மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தேசிய தலைநகர் புதுடெல்லி எல்லையில் போராடி வருகின்றனர்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக பங்களித்த போதிலும் இந்தியாமக்கள்தொகையில் கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர் வேளாண் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய அரசு தனது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை இங்கே காண்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.