ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்த பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம் என பலவற்றை மேற்கொண்டு வருகிறார். இதனால் ட்விட்டரின் எதிர்காலம் குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ' ட்விட்டர் ஃபைல்ஸ்' என்று ஒன்று கூறப்படுகிறது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இது "தொந்தரவு என்றும், ட்விட்டரில் எதுவும் சரியாக இல்லை என்ற பரவலான பார்வையின் நிரூபணம்" என்றும் கூறினார்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்படி இணையத்தில் ஆட்சேபத்திற்கு உரையாடல் இருந்தால் மேலும் மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.
'ட்விட்டர் ஃபைல்ஸ் 2.0'
ட்விட்டர் ஃபைல்ஸ் 2.0 ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்கால் அறிவிக்கப்பட்டது.
2020-ம் ஆண்டில் ஜோ பைடனின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் போது, அவரது மகன் மற்றும் அவரின் சந்தேகத்திற்குரிய வணிக பரிவர்த்தனைகள் பற்றி தீவிரமாக தணிக்கை செய்ததாக கூறப்படுகிறது.
ட்விட்டர் ஃபைல்ஸ் 2.0, முன்னாள் பத்திரிகையாளர் பாரி வெயிஸ்ஸால் வெளியிடப்பட்டது. எலான் மஸ்க்கிற்கு
நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு முன் தளத்தின் ஊழியர்கள், பயனர்கள் அல்லது பதிவுகளின் மீது விரிவான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்கள் பழமைவாத அல்லது வலதுசாரிகளின் விகிதாசாரத்தை குறிவைத்து பயன்படுத்துகின்றனர். இந்த கட்டுப்பாடு மற்றும் பணியாளர்கள் "விசிபிலிட்டி ஃபில்டரிங்' (விஎஃப்) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
VF என்பது ஒரு குறிப்பிட்ட பயனர்/பதிவைப் பற்றிய தேடல்களைத் தடுப்பது, ட்வீட்டின் கண்டுபிடிப்புத் திறனைக் கட்டுப்படுத்துவது மற்றும் சில பயனர்கள் ஹேஷ்டேக் தேடல்களில் பிரபலமடைவதிலிருந்து அல்லது தோன்றுவதைத் தடுப்பதை உள்ளடக்கியது.
இந்தியாவில் பின்னடைவு
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், "சிலர் மேடையில் நடக்கும் உரையாடல்களை திரித்து தவறான தகவல்களை ஆயுதமாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்தத் திருத்தப்பட்ட ஐடி விதிகளை இந்தியா சரியாக உருவாக்கியது என்று கூறினார். திருத்தப்பட்ட விதிகளின் கீழ், சமூக ஊடகத் தளங்களில் எடுக்கப்படும் உள்ளடக்க மதிப்பீட்டின் முடிவுகளை மேற்பார்வையிடவும் ரத்துசெய்யவும் அதிகாரங்களைக் கொண்ட ஒரு குழுவை அரசாங்கம் நியமிக்கும். இது போன்ற கமிட்டிகள் அமைப்பது புகார்களை வேகமாக கண்காணிக்க உதவும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.