Apurva Vishwanath , Ritika Chopra
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புதிய தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய தடை கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. தற்போதைய விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று நீதிமன்றம் கூறினாலும், 2017 இல் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு பெரிய அரசியலமைப்பு சவால் இன்னும் நிலுவையில் உள்ளது.
நிலுவையில் உள்ள சவால் என்ன?
Association for Democratic Reforms அமைப்பால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மைப்பு தேர்தல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகூறுதல் மற்றும் லாபநோக்கமற்ற அமைப்பாகும். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்ரம் அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில்களை எதிர்பார்த்தது. ஆனாலும், அதற்கு பின்பு இந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. தேர்தல் பத்திர திட்டங்களின் அரசியல் அமைப்பை சவால்விடுப்பது மட்டுமின்றி, மனுதாரர்கள் அரசியல் கட்சிகளை பொது அலுவலகங்களாக எடுத்துக் கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் அக்கட்சிகளின் வருமானம் மற்றும் செலவீனங்களை வெளியிட நிர்பந்திக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
நிலுவையில் உள்ள மனுவை நீதிமன்றம் முடிவு செய்யும் வரை, தற்போதைய விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரி மனுதாரர்களின் மற்றொரு வேண்டுகோளின் பேரில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வந்தது.
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?
2017ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. மறைமுகாக அரசியல் கட்சிகளுக்கு பணம் வழங்கும், வட்டியற்ற ஒரு அமைப்புமுறையாகும். இந்த பத்திரங்களில் நன்கொடை கொடுக்கும் நபர்களின் பெயர்களோ வாங்கும் நபர்களின் பெயர்களோ இடம் பெறாது. இந்த பத்திரங்களை வைத்திருப்பவர்கள் (அரசியல் கட்சிகள்) இதன் உரிமையாளர்களாக கருதப்படுவார்கள்.
இந்த பத்திரங்கள் ரூ. 1000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. ஒரு கோடி என்ற மடங்களில் விற்கப்படுகிறது. மேலும் அவற்றை விற்க அங்கீகாரம் பெற்ற ஒரே வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டுமே. நன்கொடையாளர்கள் ஒரு அரசியல் கட்சிக்கு பத்திரங்களை வாங்கலாம் மற்றும் நன்கொடை அளிக்கலாம், இது பத்திரங்களை அதன் சரிபார்க்கப்பட்ட கணக்கு மூலம் 15 நாட்களுக்குள் இணைக்க முடியும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் வாங்கக்கூடிய பத்திரங்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. ஒரு கட்சி 15 நாட்களுக்குள் எந்த பத்திரங்களையும் பணமாக்கவில்லை என்றால், எஸ்பிஐ இவற்றை பிரதமரின் நிவாரண நிதியில் வைக்கிறது. ரூ. 6534.78 கோடி மதிப்புள்ள 12,924 தேர்தல் பத்திரங்கள் 15 கட்டங்களாக மார்ச் 2018 முதல் ஜனவரி 2021 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தேர்தல் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் மட்டுமே மறைமுகமாக பணம் செலுத்தும் என்று கூறினார். ஆனால் அந்த அறிவிப்பின் அதிகாரப்பூர்வ அச்சு, னிநபர்கள், தனிநபர்களின் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத மற்றும் பிற அறக்கட்டளைகள் கூட தங்கள் விவரங்களை வெளியிடாமல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இது ஏன் எதிர்ப்பிற்கு ஆளானது?
இந்த திட்டத்தின் வாதம், மறைமுகமாக (anonymity) நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என்பது. 2017 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளை வெளியிடுவதிலிருந்து கட்சிகள் விலக்கு அளித்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கட்டாய பங்களிப்பு அறிக்கைகளில் இந்த விவரங்களை வெளியிட தேவையில்லை.
இதன் பொருள் எந்த தனிநபர், நிறுவனம் அல்லது அமைப்பு கட்சிக்கு நிதி உதவி அளித்தது என்றும் எவ்வளவு அளித்தது என்றும் மக்கள் அறிந்து கொள்ள முடியாது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கட்சிகள் ரூ .20,000 க்கு மேல் பங்களித்த அனைத்து நன்கொடையாளர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டியிருந்தது. இது தகவல் அறியும் உரிமையை மீறுகிறது. மேலும் அரசியல் வர்க்கத்தினரை கணக்கிட முடியாமல் ஆக்குகிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்றாலும் ஆளும் அரசு அதனை அறிந்து கொள்ள முடியும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கோருவதன் மூஅல்ம் இந்த தகவல்களை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நன்கொடைகளின் மூலத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பவர்காள் வரி செலுத்துவோர் மட்டுமே என்பதை இது குறிக்கிறது. இந்த பத்திரங்களை அச்சிடுதல், விற்பனை மற்றும் வாங்குதல் தொடர்பாக எஸ்.பி.ஐக்கு செலுத்தப்படும் கமிஷன் ஆகியவை வரிசெலுத்தும் நபர்களிடம் இருந்து பெறப்படுகிறது என்பதை ஏ.டி.ஆர். சமீபத்திய அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த பத்திரங்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளது?
நன்கொடையாளர்களின் தகவல்கள் அளிக்கப்பட வேண்டாம் என்று கூறப்பட்ட பிறகு இந்த பத்திரங்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் பாதி வருமானம் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்தவை என்று ஏ.டி.ஆர். கூறியுள்ளது, (2018 - 19 நிதி ஆண்டில்). பாஜக தான் இதில் மிகப் பெரிய பயனாளி.2017 - 18 மற்றும் 2018 - 19 காலங்களுக்கு இடையே பெறப்பட்ட 2,760.20 கோடி நன்கொடையில் ரூ. 1660.89 கோடி அல்லது 60% பங்களிப்பை பாஜகவே பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?
பணியாளர்கள், பொது குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவுக்கு 2017 மே மாதம் தேர்தல் ஆணையம் சமர்பித்த அறிக்கையில், மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்தது. நீதித்துறை அமைச்சருக்கு அதே மாதத்தில் எழுதிய கடிதம் ஒன்றில் தேர்தல் ஆணையம் இந்த திருத்தம் குறித்து மறுபரிசீலனை செய்யவும் மாற்றம் செய்யவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. புதிய விதிமுறையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்ட தேர்தல் ஆணையம், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட பங்களிப்பு அறிவிக்கப்படாத சூழ்நிலையில், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு அறிக்கையை ஆராயும்போது, அரசியல் கட்சி ஏதேனும் எடுத்துள்ளதா என்பதைக் கண்டறிய முடியாது என்று கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.