Advertisment

உணவு பொருட்களின் விலை அதிகரிக்குமா?

சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள் தவிர மற்ற உணவுப் பொருட்களில் ஒப்பீட்டளவில் குறைந்த உள்நாட்டு பணவீக்கம் இரண்டு முக்கிய காரணங்களால் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
crude oil prices, food price

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் பீப்பாய் ஒன்றுக்கு 75 டாலராக அதிகரித்து வெள்ளிக்கிழமை 76.18 டாலராக முடிவடைந்தது. இது 29 அக்டோபர் 2018 முதல் பார்க்கும்போது மிகவும் அதிகரித்த விலையாகும். ப்ரெண்ட் ஒரு வருடத்திற்கு முன்பு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 41 டாலருக்கு மேல் வர்த்தகம் ஆனது. இந்திய நுகர்வோருக்கு முழுமையாக அனுப்பப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் உணவின் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

இந்தியா மற்றும் உலகம்

முக்கிய விவசாய பொருட்களின் உலகளாவிய விலைகளை அட்டவணை 1 காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது. ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உலக உணவு விலைக் குறியீடு (FPI) மே மாதத்தில் 127.1 புள்ளிகளைத் தொட்டது. இது செப்டம்பர் 2011 முதல் கணக்கிடும் போது அதன் உயர்ந்த மதிப்பாகும்.

ஆனால் எரிபொருளைப் போலல்லாமல், உலகளாவிய உணவு விலைகளின் அதிகரிப்பு இந்தியாவில் நுகர்வோர் பணம் செலுத்துவதில் பிரதிபலிக்கவில்லை. இந்தியாவில் ஆண்டு நுகர்வோர் உணவு விலைக் குறியீடு (CFPI) பணவீக்கம், மே மாதத்தில் 5% ஆக இருந்தது, அதே மாதத்தில் FAO-FPI இல் ஆண்டுக்கு ஆண்டு 39.7% உயர்வைக் காட்டிலும் மிகக் குறைவாக இருந்தது.

CFPI மற்றும் FAO-FPI பணவீக்க விகிதங்கள் பிப்ரவரி 2020 வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்ததாலும், அதன்பிறகு அந்தக் காலம் குறிப்பிடத்தக்க மாறுபாட்டை கண்டது. கொரோனா பரவிய 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு உலகளாவிய உணவு பணவீக்கம் செயலிழந்தது. மறுபுறம், இந்தியாவில் சில்லறை உணவு பணவீக்கம் நவம்பர் வரை இரட்டை இலக்கங்களைச் சுற்றி வந்தது. இருப்பினும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு உலகளாவிய உணவு விலைகள் மீட்கப்படுவதன் வேகத்தை அதிகரித்துள்ளது.

வேறுபாடு ஏன்?

செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சர்வதேச உணவு விலைகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் பொருளாதார முடக்கத்தாலும், விநியோக சங்கிலிகளை மீட்டெடுப்பதற்கு நேரம் தேவைப்பட்டதாலும் தான். அப்போது சீன கையிருப்பு மிகவும் உதவியது. பிரேசில், அர்ஜென்டினா, உக்ரைன், தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் கூட வறண்ட வானிலையால் உற்பத்தி குறைபாடு ஏற்பட்டது.

இந்தியாவில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பருவ மழை பெய்ததால் விவசாயம் நன்கு இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவைத் தவிர கடுமையான வானிலை தொடர்பான பிரச்சனைகளை இந்தியா எதிர்கொள்ளவில்லை. டிசம்பர் முதல் உணவு பணவீக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பருவமழைக்குப் பிந்தைய கரிப் பயிர் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு வந்துள்ளது.

publive-image

Table 2 உள்நாட்டு சில்லறை உணவு பொருட்கள் விலையை காட்டுகிறது. இவை பெரும்பாலும் இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களான சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகளில் அதிகரித்துள்ளன.இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 13-15 மில்லியன் டன் (எம்டி) சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்கிறது மற்றும் வெறும் 7.5-8.5 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

பருப்பு வகைகளில், உள்நாட்டு உற்பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15-16 மெட்ரிக் டன்னிலிருந்து 22-23 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இறக்குமதியும் 2.5-3 மெட்ரிக் டன்னுக்கு பாதியாக குறைந்துவிட்டாலும், அவை உள்நாட்டு விலைகளில் கணிசமான செல்வாக்கை செலுத்துகின்றன. சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, எரிபொருளைப் போலவே சர்வதேசத்திலிருந்து உள்நாட்டு சந்தைகளுக்கு தானாகவே விலைகள் மாறுகிறது. ஆனால் தானியங்கள், சர்க்கரை, பால் மற்றும் பிரதான காய்கறிகளுக்கும் இது பொருந்தவில்லை.

சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள் தவிர மற்ற உணவுப் பொருட்களில் ஒப்பீட்டளவில் குறைந்த உள்நாட்டு பணவீக்கம் இரண்டு முக்கிய காரணிகளால் கூறப்படுகிறது. நாட்டில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பயிர்களில் சப்ளை பற்றாக்குறை பருவமழை மற்றும் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டது. உணவகங்கள், ஸ்வீட், மீட் கடைகள், விடுதிகள் மற்றும் கேன்டீன்கள் மூடப்பட்டது அல்லது குறைந்த திறனில் இயங்கியது. திருமண வரவேற்பு, பிற பொது விழாக்கள் தவிர உணவு தேவை என்பது பெரும்பாலும் வீடுகளுக்கு மட்டுமே இருந்தது. ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளின் சுருக்கத்தால் வேலை மற்றும் வருமான இழப்புகளை சந்திக்க நேர்ந்த பல வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டது.

வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவில் உணவு பணவீக்கம் நான்கு விதங்களில் தீர்மானிக்கப்படுகிறது. முதலாவது சர்வதேச விலைகள், இது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு முக்கியமானது. தற்போதைய எழுச்சி தற்காலிக விநியோக பக்க இடையூறுகளின் விளைவாக இருந்ததா அல்லது 2007-2013 காலப்பகுதியில் காணப்பட்ட ஒரு பெரிய முன்னோடியாக இருந்ததா என்பது தெளிவாக இல்லை. மே 1 இல் பெரும்பாலான வேளாண் பொருட்களின் உலகளாவிய விலையில் சமீபத்திய உச்சத்தை எட்டியதாக அட்டவணை 1 காட்டுகிறது. அப்போதிருந்து வீழ்ச்சி கவனிக்கப்படுகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய்களில் கவனிக்கப்படுகிறது, அவை உண்மையிலேயே அதிகமாக உள்ளன.

இரண்டாவது பருவமழை: மே மாதத்தில் 74% உபரி மழையைப் பெற்றிருந்தாலும், தென்மேற்கு பருவமழை (ஜூன்-செப்டம்பர்) இதுவரை சராசரியாக 18% க்கும் அதிகமான மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது. இது விவசாயிகளால் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும், மேலும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளின் கீழ் நிலங்களை விரிவுபடுத்த வேண்டும். உற்பத்தி பகுதி மற்றும் மகசூல் இரண்டின் செயல்பாடாக இருப்பதால், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காரீப் பயிர்கள் தாவர வளர்ச்சியில் மழைப்பொழிவிலும் முக்கியப் பங்கு உள்ளது.

மூன்றாவது எரிபொருள் விலை அதிகரிப்பு: இதன்மூலம் நுகர்வோர் வாங்கும் பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது. உதாரணமாக பாலை எடுத்துக்கொண்டால், பால் பண்ணைகள் அதன் போக்குவரத்து செலவுகள், முதலில் கிராம சேகரிப்பு மையங்களிலிருந்து 2000 முதல் 3000 லிட்டர் திறன் கொண்ட மினி லாரிகளில் பால் ஆலைகளுக்கு எடுத்து வரப்படுகிறது. Pasteurised செய்யப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட பால் மேலும் 10,000 முதல் 15,000 லிட்டர் டேங்கர்களில் ஆலைகளில் இருந்து சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு ரூ .15 முதல் 16 உயர்ந்துள்ள போதிலும், பெரும்பாலான பால்பண்ணைகள் தங்கள் பால் விகிதங்களை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக பலர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலைகளை குறைத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% திடப்பொருட்களைக் கொண்ட பாலின் கொள்முதல் விலை பிப்ரவரி-மார்ச் மாதங்களில் லிட்டருக்கு 31-32 ரூபாயாக ஆக இருந்தது (இரண்டாவது அலைக்கு முந்தையது) இப்போது 21-25 ரூபாயாக ஆக குறைந்துள்ளது. இதனால், எரிபொருள் செலவை கடந்து செல்வது நுகர்வோர் செலுத்தும் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அல்லாமல், உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் விலைகளை குறைப்பதன் மூலம் நடந்துள்ளது.

இறுதியாக அரசியல்: முதல் காலகட்டத்தில் உணவு பணவீக்கம் மோசமாக இருந்தது. CFPI யின் வருடாந்திர உயர்வு ஜூன் 2014 முதல் மே 2019 வரை சராசரியாக 3.3% ஆக இருந்தது. அதே பணவீக்கம் ஜூன் 2019 முதல் மே 2021 வரை அதன் இரண்டாவது காலப்பகுதியில் சராசரியாக 7.4% ஆக உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த அரசை கட்டாயப்படுத்தியுள்ளன. மேலும் கோதுமை மற்றும் நெல் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு கொள்முதல் செய்யவும் வைத்தது. உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களுடன் சர்க்கரை விலை அதிகரிப்பு, கரும்பு பயிரிடுவோருக்கு ஆலைகள் அதிக கட்டணம் செலுத்த உதவுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment