மார்க்சிஸ்ட்) என்று அங்கீகரிக்க வலியுறுத்தியது. ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு ஆதரவளித்த பட்டியலை அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். பிரிந்து சென்ற குழுவை ஆதரிக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெற்ற வாக்குகள் 3 மாநிலங்களில் 4%க்கும் அதிகமாகச் சேர்ந்ததைக் கண்டறிந்ததையடுத்து அந்த பிரிவை சிபிஐ(எம்) என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

1968 ஆணையின் 15வது பாராவின் கீழ் முடிவு செய்யப்பட்ட முதல் வழக்கு எது?

இது இந்திய தேசிய காங்கிரஸில் முதல் பிளவு - 1969 இல். பின்னர் கட்சிக்குள் ஒரு போட்டி குழுவுடன் பிரதமர் இந்திரா காந்தியின் பதற்றம் மே 3, 1969 அன்று ஜனாதிபதி டாக்டர் ஜாகீர் உசேன் இறந்தப்போது வந்தது. 'சிண்டிகேட்' என அறியப்பட்டவர்கள், காங்கிரஸின் பழைய காவலர், கே காமராஜ், நீலம் சஞ்சீவ ரெட்டி, எஸ் நிஜலிங்கப்பா மற்றும் அதுல்யா கோஷ் ஆகியோர் தலைமையில், நீலம் சஞ்சீவ் ரெட்டியை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்தனர். இந்திரா காந்தி துணைத் தலைவர் வி.வி.கிரியை சுயேட்சையாகப் போட்டியிட ஊக்குவித்தார், மேலும் கட்சியின் தலைவர் நிஜலிங்கப்பா வழங்கிய கொறடா உத்தரவை மீறி "மனசாட்சி வாக்களிக்க" இந்திரா காந்தி அழைப்பு விடுத்தார். வி.வி.கிரி வெற்றி பெற்ற பிறகு, இந்திரா காந்தி காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும் கட்சி நிஜலிங்கப்பா தலைமையிலான "பழைய" காங்கிரஸ்(ஓ) மற்றும் இந்திரா காந்தி தலைமையிலான "புதிய" காங்கிரஸ் (ஆர்) என பிரிந்தது.

publive-image

"பழைய" காங்கிரஸ் ஒரு ஜோடி காளைகள் நுகத்தை சுமக்கும் கட்சி சின்னத்தை தக்க வைத்துக் கொண்டது; பிரிந்து சென்ற பிரிவினருக்கு கன்றுக்குட்டியுடன் கூடிய பசுவின் சின்னம் வழங்கப்பட்டது.

தேர்தல் சின்னம் தொடர்பான சர்ச்சையைத் தீர்க்க பெரும்பான்மை சோதனையைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

இதுவரை தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்பட்ட அனைத்து சர்ச்சைகளிலும், பெரும்பான்மையான கட்சி பிரதிநிதிகள்/அலுவலர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஒரு பிரிவை ஆதரித்துள்ளனர். கட்சி அமைப்பில் உள்ள ஆதரவின் அடிப்படையில் போட்டி குழுக்களின் பலத்தை தேர்தல் ஆணையம் சோதிக்க முடியாத போதெல்லாம் (அலுவலர்கள் பட்டியல் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக), தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மட்டுமே பெரும்பான்மையை சோதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு 1987-ல் அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு விவகாரத்தில்தான் தேர்தல் ஆணையம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை எதிர்கொண்டது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையிலான குழுவுக்கு பெரும்பான்மையான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், ஜெ.ஜெயலலிதாவுக்கு கட்சி அமைப்பில் கணிசமான பெரும்பான்மை ஆதரவும் இருந்தது. ஆனால், எந்தக் குழு கட்சி சின்னத்தை தக்கவைக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதற்கு முன்பே, ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

தாய்க் கட்சியின் சின்னத்தைப் பெறாத குழுவுக்கு என்ன நடக்கும்?

முதல் காங்கிரஸ் பிளவு வழக்கில், ஜக்ஜீவன் ராம் தலைவராக இருந்த காங்கிரஸ்(O) மற்றும் பிரிந்த பிரிவு இரண்டையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. காங்கிரஸ்(O) சில மாநிலங்களில் கணிசமான முன்னிலையில் இருந்தது மற்றும் சின்னங்கள் ஆணையின் 6 மற்றும் 7 வது பிரிவின் கீழ் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை திருப்திப்படுத்தியது.

இந்த கொள்கை 1997 வரை பின்பற்றப்பட்டது.

எவ்வாறாயினும், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஜனதாதளத்தில் ஏற்பட்ட பிளவு வழக்குகளை தேர்தல் ஆணையம் கையாண்டபோது நிலைமை மாறியது. சர்ச்சைகள் ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸ், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் போன்றவற்றை உருவாக்க வழிவகுத்தது. பின்னர் தேர்தல் ஆணையம் புதிய கட்சிகளை மாநில அல்லது தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் தாய் (பிரிக்கப்படாத) கட்சிகளின் டிக்கெட்டுகளில் தேர்தலில் போராடி வெற்றி பெற்றதால், வெறுமனே எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மட்டும் போதாது என்று உணர்ந்தது. தேர்தல் ஆணையம் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் கட்சியின் சின்னம் பெற்ற குழுவைத் தவிர மற்ற கட்சிகள் தனிக் கட்சியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும், மேலும் பதிவு செய்த பிறகு மாநில அல்லது மத்திய தேர்தல்களில் அதன் செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே தேசிய அல்லது மாநில கட்சி அந்தஸ்துக்கு உரிமை கோர முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Election Commission Shiv Sena
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment